Wednesday, December 29, 2010

சீனாவில் கூகிள் இல்லாமல் போனது ஏன்? - விக்கிலீக்ஸ் கசியவிடும் புது தகவல்!

AddThis 
Social Bookmark Button
கூகிள் தேடு பொறி தளம் சீனாவில் இயங்கமுடியாமல் போனதுக்கு, சீன அரசு அதிகாரிகளின் அருவருக்கும் செயற்பாடே காரணம் என
விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 22ம் திகதி சீனாவிலிருந்து தனது தேடுபொறி சேவையை முழுமையாக நிறுத்தியிருந்தது கூகிள்! இதற்கு சீன அரசின் அழுத்தமும், அந்நாட்டு அதிதிறன் தொழில்நுட்பவியலாளர்களினால் கூகிள் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஹேக்கிங் நடவடிக்கையுமே காரணம் என அமெரிக்க இராஜதந்திரிகள் வாஷிங்டனின் இராஜாங்க திணைக்களத்திற்கு  இரகசிய தகவல் அளித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும்,
சீன அதிபர் ஹு ஜுண்டாவோ, மற்றும் முதன்மை அரசியல் தலைவர் வென் ஜியாபோ ஆகியோருக்கு எதிரான கருத்துக்கள் கூகிள் மூலம் மக்களிடம் இலகுவாக பரம்பலடைந்ததே அவர்களை அச்சமடைய வைத்ததாகவும், கூகிளை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என அவர்கள் கருதியமைக்கு காரணமும் இதுவே!
அமெரிக்காவை மையமாக கொண்ட மாபெரும் தேடுபொறி தளம் ஒன்று சீனாவில் இயங்குவது ஆரோக்கியமானதல்ல என்பதால் கூகிளின் மின்னஞ்சல்களில் இருந்து பிரதான கோர்ட் குறியீடுகள் வரை, சீன ஹேக்கிங் மன்னர்களால் சிதைக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் சீனாவுடனான தொடர்பிலிருந்து கூகிள் தன்னை விலக்கிக்கொண்டது

என அத்தகவல்கள் தெரிவிக்கின்ற

Tuesday, December 28, 2010

அரசியல் கோமாளியை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டுமாம்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகைகளின் முதலீடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு பிரதமர் சம்மதித்துள்ளார்.

சிந்திக்க: சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளி இவர் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பண்ணும் கோமாளித்தனம் இருகிறதே தாங்க முடியலப்பா... இந்த பார்பணிய கும்பல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் போடும் வேஷம் இருகிறதே மிகவும் கொடுமையானது. இவர் ஜனதா தளம் என்கிற முகமூடியை போட்டுகொண்டு செயல்படும் ஒரு ஆதிக்க வெறிபிடித்த ஹிந்த்துதுவா ஆதரவாளர் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அரசு வக்கீலாக மாறி எந்த வைக்கோலை தின்ன போறாரோ தெரியல.

Thanks : சிந்திக்கவும் 

ஊடகங்கள் இஸ்ரேல் தொடர்பான ரகசியங்களை வெளியிட மறுக்கின்றன - ஜூலியன்

மனாமா : இஸ்ரேல் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட தயங்குகின்றன என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜே அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜூலியன் அஸென்ஜேவின் பேட்டி சுருக்கம்:

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இஸ்ரேல் தொடர்பான 3700 ஆவணங்கள் உள்ளன. அதில் 2700 ஆவணங்களும் இஸ்ரேல் குறித்தவையாகும். கார்டியன், எல்பாய்ஸ், லெ மோண்டே ஆகிய பத்திரிகைகள் இஸ்ரேல் தொடர்பான 2 சதவீத ஆவணங்களை மட்டுமே பிரசுரித்தன. ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கும் இஸ்ரேலுடனான நெருங்கிய உறவுதான் இதற்கு காரணம்.

நியூயார்க் டைம்ஸ் கூட இஸ்ரேல் தொடர்பான செய்திகளை கூடுதலாக வெளியிடவில்லை. அமெரிக்காவில் யூத சமூகத்தின் செல்வாக்குதான் இதற்கு காரணம். ஆனாலும், விக்கிலீக்ஸ் இஸ்ரேல் தொடர்பான மிக ரகசியமான ஆவணங்களை வெளியிடும். அடுத்த ஆறுமாதத்திற்குள் கூடுதலான ஆவணங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். மத்தியஸ்தர் மூலமாக இஸ்ரேல் எங்களை தொடர்புக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா, சுவீடன், சி.ஐ.ஏ போல மொஸாதும் எங்களை விடாமல் பின்தொடர்கிறது என்பது உறுதியாகும். முன்னர் எங்களுக்கு அமெரிக்காவிலிருந்து அதிகாரப்பூர்வமாக நிதி கிடைத்துவந்தது. ஆனால், ஈராக்கில் அமெரிக்காவின் கொடூரத்தை விளக்கும் வீடியோவை வெளியிட்டதன் வாயிலாக அந்த நிதி முடக்கப்பட்டது.

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட 3700 ஆவணங்களை நாங்கள் வெளியிடுவோம். இதுத் தொடர்பான கூடுதல் விபரங்கள் இன்னும் 6 மாதத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்கும். 2006 ஆம் ஆண்டில் லெபனானுக்கு எதிரான யுத்தம், ஹமாஸ் கமாண்டர் மப்ஹூஹின் கொலை ஆகியன தொடர்பான சில விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளன. இவ்வாறு ஜூலியன் அஸென்ஜே பேட்டியளித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த போர்ச் சித்திரத்தை ஈராக் ஆவணங்கள் கொடுக்கின்றன.
By Jerry White 

அக்டோபர் 22ம் திகதி, தவறுகளை வெளிப்படுத்தும் வலைத்தள அமைப்பாக விக்கிலீக்ஸ் கிட்டத்தட்ட 400,000 அமெரிக்க இராணுவ உள்ளறிக்கைகளை வெளியிட்டது. இவை ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி கண்டனத்திற்கு ஆளாகின்ற சான்றுகளை அளிக்கின்றன.

வரலாற்றிலேயே இராணுவ இரகசியத் தகவல்களின் மிகப் பெரிய கசிவானஈராக்கியப் போர்க் குறிப்புக்கள்உள்ளடக்கியுள்ள SIGACT அல்லது முக்கியமான நடவடிக்கை அறிக்கைகள் அமெரிக்க இராணுவத்தினர் ஜனவரி 2004 ல் இருந்து டிசம்பர் 2009 வரை பதிவு செய்தவற்றைக் கொண்டுள்ளன. இவை ஈராக்கியப் போர்க் களத்தில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் பார்த்து, கேட்ட விரிவான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன, அமெரிக்க அரசாங்கம் மட்டுமே இதுவரை அறிந்திருந்த இரகசிய வரலாறு பற்றி உண்மையான பார்வை இப்பொழுது முதல் முதலாகக் கிடைக்கிறது.என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆவணங்களில் வெளிப்பட்டுள்ள முக்கிய தகவல்களில் இதுவரை வெளியிடப்படாத 15,000 சாதாரணக் குடிமக்கள் இறப்புக்கள் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் இராணுவச் சோதனை சாவடிகளில் குறைந்தது 834 பேர்களில் 30 குழந்தைகள் உட்பட 681 பொதுமக்களை கொன்றதும் அடங்கும். இந்த ஆவணங்கள் ஈராக்கிய கையாட்களின் படையும் பொலிசும் கைதிகளைச் சித்திரவதை செய்ததில் அமெரிக்க உடந்தை பற்றியும் விவரிக்கின்றன. பார்க்கவும்: “The WikiLeaks documents and the rape of Iraq ”)


இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு மற்றும் முன்பு ஆப்கானியப் போர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஈராக்கிய பொதுமக்களை அமெரிக்க Apache ஹெலிகாப்டர் குழு 2007ல் கொன்றதன் ஒளிப்பதிவு காட்சி ஆகியவற்றை வெளியிட்டதற்கும் விக்கிலீக்கஸ் மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயும் அமெரிக்க இராணுவம், ஒபாமா நிர்வாகம் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் தலைமையிலான செய்தி ஊடகத்தால் கடும் தாக்குதலுக்கு உட்பட்டனர். வலதுசாரிச் செய்தியாளர் Jonah Goldberg, சிக்காகோ ட்ரிப்யூனில் கடந்த வார இறுதியில் அசாங்கே இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறார்என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளம் விக்கிலீக்ஸின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஈராக்கியப் போர்க் குறிப்புக்கள் வெளியீடு அவற்றிற்கு அமெரிக்க அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் விடையிறுப்பு பற்றி உரையாடியது.

ஒரு சுயாதீன ஐஸ்லாந்து செய்தியாளரான ஹ்ரப்ன்சன் முதலில் விக்கிலீக்ஸுடன் 2009ல் தொடர்பு கொண்டிருந்தார். அப்பொழுது வலைத் தளம் பல குற்றத்திற்குட்படக்கூடிய ஆவணங்களை வெளியிட்டது. அவை நாட்டின் முக்கிய நிதிய அமைப்புக்களில் ஒன்றான Kaupthing Bank சரிவிற்கு வகைசெய்த நிகழ்வுகளைப் பற்றி இருந்தன.
விக்கிலீக்ஸில் சேர்ந்த பின்னர் ஹ்ர்ப்ன்சன் Apache ஹெலிகாப்டர் தாக்குதல் பற்றிய உண்மை அறியும் விசாரணையில் சேர்ந்தார். அத்தாக்குதல் பாக்தாத்தில் இரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களைக் கொன்றிருந்தது. வீடியோ வெளியிடப்படுவதற்கு முன்பு இன்னும் அதிக தகவல்களைச் சேகரிக்க நான் ஒரு புகைப்படக்காரருடன் பாக்தாத்திற்குச் சென்றிருந்தேன். சிறிய வாகனத்திற்கு என்ன நடந்தது என்று நாங்கள் கண்டுபிடிக்க முடிந்ததுடன், இரண்டு குழந்தைகள் இருந்த அந்த வாகனம் எவ்வாறு துண்டுகளாகச் சிதறியது மற்றும் அதில் தங்கள் தகப்பனாரை இழந்த அத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் பேட்டி காணமுடிந்தது. 


நாங்கள் அக்குழந்தைகளின் விதவை தாயையும் சந்தித்தோம். அந்த வெளியீட்டைப் பற்றிய ஒரு விசாரணைப் பணியாகும் அது.
புதிதாக ஈராக் போர் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றிக் கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: அவற்றின் முழு நிலையில் அவை ஈராக்கியர்கள் என்ன அனுபவித்தார்கள் என்று அமெரிக்க இராணுவக் கண்ணோட்டத்தில் இருந்து கிடைக்கும் முழுக்காட்சியாகும். இந்தச் செய்தித் தகவல்கள் இதுவரை மறைக்கப்பட்டு இருந்தன. தவறான செயல்கள் நடந்தது என்பதற்குக் குறிப்புக்கள் உள்ளன, ஒருவேளை அவை போர்க்குற்றமாகக் கூட இருக்கலாம். 


இந்த ஆவணங்கள் பொதுப் பரிசீலனைக்கு வந்திருப்பது பொது மக்களுக்கு தகவலைப் பற்றிய பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. மேலும் குற்றச்சாட்டுக்கள் இதையொட்டி விசாரிக்கப்படலாம். இதை உயர்கல்வியாளர்கள் தான் மீண்டும் பகுப்பாய்வதற்கு வருவர்.
மிக கண்டனத்திற்குரிய தகவல்களில் ஒன்று எப்படி அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிய இராணுவம் மற்றும் பொலிஸ் படையினர் ஈராக்கியர்களை சித்திரவதை செய்வதைக் குறுக்கிட்டு தடுக்கவில்லை என்பதாகும் என ஹ்ரப்ன்சன் கூறினார். அமெரிக்க சிப்பாய்கள் 2005ல் இருந்து 2009 வரை 1,300 பேருக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் கொடுத்துள்ளனர். இதில் அடி உதைகள், தீயினால் சுடுதல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல், இயற்கைக்கு மாறான பாலியல் சித்திரவதை, பாலியல் பலாத்காரம் மற்றும் காவலில் இருப்பவர்கள் கொலைசெய்யப்படுதல் ஆகியவை அடங்கும். அமெரிக்கத் துருப்புக்கள் கைதிகள் சித்திரவதை பற்றி விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஏனெனில் இந்த சம்பவங்கள் அமெரிக்கத் துருப்புக்களுடன் தொடர்பற்றவை.

ஹ்ரப்ன்சன் கூறினார்: கடந்த சில நாட்களாக பலர் விடுக்கும் அறிக்கைகளுடன் நான் உடன்படுகிறேன். இவற்றுள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஆணையாளர் மற்றும் பிற சர்வதேச அமைப்புக்களும் உள்ளன. இத்தகவல்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும், பொறுப்பானவர்கள் விடையிறுக்க வேண்டும். எவர் பொறுப்பு என்று சில குற்றச்சாட்டுக்கள் பற்றி முடிவிற்கு வருவது முன்கூட்டிய செயலாகும். ஆனால் இது கட்டளைச் சங்கிலியின் உயர்மட்டம் வரை செல்ல வேண்டும்.

விக்கிலீக்ஸ் தான் அம்பலப்படுத்தியவை அமெரிக்க அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களை அத்தகைய நடைமுறைகளை நிறுத்த அழுத்தும் கொடுக்கும் என்று நம்புவதாகக் கூறினார். அரசாங்கங்களைப் பொறுப்பாக்குவது என்பது வருங்காலத்தில் தவறுகளைத் தடுக்கும் விளைவுகளை கொடுக்கக் கூடும். அதுதான் பொதுக் கோட்பாடு, எந்த நாட்டிலும் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்க வழி. இரகசியம் என்பது ஊழலுக்கு காரணமாவதுடன், ஒருவேளை தவறுகளைச் செய்யவும் உதவும்என்று அவர் WSWS இடம் கூறினார்.

உண்மையில் இந்த வெளியீடுகளானது அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கண்டனம், அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல் என்பவற்றை தவிர வேறு எதையும் தூண்டவில்லை. பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெப் மோரெல் ஈராக்கியப் போர் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை கண்டித்து இவை பயங்கரவாத அமைப்புக்களுக்குஒரு நன்கொடை, “நம் துருப்புக்களின் உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்துகின்றதுஎன்றார். இக்கருத்துக்கள் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளாலும் எதிரொலிக்கப்பட்டன.

அமெரிக்கக் குற்றச்சாட்டுக்களுக்கான கசிவுகள் உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்துகின்றன என்பதற்கு ஹ்ர்ப்ன்சன் விடையிறுத்தார். இக்கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. சில மாதங்கள் முன்பு ஆப்கானிய போர் நாட்குறிப்புக்கள் வெளியிடப்பட்டபோது இதேபோன்ற கூச்சல்தான் எழுப்பப்பட்டது. இது பென்டகனிடம் இருந்து வருகிறது என்பதைக் கூறத்தேவையில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிலுள்ள செய்தி ஊடகம் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் ஆகஸ்ட் 16 அன்று செனட்டில் விடுத்த அறிக்கைகளைப் பற்றி அறிந்தது. அப்பொழுது அவர் ஆப்கானிய நாட்குறிப்புக்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்புக்கள் எதையும் சமரசத்திற்கு உட்படுத்திவிடாது என்பதை ஒப்புக் கொண்டார். அப்படி இருந்தும் அவர்கள் இத்தகைய கூற்றுக்களைத் தெரிவிக்கின்றனர், ஆனால் ஓரிரு உதாரணங்கள் கூட அவற்றை நிரூபிக்கக் கொடுக்கவில்லை.

அமெரிக்க செய்தி ஊடகத்தின் விடையிறுப்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, ஹ்ர்ப்ன்சன் கூறினார்: எனக்குச் சற்று வியப்புத்தான். அமெரிக்காவில் செய்தி ஊடகம் தகவல் அளிக்கும் முறை பெரும்பாலான மேலை நாடுகளிலிருந்து வேறுபட்டுள்ளது. உண்மை நிகழ்வைக் கூறுவது விமர்சனங்களை கொண்டுவருகிறது. அமெரிக்காவில் எங்கள் செய்தி ஊடகப் பங்காளியான New York Times இடம் கூட நாங்கள் அதைத்தான் பார்த்தோம்.


டைம்ஸ் தகவல் கொடுக்கும் முறை ஆவணங்கள் பற்றித் தெரிய வாய்ப்புள்ள மற்றச் செய்தி ஊடகப் பங்காளிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபாடானது. செய்தித்தாட்களின் முதல் பக்கத்தைப் பார்க்கும் எவரும் இதை ஒப்பிட்டுக்காணலாம்.
இந்த வேறுபாடு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு ஹ்ரப்ன்சன் கூறினார்: இதைப் பற்றி நான் ஊகம் தான் செய்யமுடியும். ஏனெனில் அமெரிக்க செய்தி ஊடகச் சூழ்நிலை பற்றி எனக்குத் தெரியாது. முக்கிய பிரச்சினைகள் அம்பலப்படுத்தப்படுவது பற்றிய நிலைப்பாட்டில் அரசாங்கத்தின் எதிர்ப்பு மற்றும் முக்கிய செய்தி ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் இது தொடர்பு உடையதா என்று ஒருவர் வியப்படையவேண்டும்.

ஹ்ர்ப்ன்சன் தான் சமீபத்தில் முன்னாள் இராணுவப் பகுப்பாய்வாளர் டானியல் எல்ஸ்பேர்க்கைச் சந்தித்ததாகக் கூறினார். அவர் 1971ல் பென்டகன் ஆவணங்களை (Pentagon Papers) வெளியிட்டார். அந்த மிக இரகசிய ஆய்வு தொடர்ந்த அமெரிக்க நிர்வாகங்கள் வியட்நாம் போர் தொடங்குதல், விரிவாக்கப்படுதல் பற்றி முறையாகக் கூறிய பொய்களை அம்பலப்படுத்தியது.
லண்டனில் நடைபெற்ற எங்கள் செய்தியாளர் கூட்டத்திற்கு அவர் வந்தபோது நான் டேனியல் எல்ஸ்பேர்க்கைப் பார்த்தேன். 1970 களைப் பற்றியும் நியூயோர்க் டைம்ஸ் இன்னும் மற்ற செய்தித் தாள்கள் எப்படி அச்சமின்றி அப்பொழுதிருந்த நிக்சன் நிர்வாகத்தை எதிர்த்து நின்றன என்று பார்க்கும்போது, மக்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே ஒரு வலுவான நட்பு இருந்தது. இப்பொழுது இது இல்லை, 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தரத்தில் இல்லை. 


செய்தி ஊடகம், இராணுவத் தொழில்துறைக்கு மிக நெருக்கமாக உள்ளது. பொது மக்களின் மாறும் மன உணர்வை அவர்கள் பின்பற்றுவதில்லை, மக்களோ பெருகிய முறையில் போர்களை எதிர்க்கின்றனர்.
உண்மையில் டைம்ஸ் இராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளின் வெட்கமற்ற கருவியாகத்தான் அசாங்கேயைத் தூற்றுவதுடன் அமெரிக்கப் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்சை நடத்தும் முறை ஆகியவற்றில் அதனை ஒரு பகுதி குற்றமுள்ள அமைப்பாகத்தான் நடத்துகின்றன.
அக்டோபர் 23 அன்று லண்டனில் விக்கிலீக்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் எல்ஸ்பேர்க் விக்கிலீக்ஸின் நிறுவனர் மூன்று கண்டங்களில் மேலை உளவுத்துறைப் பிரிவினரால் பின்தொடரப்படுகிறார்என்றார். ஒபாமா நிர்வாகம் அசாங்கே மீது குற்ற விசாரணை நடத்துவதைத் தானே ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சனால் நடத்தப்பட்டதுடன் ஒப்பிட்டார். குடியரசுக் கட்சி தலைவர் எல்ஸ்பேர்க் தேசத் துரோகத்திற்காக 1917 உளவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முயன்றார்.


ஆப்கானிய, ஈராக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸுக்கு கொடுத்ததாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் உளவுத்துறை ஆய்வாளரான பிராட்லி மானிங் உட்பட தவறுகளை வெளிப்படுத்துவோரை நிர்வாகமானது குற்ற விசாரணைக்கு உட்படுத்துவது அமெரிக்காவை பிரிட்டனிலுள்ள உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்திற்கு ஒப்பான அடக்குமுறைச் சட்ட வடிவமைப்பில் இருத்துகிறது என்று எல்ஸ்பேர்க் கூறினார்.

சிறையில் அடைக்கப்பட்ட படையினரான மானிங், Apache தாக்குதல் ஒளிப்பதிவு (வீடியோ) கசிவு பற்றிக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து ஹ்ரப்ன்சன் கூறினார்: அதைத்தயாரிப்பதில் நான் நெருக்கமாக இருந்தேன். நான் கூறக்கூடியதெல்லாம் இத்தகையை தகவல்களை அவர் பெற்றார் என்றால் அவர் ஒரு பெரும் வீரர், கண்டிப்பாக விடுவிக்கப்பட வேண்டும். நாங்கள் அவருடைய பாதுகாப்பிற்கு கணிசமாக உதவியுள்ளோம்.
விக்கிலீக்ஸ் வலைத் தள தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, “இல்லை, நாங்கள் இப்பொழுது மின்னணுமுறைத் தாக்குதல்களை எதிர்கொள்ளவில்லை. ஆனால் அனைத்துவித தடைகளையும் எதிர்கொள்ளக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.அமெரிக்க அரசாங்கம் பொது நன்கொடைகளை சேகரிப்பதற்கு விக்கிலீக்ஸால் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களை அச்சறுத்தியுள்ளது. அவ்வாறான நன்கொடைகளைத்தான் நிறுவனம் நம்பியுள்ளது.
கடந்தமாதம் விக்கிலீக்ஸ் அது நிதி பெறுவது தடுக்கப்பட்டுள்ளது, அமெரிக்க அரசாங்கத்தால் நிதியப் போருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. 


விக்கிலீக்ஸிற்கு வரும் நன்கொடைகளை வசூலிக்கும் இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள Moneybookers என்னும் இணைய தள பணப் பறிமாற்றம் செய்யும் நிறுவனம் விக்கிலீக்ஸுக்கு தான் அதன் கணக்கை மூடிவிட்டதாக மின்னஞ்சல் அனுப்பியது. ஏனெனில் அது உத்தியோகபூர்வமாக அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹ்ரப்ன்சன் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் விக்கிலீக்ஸிற்கு தாக்குதல்களில் இருந்து ஆதரவு தரும் மற்ற நிறுவனங்களுக்கும் நன்றி செலுத்தினார். நாங்கள் ஆதரவை வரவேற்கிறோம். அது வருவது நல்லதுதான்.என்றார்.
அமெரிக்கப் போர்கள் பற்றி இன்னும் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிடுமா என்று கேட்கப்பட்டதற்கு ஹ்ரப்ன்சன் தன்னுடைய அமைப்பு சரிபார்த்தலுக்கு இன்னும் ஆயிரக்கணக்கான ஆப்கானியப் போர் நாட்குறிப்புக்களை வைத்துள்ளது என்றார். பிற தகவல்கள் வந்த பின் இந்த ஆவணங்களையும் வெளியிடுவோம்.



 நன்றி World Socialist Web Site

இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.


சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது .  அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என  பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.

கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.



காஸா இன்று உலகத் தொடர்புகள், உதவிகள் ஏதுமற்ற நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றது.

உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள், தண்ணீர், மின்சாரம் போன்றஅடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அவர்கள் இன்று வாழ்வோடும், சாவோடும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

எந்த நாட்டின் உதவிகளோ, ஒத்தாசைகளோ காஸாவிற்குள் நுழையாமல் இஸ்ரேலிய கொடுங்கோலர்களினால் தடுக்கப்பட்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு திறந்த வெளி சிறையில் சர்வதேச சட்டங்கள் (?) அனைத்தையும் கேள்விக் குறியாக்கி விட்டு காஸா மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.


இஸ்ரேலின் இந்த மிருகத்தனமான அடக்குமுறையை தகர்க்க எழுந்து வந்த போராட்டமே, இந்த துருக்கியின் FREEDOM FLOTILLA மனித நேய நடவடிக்கை.

பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, துருக்கியிலிருந்து இந்தப் போராட்டப் பயணம் ஆரம்பமானது. காஸா மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களைத்தாக்கி அதில் பயணம் செய்த 42 நாடுகளின் 700 மனித நேய நடவடிக்கையாளர்களைில் 20 பேரைக் கொன்றிருக்கிறது இஸ்ரேலிய இராணுவம்.


இந்தச் சம்பவம் இஸரேலைப் பொறுத்த வரை,  இரத்தகறைப்படிந்த அதன் காட்டுமிராண்டித்தனமான  வரலாற்றில்  மற்றுமொரு பக்கம் மாத்திரமே!.
பறிக்கப்பட்ட பலஸ்தீன் வரலாற்றில் இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை  என்ன எண்ணிக்கையில் அடக்கத்தான் முடியுமா?

இத்தகைய மனிதாபினத்திற்கு எதிரான இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தின் கொடுமையை விட கொடிய மோசமான ஒன்றை, மறைக்கப்பட்ட ஒன்றை  நாங்கள் மறந்து போயிருக்கின்றோம்.

அதுதான் பலஸ்தீனர்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை அங்கிகரித்து மௌனிகளாக இருக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆட்சியாளர்களின்  அமெரிக்க நலன் சார்ந்த சுயநல அரசியல்.

அந்த அரசியல்தான் பலஸ்தீனை,  முதல் கிப்லாவை சுமந்திருக்கும் அந்த புண்ணிய பூமியை இஸ்ரேலுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மூன்று முக்கிய கண்ணிய மிக்க தளங்களாக குறிக்கப்படுபவை  பைத்தல் முகத்திஸ்,  கஃபதுல்லாஹ், மதீனா முனவ்வரா என்ற அல்லாஹ்வின் இல்லங்கள்.

இவற்றில் ஒன்றைான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலுக்கு பறி கொடுத்து விட்டு  மற்றைய இரண்டு முக்கிய மஸ்ஜித்களான மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வையும், மதினாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியையும் மட்டும் நிர்வகிக்கும் பாதுகாவலர்களாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அரபு ஆட்சியாளர்களின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த தந்திர அரசியலை  இதிலிருந்து தெளிவாக புரிய முடிகிறது.

பைத்துல் முகத்தஸை இஸரேலுக்கு விட்டுக்கொடுத்து விட்டு, ஏனைய இரண்டு மஸ்ஜித்களை மட்டும் பாதுகாப்போராய் (காதிமுல் ஹரமைன்) தம்மை பிரகடனப்படுத்திக்கொண்டிருப்பது அமெரிக்காவுடனான நட்பை பாதுகாக்கும் அரசியல் தந்திரோபாயமாகும்.

இந்த அரபு ஆட்சியாளர்கள்,  நபி(ஸல்) அவர்கள் மூன்று பள்ளிவாசல்களை முக்கிய பள்ளிவாசல்களாக குறிப்பிடும் போது ஒன்றை மட்டும் ஏன் மூடி மறைக்க வேண்டும்.  பைத்துல் மகத்திஸை பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

இதுதான் மத்திய கிழக்கின்  மன்னாதி மன்னர்களின் அரசியல் மந்திரம்.

பைத்துல் மகத்திஸின் பாதுகாவலர்களாக இவர்கள் தம்மை பிரகடப்படுத்திக் கொண்டால் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு கடமையாகிறது.

அந்தக் கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது? பைத்துல் முகத்தஸை எப்படி பாதுகாப்பது?  அதனை பாதுகாப்பதற்கு முதலில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டுமே.

அதுவும் இஸ்ரேலோடு எப்படி போராடுவது?
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையல்லவா?   அந்த செல்லப்பிள்ளையை சீண்டிப்பார்க்க அமெரிக்கா விடுமா?

இஸ்ரேலோடு போராடப் போனால் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள வேண்டிவரும்.   அமெரிக்கா என்ற ஒட்சிசனை உள்வாங்காமல் அரபு ஆட்சியாளர்களால் உயிர் வாழ முடியாது.

எனவே முக்கிய மஸ்ஜித்கள் மூன்றில் இரண்டை தம்வசம் வைத்துக் கொண்டு ஒன்றை இஸ்ரேலுக்கு கொடுத்திருக்கின்றார்கள். இரண்டின் பாதுகாவலர்களாக “இவர்களும்” , மற்றைய ஒன்றின் பாதுகாவலான “அவர்களும்”  இருக்கின்றனர்.

இதுவே இவர்களை இஸ்ரேலின் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கச் செய்கிறது. அட்டகாசங்களை அடக்கி வாசிக்கச் செய்கிறது.

இன்று இந்த அரபு ஆட்சியாளர்கள் அல்குர்ஆனின் கட்டளைக்கு நேர் மாறாக தனது பாதுகாவலனாக அமெரிக்காவை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இவர்கள் இஸ்லாத்தை மாற்ற முயற்சி செய்கின்றார்கள்.

இஸரேலும், அரபு நாடுகளும் தமது அரசியல் பாதுகாவலனாக அமெரிக்காவையே ஏற்றுக்கொண்டிருக்கின்றன.  இந்த  ரீதியில் அமெரிக்காவிற்கு இஸ்ரேலும் அரபு நாடுகளும் ஒரே சமம்தான்.
மூவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாளர்கள்,நண்பர்கள் தான்.

Monday, December 27, 2010

பாலஸ்தீனும்-ஊடகங்களின் பொய் முகமும்

ஆக்ரமிப்பும் திருப்பித் தாக்குதலும் -
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண இயலும். முன்பதிவு செய்பவர் என்ன விஷயத்தைக் குறித்துப் பேசப் போகிறார் என்று கேட்பது சகஜம். மத்திய ஆசியாவைக் குறித்து பேச வேண்டியதெனில், அவர் கொடுப்பது “மத்திய ஆசியாவின் தற்போதைய பிரச்சினைகள்” என்ற தலைப்பாகும். காரணம், எச்சமயத்திலும் அங்கு பிரச்னைகள் இல்லாமல் இருக்காது என்று சோம்ஸ்கி கூறுகிறார். மேலும், “ஏகாதிபத்திய சக்திகளின், முக்கியமாக அமெரிக்காவின் நீண்டகாலப் பொருளாதார நிலைநிற்பிற்கு மத்திய ஆசியாவில் எப்பொழுதும் பிரச்சினைகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும்”(Powers and Prospects By Pro.Chomski Page 136-144) என்றும் கூறுகிறார். இது எண்ணெய் நாடுகளுக்கும், ஆயுத விற்பனைக்கும் கூடுதல் நெருக்கமுள்ள ஒரு தந்திரமாகும்.
மத்திய ஆசியாவில் 2000 செப் 28 –ல் ஆரம்பித்த பிரச்னைகளை ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டன என்பதை இனி ஒவ்வொன்றாக காணலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குண்டான தனித்துவமிக்க அர்த்தங்கள் உண்டு. ஆக்ரமிப்பு, தற்காப்பு என்ற இரு சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரான அர்த்தங்களைத் தரும். ஒன்று அநியாயமாக மற்றவர்களுக்கு உரியதைப் பறித்துக்கொள்வதையும், மற்றொன்று அவ்வாறு ஆக்ரமிக்க வருபவர்களை நியாயமாக எதிர்த்துத் தாக்குவதையும் குறிக்கும்.
மேற்குலக பத்திரிக்கைகளையும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களையும் கவனிப்பவர்களுக்கு, ஒரு தடவை கூடப் பாலஸ்தீனியர்களின் எதிர்தாக்குதலை “தற்காப்பு யுத்தம்” என்று கூற அவர்கள் தயாராகாதது நன்றாகத் தெரியும். அவர்களின் பார்வையில் இஸ்ரேலியர்களின் யுத்தம் மட்டுமே எப்பொழுதும் தற்காப்பு/எதிர் தாக்குதலாக இருக்கும். பாலஸ்தீனியர்களை அக்கிரமக்காரர்கள் என்றும் இஸ்ரேலை நீதி/நியாயவான்களாகவும் சித்தரித்ததில் இந்த இரு சொற்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல. மேற்கத்திய ஊடகங்களிலும் அதில் வரும் செய்தியின் நம்பகத்தன்மையின் அளவினைக் குறித்தும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் அவைகளை அப்படியே வாந்தியெடுக்கும் இந்திய ஊடகங்களில் வரும் வார்த்தைப் பிரயோகங்களும் இதற்கே வழிவகுக்கின்றன.
மத்திய ஆசியாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு சமாதான நடவடிக்கையின் மூலம் தான் என்பதே இப்போதைய நிலை. ஆனால் சமாதான நடவடிக்கை என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது அமெரிக்க அரசாங்கமாகும். அதன்படி 1967 – ல் இஸ்ரேல் ஆக்ரமித்த பாலஸ்தீன் பகுதியை பாலஸ்தீனியர்களுக்கு விட்டுக் கொடுப்பது என்பது சமாதான நடவடிக்கையின் ஓர் அங்கமன்று. அப்படியொரு கோரிக்கை வைப்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தப்படி சமாதான நடவடிக்கையைத் தகர்க்கும் காரியமாகும்.
பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை இஸ்ரேல் என்பது ஓர் ஆக்ரமிப்பு நாடாகும். காஸா (Gaza) மற்றும் மேற்குக்கரைப் (West Bank) பகுதிகளில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேல் இராணுவ வீரனும் ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவனே. அவனை எதிர்கொள்வதென்பது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதன் ஓர் அங்கமாகத் தான் பாலஸ்தீனியர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மேற்குலகிற்கு இவர்கள் பாதுகாப்பு(?) இராணுவமாகும். இஸ்ரேலியர்களை ஆக்ரமிப்பாளர்களாக, ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவர்களாக சித்தரிக்க ஒருமுறை கூட இந்திய பத்திரிக்கை நிருபர்களுக்குத் துணிவில்லை. (உதா.Reports from The Hindu daily 4,6,9,10,14 Oct 2000 By Sridhar Krishna Swamy, Kesava Menon ). மேலும் பாலஸ்தீனியர்கள் ஒரு போதும் சுதந்திரப் போராளிகளாகவும் சித்தரிக்கப்பட்டதில்லை.
இஸ்ரேல் சட்டரீதியாக ஒரு நாடானாலும் இல்லையெனினும் காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் எதிர் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்கள் சுதந்திரப் போராளிகள் என்பதில் ஐயமில்லை. இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை ஒருதலைபட்சமாக குற்றப்படுத்துதலை விட்டு ஒதுங்கி நின்றதை விட்டால் மற்றெல்லா காரியங்களிலும் மேற்கத்திய ரீதியை அப்படியே காப்பியடிக்கவே செய்தனர்.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்கள் எண்ணிலடங்கா. அது போன்ற ஒரு மோதல் செப். 28 2000 அன்று மேற்குக்கரை மற்றும் காஸா இரு பகுதிகளிலும் ஆரம்பித்தது. இம்முறை இஸ்ரேலிய இராணுவமும் பலஸ்தீனியர்களும் நேரடியாக மோதினர். பல முறை குடியேற்ற யூதர்களும் இதில் சேர்ந்து கொண்டனர். அமெரிக்காவின் முக்கியத் தொலைக்காட்சிகளில் மூன்று – ABC யின் World New Tonight, NBC –யின் Nightly News, CBS –ன் Evening News – இச்சம்பவங்களைப் பற்றிப் பதிவறிக்கை சமர்ப்பித்தனர். 2000 செப். 28 க்கும் நவ – 2 க்கும் இடையில் 99 அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 4 –ல் மட்டுமே மேற்குக்கரையும் காஸாவும் இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகள் என நேரடியாகக் கூறினர். இதன் காரணம் வெட்டவெளிச்சமானது. “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்”(Palestinian Violence) என்ற வார்த்தை பிரயோகம் இவ்வறிக்கை முழுவதும் பரவிக் கிடந்தது.
மேற்குக்கரை மற்றும் காஸா 1948 க்குப் பின் இஸ்ரேல் ஆக்ரமித்த இடங்களாகும். அதாவது இந்த இரண்டு பிரதேசங்களில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேலிய சிப்பாயும் மற்றவர்களைப் பொறுத்தவரை அன்னிய ஆக்ரமிப்பாளனாவான். ஆக்ரமிக்கும் நாட்டினை ஆயுதம் உபயோகித்து எதிர்ப்பது உலக யுத்த சட்டப்படி நியாயமானதாகும். யுத்தத்தின் மூலம் ஆக்ரமித்த இடத்தில் வெற்றி பெற்ற நாடு அவர்களின் மக்களை குடியிருத்துவதையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கிறது. மேற்குக்கரையிலும் காஸாவிலும் உள்ள யூதக் குடியேற்றக்காரர்கள் இச்சட்டப்படி குற்றவாளிகளாவர். இந்த விஷயம் ஒன்றும் வெளிவராதிருப்பதற்கும், அவை பூதாகாரமாக்கப்படாதிருப்பதற்கும் தங்களது சொந்த இடத்திற்காக ஆயுதமெடுத்துப் போராடும் பாலஸ்தீனியர்களை, “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்” என்ற வார்த்தைக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும், மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் இஸ்ரேல் அநியாயமாக பிடித்தெடுத்த பகுதிகள் எனக் கூறாதிருப்பதும் அவசியமானதல்லவா?
இதே முறையில் 1990-91 –ல் இராக் குவைத்தை ஆக்ரமித்தபோது இதே தொலைக்காட்சி ஊடகங்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டது என்பதை சற்று ஆராய்ந்தால் இவர்களின் வஞ்சக ஏகாதிபத்திய முகம் கோரமாக வெளிப்படுவதைக் காணலாம். ABC-ல் பீட்டர் ஜென்னிங்ஸ் சமர்ப்பித்த அறிக்கைகளில் “இராக் ஆக்ரமித்த குவைத் பகுதி” (Iraqi – Occupied Kuwait) என்றிருந்தது. ஒரு குவைத் சிப்பாயிடம் அவரின் கேள்வி எவ்வாறு இருந்தது என்பதை கவனியுங்கள்: “இராக் ஆக்ரமிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறித்து எங்களிடம் கூறுங்கள்” (ABC, World News Tonight, 6 Sept 1990). CBS –ல் டான் ராதரின் ரிப்போர்ட் குவைத்தை ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசமாக குறிப்பிட்டது(CBS, Evening News 11 Sept 1990). குவைத்தின் பாகங்களை சில மாதங்கள் ஆக்ரமித்திருந்த ஈராக்கை இப்படி விமர்சிப்பதற்குத் தயங்காத அமெரிக்க ஊடகங்களுக்கு, 40 வருடங்களாக காஸாவையும் வெஸ்ட்பாங்கையும் ஆக்ரமித்து வைத்துக்கொண்டிருப்பது மட்டுமன்றி, தனது மக்களை அங்கு குடியேற்றி வைத்திருக்கும் இஸ்ரேலை ஒரு தடவைக் கூட ஆக்ரமிப்பு நாடாக எடுத்துக் கூற மனமும், நடுநிலை-நீதிமனப்பாங்கும் இல்லாதிருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.
மேற்குக்கரையில் ஒரு இஸ்ரேலிய இராணுவ முகாமை காலி செய்ய வேண்டிய நிலை வந்த போது அதைக் குறித்து CBS இவ்வாறு கூறியது: “பாலஸ்தீனியர்களின் வன்முறைகளைப் பொறுக்கமுடியாமல் இஸ்ரேல் இடம் பெயர்ந்தது” (CBS Evening News 4 Oct 2000, 7 Oct 2000, 8 Oct 2000). இவ்விடங்களை கைப்பற்றிய(ஆக்ரமித்த) இடங்களாக சித்தரிக்காதது மட்டுமல்ல, இஸ்ரேலின் பாகங்களாக இவற்றைக் கூறவும் இவர்கள் தயங்கவில்லை. மேற்குக்கரையிலுள்ள தனது சட்டவிரோத இராணுவ முகாமை இஸ்ரேல் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்த போது அதனை NBC Nightly News –ல் டோம்புரோக்கோ, “எக்காலமும் இஸ்ரேலில் கூடிக்கொண்டேயிருக்கும் வன்முறைகள்” என்று எடுத்துக் கூறினார்(Tom Brokaw, NBC Nightly News, 2 Oct 2000). இங்கு பலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியை இஸ்ரேலின் பகுதியாக சித்தரித்திருப்பதை கவனியுங்கள். ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு நாட்டின் பகுதியாக சித்தரிக்கும் அநியாயம் இது போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.
Courtesy : Falastheenum Paschatya Madhyamangalum(Malayalam) (Political Science) By N.M.Hussain
தொகுப்பாசிரியர்: அபூசுமையா

விக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்?

"the vast majority (of Indian muslims) remain committed to the Indian state" --- INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST, 2(c), wikileaks cablegate.

உலகை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் விக்கிலீக்ஸ் மூலமாக கசிந்த, இந்திய முஸ்லிம்கள் குறித்த ஆவணத்தில் இருக்கும் ஒரு கருத்தை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். 

இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் (David C.Mulford) கருத்துக்களை கொண்ட அந்த ஆவணத்தில் இருந்து சில தகவல்களை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். அந்த ஆவணத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.

------------------------------
Friday, 02 December 2005, 12:54
C O N F I D E N T I A L SECTION 01 OF 06 NEW DELHI 009127
SUBJECT: INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST
RECRUITMENT OF JUVENILES (C-CT5-00623)
REF: STATE 211901
NEW DELHI 00009127 001.2 OF 006

இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று மற்றும் பயங்கரவாத ஆதரவின்மை:

2.(C). 1991ஆம் ஆண்டு இந்திய சென்சஸ் படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை பதினைந்து சதவிதத்திற்கும் சற்று குறைவாக உள்ளது. 1981-2001 இடையேயான காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகை 24% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மைனாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.

இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது அதனை விட மேலாகவோ முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பீகார் (12 மில்லியன்), மேற்கு வங்கம் (16 மில்லியன்), உத்தரபிரதேசம் (24 மில்லியன்) போன்றவை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மாநிலங்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (92%) சன்னிகள், ஏனையோர் ஷியாக்கள்.

இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 150 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு இந்தியா). மற்ற எந்த இந்திய குழுக்களையும் விட அதிக வறுமையில் வாடுபவர்களும் முஸ்லிம்கள் தான்.

சமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.

குறைந்த அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே,  இந்திய அரசியல் தங்களது துயரங்களுக்கு பதில் சொல்லாது என்றெண்ணி Pan-Islamic (உலக முஸ்லிம்களை ஒரே இஸ்லாமிய நாட்டின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கொள்கையை உடைய இயக்கங்கள்) மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த இயக்கங்கள் சில நேரங்களில் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றன.

இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் வளரும் பொருளாதாரம் போன்றவை முஸ்லிம் இளைஞர்களை இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற வைத்துள்ளது. இது, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதையும், அந்த இயக்கங்கள் செயல்படுவதையும் பெருமளவு குறைத்திருக்கின்றது.

3.(C). மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைய இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் மதச்சார்பற்ற அமைப்புகளிலேயே சேர்கின்றனர், ஆதரவளிக்கின்றனர். 

பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், பொதுவாக, முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளில் சேர்வது, அரசியல் சக்தியாக பா.ஜ.க உருவாகுவதை தடுக்கத்தான். 

இந்திய நாட்டிற்கு எதிராகவும், முஸ்லிமல்லாத இந்திய மக்களுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மிக குறைவே. காஷ்மீருக்கு வெளியே இந்த இயக்கங்களுக்கு செல்வாக்கோ, புகழோ இல்லை. 

7.(C). பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவை பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ பெற்றதில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் மிதவாத போக்கை கடைபிடிக்கின்றனர். 

பழமைவாத சன்னி அரசியல் இயக்கங்களான ஜமாத் இஸ்லாமி மற்றும் தியோபந்தி பிரிவு போன்றவை இஸ்லாமிய குறுகியவாதத்தை ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் சிலர் ஒசாமா பின் லேடனை admire செய்து தங்கள்  கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளின் தலைவர்கள் இது போன்ற தங்கள் பார்வைகளை பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. அதுபோல, பேச்சு  அளவில் தான் இவர்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இருக்கின்றதே தவிர, அதை தவிர்த்து  வேறுவிதமான ஆதரவை இவர்கள் பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாக தெரியவில்லை.  

அப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவ்வப்போது நடக்கும் மதக்கலவரங்கள் போன்றவை, சிறிய அளவிலான முஸ்லிம்களை வன்முறை என்னும் கோட்டையும் தாண்டி தீவிரவாதத்தின் பக்கம் அழைத்து சென்றிருக்கின்றன. 

இந்திய மதரசாக்கள்:

13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன்  பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. 

வட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.        
------------------------------

இந்தியாவில் பயங்கரவாதம் பல வகைகளில் இருக்கிறதென்றும் (இந்து, இஸ்லாமிய மற்றும் சீக்கிய), அவர்கள் அனைவரும் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்தாலும், இந்த ஆவணத்தில் நாம் பார்க்கபோவது இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்ப்பது பற்றிதான் என்று கூறி தொடங்கும் அந்த நீண்ட ஆவணம், 

  • காஷ்மீர், 
  • சிறுவர்களை பயங்கரவாதத்திற்கு சேர்ப்பது, 
  • பயங்கரவாத எண்ணங்களை கொண்ட அமைப்புகளின் பட்டியல்,
  • எதனால் சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர்?, 
  • தங்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கூறும் காரணங்கள்,
  • முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், 
 என்று பலவற்றை அலசுகின்றது.

முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும். 

விக்கிலீக்ஸ்சை விடுவோம்.....

எங்கள் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் அந்த மிகச் சில சகோதரர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது...

நாங்கள் முஸ்லிம்கள்...நாங்கள் இந்தியர்கள்...

அன்றும் சரி, இன்றும் சரி, (இன்ஷா அல்லாஹ்) என்றும் சரி, தொடர்ந்து எங்கள் பங்களிப்பை எங்கள் நாட்டிற்கு செய்து கொண்டிருப்போம். நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டே இருங்கள். உங்களை திருப்திபடுத்துவது எங்கள் வேலையில்லை. நல்ல செயல்களை செய்து இறைவனை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை. இறைவன் எங்கள் உள்ளங்களை நன்கு அறிவான்.

இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.      


One can read the entire document from here

My sincere thanks to:
1. ibnlive.com 

References:
1. WikiLeaks Cablegate: Indian Muslim population largely unattracted to extremism - ibnlive.com, reproduced from wikileaks.ch

Sunday, December 26, 2010

பதட்டத்தில் RSS பயங்கரவாத இயக்கம்

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர்.

குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது.

தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

செய்தி:தேஜஸ்

Saturday, December 25, 2010

மும்பையில் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, பயங்கரவாதிகள் நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர், என, அந்நகர போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூ ராய் தெரிவித்துள்ளார். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெளி மாநிலத்திலிருந்து மும்பாயுக்குள் புகுந்துள்ளதாகவும், ஹிந்து பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அந்த நான்கு பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்'ல் பயிற்சி பெற்றவர்கள்.

மும்பை, ஆமதாபாத் நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உளவுத் துறையினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை எச்சரித்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூராய், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளது உண்மையே, என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. பயங்கரவாதிகளின் வயது 20 முதல் 30க்குள் இருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இவர்கள் ஊடுருவியிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். 

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுருக்கிறோம், ஊடுருவிய நபர்களது பெயர்கள் பாரத் சென், மாரிப்பு ராய், தாக்கர் வாலே, அர்சுமன் சங்கே. இவ்வாறு ஹிமன்சூராய் கூறினார்

Friday, November 26, 2010

சாயி பாபாவும் & ஆட்டோசங்கரும்: ஒரு வரலாற்று பார்வை.

புட்ட பர்த்தி சாயி பாபாவோட பிறந்த நாளுக்கு பராம்பரிய பத்திரிக்கைங்க எல்லாம் சிறப்பிதழ் போட்டாய்ங்க பின்னணி ஒரு இழவுமில்லை விளம்பரம்தேன் - வாசகனை நம்பி பத்திரிக்கை நடத்தின காலம் போச்சு - இன்னைக்கு விளம்பர தாரனை நம்பி பத்திரிக்கை நடத்தற காலம் இதுதான் புதிய பத்திரிகை தர்மம் (பத்திரிகை விபச்சாரம்.பிரதமர் முதல் கவர்னர் வரை இந்தாளு காலுல சாஷ்டாங்கமா விழுறாங்க நான் ஒரே கேள்விதான் கேட்கறேன். இன்னைக்கு நீங்கல்லாம் போனிங்க வந்திங்க. கேட்டா சொந்த சமாசாரம்பிங்க. சரி நைனா நாளைக்கே பாபா ஆசிரமத்துல ஒரு கொலை நடக்குது . தற்கொலை நடக்குது. நிறையவே நடந்திருக்கு-பாபாவையே சுடப்போனான் ஒருத்தன் -பாபா பாவம் அவசரத்துக்கு சங்கு சக்கரம்லாம் கிடைக்காம (அவர் தான் கடவுளாச்சே) அலாரத்தை அமுக்கி எஸ்கேப் ஆனாரு. அப்படி நடந்தால் லோக்கல் போலீஸ் உள்ளார நுழையுமா? நுழைஞ்சாலும் தில்லா விஜாரிக்குமா?

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு. ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும்.
அதிலும் சமுதாயத்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும், தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால் என் கிழிப்பு தொடரும்.

நாம பாபா பத்தி பேசினா ஒடனே தண்ணி கொடுத்தாரு, கண் இலவச ஆப்பரேஷன் பண்ணினார் என்கிறாங்க . ஆட்டோசங்கர் கூட அதைத்தானே பண்ணாரு. அவருக்கு தூக்கு. இவருக்கு? (கடந்த காலத்தில் அதிகாலை டாட் காம், விடுதலை டாட் காமில் வெளி வந்த புட்டபர்த்தி பாபாவின் புருடாக்கள் என்ற பதிவை லேசான எடிட்டிங்குடன் இங்கு வெளியிட்டிருக்கிறேன். படிங்க. கமெண்ட் அடிங்க)

சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா? அதுவேதான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான்தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார்.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா என்கிறார்கள். அதே பரட்டை தலை. அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50- க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க!

புட்டபர்த்திக்காரர் உங்க கருணாநிதி முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியர்ல இல்லிங்கண்ணா) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது நம்ம முதல்வர் கருணாநிதியிடம். முதல்வரும் பாவம் தெய்வமே எனப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். உடனே கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த நகைக்கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமோ? "பாபா" இருக்கையில் எதற்கு "கோலார் தங்கவயல்" எல்லாம்? இழுத்து பூட்ட வேண்டாமோ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி: ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய) சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக "கப் ஆஃப் காஃபி" என்றான். பாபா ஏன் அவனிடம் நிற்கிறார்? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்?

சுவர்க்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்: கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார். கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய்ச்சேர்ந்தார்.

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா? கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் என்ன கேனையனா?
இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்றுதானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார். இவரோ நானே கடவுள் என்கிறாரே! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியதுதானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் (முன்னாள்) டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர். ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்னுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும், கண்ணி வெடி வைத்து கொல்லப் பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா? தெரிந்தும் தடுக்கவில்லையா?

குற்றம் நிகழவிருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்துக்கொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ?)

டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு: ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம்.
(இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம் - லேட்டஸ்ட் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கூட விட்டாய்ங்க - வாசனுக்கும் விட்டாய்ங்க - அப்போ பாபாவும் வாசனும் ஒரே ரேஞ்சா)

அட கூமுட்டைகளா! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா?

இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார். ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மாநிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள் (சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன்? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ! நானே கடவுள்… என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ?

தூர்தர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்: அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின்போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம். உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். “அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க" என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா பக்தர்தான்.

கொலை முயற்சியின்போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்?

பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான். பாபா கடவுள்தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனைபோல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.

வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு:ஆந்திர மாநிலம்,அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்நாடக மாநிலம், வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களான வெளிநாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

குடி நீர் திட்டம்: ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது பாபா நீங்கதான் கடவுளாச்சே.. நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரணும்? என்று கேட்கிறமாதிரி இல்லை.

வெளிநாட்டை சேர்ந்த பெப்சி, கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும், புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வரக்கூடாது என்று அழுத்தம் தரலாமே! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே! மணல் கொள்ளையை தடுத்து, மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்).

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை. அவரும் பாபா பக்தர்தானே. பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே! சரி அதுதான் ஒழியட்டும் மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்ட ஆரம்பித்தாரே அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி, ஆதரவு தெரிவித்திருக்கலாமே!

எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டு அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்றுவரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்து வருகிறார் ஆதி கேசவுலு. அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போது புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார். கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே!

பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி: பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது, தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும். அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட "லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி"(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது. ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகி வருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள் மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.

நன்றி: ஆசிரியர் நிர்வாண உண்மைகள்

Friday, October 29, 2010

மோடி வித்தையெல்லாம் குஜராத்தில் பலிக்கலாம், எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது- சுஷ்மா ஸ்வராஜ்

குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில அயல்நாடுகளில் விசிட் விசா மறுக்கப்பட்டது. இதனால் பெருத்த   அவமானம் அடைந்த மோடிக்கு, அடுத்த அவமானமாக பீகாரில் இவர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கெடுக்கக்  கூடாது என பிகாரில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கண்டுள்ள நிதிஷ்குமார் கட்சியின் தடை அமைந்தது. அதிலிருந்து மோடி மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு  அவமானம் அவரது  கட்சி முக்கியத் தலைவர் வாயிலாகவே கிடைத்துள்ளது மோடியை நிச்சயம் 'அப்செட்' ஆக்கியிருக்கும். நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றிருந்தபோது, பிரசாரத்துக்கு மோடி வரவில்லையா என்று நிருபர்கள் கேட்டபோது,
 மோடி வித்தையெல்லாம் எல்லா மாநிலங்களிலும் எடுபடும் என்று கூற முடியாது என்று பதில் அளித்ததாக செய்திகள் கூறுகின்றன.

குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடி, அங்கு மீண்டும் முதல்வரானதும், சமீபத்தில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதையும் வைத்து  மோடியை  மக்கள் செல்வாக்கு மிக்கவராக காட்ட சிலர் முனைகின்றனர்.

ஆனால் மோடியின் தொடர் வெற்றி, பிரதான கட்சியான காங்கிரசின் மிதவாத மதவாதமும், அரசியல் அணுகுமுறையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. எதிர்கட்சி தெளிவான அரசியல் செய்யாத நிலையில், அதிகாரத்தை  கையில் வைத்துள்ள மோடி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவது பெரிய வித்தையல்ல. ஆனாலும் மோடியின் இந்த மோடி வித்தை எல்லா இடங்களிலும் எடுபடாது என அவரது கட்சியை சேர்ந்த பிரதான தலைவரும், நாடளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளதன் மூலம், மோடியின் மக்கள் செல்வாக்கு என்பது ஒரு வித்தையன்றி உண்மையல்ல என்பது திண்ணம். அதோடு பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 'சோ' வகையறாக்களால் புகழப்படும் இவருக்கு ஏற்படும் அடுத்தடுத்த அவமானங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Thursday, October 28, 2010

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற SDPI வேட்பாளர்

தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியில் பி.டி.பி, ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணி, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசியல் வரலாற்றில் சிறையிலிருந்து ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவது அபூர்வ சம்பவமாகும்.

முவாற்றுப்புழாவில் பேராசிரியர் ஜோசப் என்பவர் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்த சம்பவத்தில் கோபமடைந்த இளைஞர்கள்  சிலர் அவருடைய கையை வெட்டினர். இதுத் தொடர்பாக போலீசாரால் பேராசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.

சிறைச் சட்டப்படி தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சிறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தையே நடைமுறைப்படுத்தியதால் பேராசிரியர் அனஸ் வாக்களிக்க இயலவில்லை.

பேராசிரியர் அனஸ் கைவெட்டி வழக்கில் நிரபராதி என இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளே கூறியதால் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி தேர்தலில் களமிறங்கினார் பேராசிரியர் அனஸ்.

முவாற்றுப்புழா நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அனுமதி கிடைத்த பிறகுதான் பேராசிரியர் அனஸ் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி போலீஸ் அழைத்ததன் பேரில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் ஆஜரான அனஸை கைதை பதிவுச் செய்யாமலேயே இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்தனர்.

சமூக-கலாச்சார களங்களில் தீவிர பணியாற்றிய முவாற்றுப்புழா இலாஹியா கல்லூரி பேராசிரியரான அனஸ் போட்டியின் துவக்கத்திலேயே தான் நிரபராதி என்பதை மக்கள் முன் விவரித்ததால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

போலீசார் சதித்திட்டம் தீட்டி கல்வியறிவுப் பெற்ற முஸ்லிம் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றும் வகையில் செயல்பட்டதே தனது விவகாரத்திலும் நடந்ததாக பேராசிரியர் அனஸ் வாக்காளர்களை புரியவைத்ததன் பலனாக அனஸிற்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக அவரை தேர்தலில் வெற்றிப்பெற வைத்துள்ளனர் மக்கள்.

சிறையிலிருந்து தனது வெற்றியை அறிந்த பேராசிரியர் அனஸ் தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். தான் நிரபராதி என்பதை நிரூபித்து சிறையிலிருந்து விடுதலையானால் உடனடியாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து நன்றி தெரிவிப்பதாகவும் அனஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாணவர் அமைப்பான  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் 

பாபர் மசூதி விசயமாக தீவிரவாத ஹிந்துத்துவா அமைப்புகளுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டாம்: PFI

பெங்களூர்,அக்:பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தீவிரவாத சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும். ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார்,தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார். ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Wednesday, September 8, 2010

அமெரிக்க யூதர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது: அமெரிக்காவின் சி.ஐ.ஏ தகவல்.

வாஷிங்டன்,செப்.8: அமெரிக்காவிலுள்ள யூதர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதிச் செய்கின்றனர் என சி.ஐ.ஏவின் ஆவணங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் ரகசியமாக உளவறிந்து வெளியிட்ட ஆவணங்களில் இது வெளிப்படுகிறது. ரெட்ஸெல் என்ற சி.ஐ.ஏயின் பிரிவு கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தயாரித்த அறிக்கையில் உள்நாட்டு யூத தீவிரவாதப் பிரிவுகளின் செயல்பாடுகளை அமெரிக்க அரசு கண்டும் காணாததுபோல் இருப்பதாக கூறுகிறது.

அமெரிக்க உலகத்திற்கு வெளிப்படுத்துவதுபோல் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதிச் செய்யப்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதமோ, மேற்காசிய, ஆப்பிரிக்க, ஆசிய வம்சாவழியைச் சார்ந்தவர்களுக்கோ தொடர்பில்லை என சி.ஐ.ஏவின் மெமோ கூறுகிறது.

ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தீவிரவாதத்திற்கு ஆதரவுத் தெரிவிப்பதும், சில நேரங்களில் தாமே அதனை செயல்படுத்துவதும் அமெரிக்க யூதப் பிரிவினர்களாவர். இஸ்ரேலின் எதிரிகளுக்கெதிராகத்தான் இவர்களுடைய காய் நகர்த்தல். உதாரணமாக பரூச் கோல்ட்ஸ்டைன் என்ற அமெரிக்க யூதன் ஈடுபட்ட ஒரு சம்பவத்தை சி.ஐ.ஏவின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

நியூயார்க்கைச் சார்ந்த கோல்ட்ஸ்டைன் கடந்த 1994 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு குடியேறி கட்ச் என்ற பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். ஹெப்ரானில் மஸ்ஜிதுல் தொழுதுக்கொண்டிருந்த 29 ஃபலஸ்தீனர்களை கொன்றது இவனுடைய தலைமையிலான பயங்கரவாத குழுவாகும். அமெரிக்காவைச் சார்ந்த யூத புரோகிதரான மெய்ர் கஹானா என்பவர்தான் கட்ச் என்ற யூத பயங்கரவாத இயக்கத்தை தோற்றுவித்தவன்.

எஃப்.பி.ஐ சட்ட-ஒழுங்கை சீர்குலைக்கும் இயக்கங்களின் பட்டியலில் உட்படுத்தியுள்ள யூத டிஃபன்ஸ் லீக்கின்(ஜெ.டி.எல்) ஸ்தாபகரும் கஹானாவாகும். 1968 முதல் அமெரிக்காவில் ஜெ.டி.எல்லின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஏழுபேராவர். 22 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் அமெரிக்க-அரபு பிரிவினை எதிர்ப்பு குழுவின் மாகாண இயக்குநரை கடத்திச்சென்றது ஜெ.டி.எல்லாகும்.

2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று இரண்டு தினங்கள் கழித்து கலிஃபோர்னியாவில் ஒரு மஸ்ஜிதை குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்ட இரண்டு ஜெ.டி.எல் உறுப்பினர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைதுச்செய்ததாக எஃப்.பி.ஐயின் குறிப்பில் காணப்படுகிறது. ஃபலஸ்தீன் பகுதிகளில் தாக்குதல் செயல்பாடுகளுக்கு அமெரிக்க யூதர்களின் ஆதரவு தற்பொழுது பலமடங்கு அதிகரித்துள்ளது.

மேற்குகரையிலும், ஜெருசலத்திலும் சட்டத்திற்கு புறம்பான நிர்மாணங்களுக்காக 40 அமெரிக்க அமைப்புகள் 20 கோடி டாலர் வரியில்லாத நன்கொடையாக சேகரித்து அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கடந்த ஜூலையில் செய்தி வெளியிட்டிருந்தது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Tuesday, September 7, 2010

நீங்கள் செய்வதை உலகம் பார்க்கின்றது: கூகிளும் அதன் அபாயகரமான பிரைவசிக் கொள்கையும்

இணையத்தை பயன்படுத்த தெரிந்த ஒவ்வொருவரும் கூகிளையும் பயன்படுத்தி இருப்பார் என்றால் அது மிகையாகாது.
கூகிள் என்பது இன்று அனைவராலும் அறியப்பட்டது ஒன்று. அனால் அனைவராலும் அறியப்படாதது கூகிள் பிரைவசி பாலிசியின் (கொள்கை) உண்மை நிலவரம்.
பிரைவசி என்பதற்கு ஒரு நபரின் அந்தரங்கத் தகவல் தனித்தகவல் சுயத்தகவல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.
கூகிளின் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அதற்க்கான விலை என்ன தெரியுமா ? உங்களின் பிரைவசி.
கூகிளில் செய்யும் எதுவும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படியே உள்ளது.
இதைப்பற்றி கூகிள் தலைவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் "ஒரு விஷயத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்றல், முதலில் நீங்கள் அதை செய்திருக்கவே கூடாது" (கீழே காணொளியைக் காணவும்).
குகூல் நீங்கள் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறீர்கள், என்னன்ன சொற்க்களைத்தேடுகிறீர்கள், எதை டவுன்லோட் செய்கிறீர்கள் என அனைத்தையும் தனது தளத்தில் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களின் இ-மைல்கள் போன்றவற்றையும் அலசி ஆராயும் தன்மை கொண்டுள்ளதாக  பல தன்னார்வ குழுக்கள் குற்றம் சாற்றுகின்றன.
கடந்த வாரம் கூகிளுக்கு எதிரான பிரைவசி தொடர்பான வழக்கு ஒன்றிற்காக 40 கோடி நஷ்டஈடு கொடுக்க முன்வந்துள்ளது கூகிள் (http://arstechnica.com/tech-policy/news/2010/09/google-coughs-up-85-million-to-settle-buzz-privacy-suit.ars).
அது மட்டுமல்ல மாற்றுமொரு தன்னார்வக்குழு கூகிளுக்கு எதிராக ஒரு விளம்பர பிரசாரத்தயே துவக்கி உள்ளது (காணொளியை கீலே காணலாம்).
கூகிள் குரோம் என்ற கூகிளின் இணையதளச் சுற்றி (browser) நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் (நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தையும் கூட) கூகிளின் தாய்த்தளத்திற்கு அனுப்பி விடுகிறது (காணொளியை கீலே காணலாம்).
இந்த தகவல்கள் அங்கு பதிவு செய்வதுடன், இதை நிறுவனங்களுக்கு விற்பதாகவும் மேலும் இவற்றை அரசு கண்காணிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பல தன்னார்வக்குழுக்கள் கூகில் மீது குற்றம் சாட்டியுள்ளது.
அதை ஒப்புக்கொள்ளும் முகமாகவே கூகிளின் தலைவரின் கூற்றும் உள்ளது.
ஆகவே கூகிளை பயன்படுத்தும் போது இதை அறிந்து பயன்படுத்தவும், உங்களுடைய அந்தரங்க தகவல்கள், வேலை மற்றும் அலுவலக தகவல்கள், நிறுவனத்தின் முக்கிய மற்றும் தனித்தகவல்கள் போன்றவற்றை கூகிளில் பயன்படுத்தும் போது, எந்த வடிவத்தில் இருந்தாலும், சாட்டிங் ஆகவோ, புகைப்படமாகவோ, ஒலியாகவோ, ஒளியாகவோ, இ-மெயில் ஆகவோ, இந்த தகவல்கள் விற்கப்படலாம் அல்லது பகிர்ந்து கொல்லப்படலாம், உங்களது போட்டி நிறுவனங்களுக்குகூட இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..