Tuesday, August 31, 2010

அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜிதை அனுமதிக்க முடியாது: பா.ஜ.க

பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்தமாதம் தீர்ப்பு வழங்கவிருக்கவே அயோத்தியாவில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என்ற மிரட்டலுடன் பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக திரும்பினால் அங்கீகரிக்க இயலாது என்று நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமே இது.

அயோத்திப் பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாது என்ற பழைய பல்லவியை தொடர்கின்றன பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள்.

62 வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளிவரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என சங்க்பரிவார்களின் அறிவிப்பு அயோத்திப் பிரச்சனையின் மூலம் தேசத்தில் மீண்டும் கலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் ரீதியாக செல்வாக்கு இழந்துள்ள பா.ஜ.க மீண்டும் பாப்ரி மஸ்ஜித் அஜண்டாவை கையிலெடுத்து கரையேற முடிவெடுத்துள்ளது.

ஒன்று அரசு சட்டமியற்றி ராமர் கோவிலைக் கட்டவேண்டும் அல்லது அனைவரின் சம்மதத்தின் மூலம் ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்க வேண்டும் என பா.ஜ.கவின் வினய் கத்தியார் கோரியுள்ளார்.

அரசுதான் தேசிய மனோநிலையை கருத்தில் கொண்டு சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும், கோவில் நிர்மாணம் சமாதான வழிகளின் மூலமா? அல்லது போராட்டத்தின் மூலமா என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்திருந்தார்.

கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியும் அறிவித்திருந்தார்.

எல்லா பா.ஜ.க, சிவசேனா எம்.பிக்கள் கையெழுத்திட்ட இதுத்தொடர்பான மனு ஒன்றை பிரதமருக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுவதற்கு அரசு சட்ட இயற்றவேண்டும் எனக்கோரி வி.ஹெச்.பி தேசமுழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. காசி,மதுரா ஆகிய இடங்களிலிலுள்ள மஸ்ஜிதுகளும் ஹிந்துக்களுக்கே என வி.ஹெச்.பி கோரும். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே அறிக்கை விடுவது முட்டாள்தனமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறியுள்ளார்.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.டிக்கள் அயோத்தியில் சி.டி.கடைகளிலும், அங்காடிகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இத்தகைய சி.டி க்களை தடைச்செய்ய வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் உ.பி.மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

gujarat model encounter

 
போபால்,ஆக:பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறல் போன்றக் காரணங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 அப்பாவி இளைஞர்களை கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி குஜராத் மாடலில் போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளனர். பீத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்து இளைஞர்களை தவறானக் காரணங்களைக் கூறி அழைத்துச் சென்ற பிறகு கொள்ளைக்காரர்கள் என்ற பீதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் போலீஸ் வேடமணியச் செய்து கொலைச் செய்துள்ளது போலீஸ் குழு ஒன்று.

போலி என்கவுண்டரைக் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்க போலீசால் இயலவில்லை. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அம்ஜத்கான் என்ற ஃபவ்ஜியின் உறவினர்கள் போலீஸ் கூறும் காரணங்களுக்கெதிராக கூறுகின்றனர்.
ராஜு பன்ஸரா, உதல் படாய், ரவீந்திர உதைனியா ஆகியோர் கொல்லப்பட்ட இதர இளைஞர்கள். இளைஞர்களை கடத்திச் சென்று ராணுவ உடையை அணியவைத்ததை நிரூபிப்பதாக உள்ளது போலீசார் வெளியிட்ட புகைப்படம்.
அணியவைக்கப்பட்ட உடை எவருக்கும் பொருந்தாதது மட்டுமல்ல, ஒருவருடைய கால்ச்சட்டை அவருடைய இடுப்பின் கீழ் பெல்டினால் முறுக்கி கட்டப்பட்ட நிலையில் உள்ளது.
அம்ஜத்கான் காலுறை அணியாமல் ஷூ அணிய மாட்டார் என அவருடைய மனைவி கூறுகிறார். ஆனால் கொல்லப்பட்ட மூவருமே காலுறை அணியாமல்தான் ஷூ அணிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்தோரி காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்டதுதான் போலி என்கவுண்டர் கொலைநடந்த பக்னாஸ கிராமத்தின் ஆஸான் நதிக்கரை. இங்குள்ள டவுண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எஸ்.ஸிகார்வர்(T.I) கடந்த ஓர் ஆண்டிற்கிடையில் கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி என்கவுண்டரில் கொன்றது 16 நபர்களை.
சாதாரண கான்ஸ்டபிளான இவர் T.I பதவிக்கு உயர்வுப் பெற்றதற்கு காரணம் இந்த என்கவுண்டர் கொலைகள்தான் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான பீந்த் எஸ்.பி.சஞ்சல் சேகர் மற்றும் போலீஸ் குழுக்கெதிராக கொலைக் குற்றத்திற்கு வழக்குப் பதிவுச்செய்ய போலீஸ் காரரும், அம்ஜத்கானின் சகோதரனுமான ஃபெரோஸ்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Sunday, August 29, 2010

கூகில் இணையத்தளம் அமெரிக்காவிற்கு உளவுவேலை செய்கிறது: சீனா கடும் குற்றச்சாட்டு

கணினி இணையத்தின் தேடல் நிறுவனமான கூகில் சேவையை, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு கருவி என்று சீனாவின் அரசாங்க ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது. கூகில் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும், தனது இணைய தேடல் இயந்திரத்தின் மூலம் சேகரிக்கும் தகவல்களை அது அவர்களுக்கு வழங்குவதாகவும், சீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா கூறியுள்ளது.

சீன கலாச்சாரத்தின் மீது அமெரிக்க பெறுமானங்களையும், பார்வையையும் திணிப்பதன் மூலம், கூகிள் சீன கலாச்சாரத்தில் ஊடுருவ விளைவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் இணைய தணிக்கை இருப்பதன் காரணமாக, அங்கிருந்து தான் வெளியேறுவதா, இல்லையா என்பது குறித்து கூகில் அறிவிக்கவிருக்கின்ற வேளையில் இந்த குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன.

பாலஸ்தீன் காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ரஃபா:நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது. இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.

அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.

இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து. இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

இஸ்ரேலிய உளவாளி லெபனானில் கைது.

பெய்ரூட்:லெபனானின் தெற்குப் பகுதியில் ஆட்டோமொபைல் வியாபாரி போல் வேடமிட்டு இஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த உளவாளியை லெபனான் உளவுத்துறை கைதுச் செய்தது.
நேற்று மாலையில் கியாம் நகரில் வைத்து இவர் கைதுச் செய்யப்பட்டார். இதனை லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் லெபனான் உளவுத்துறை அதிகாரிகள் 14 இஸ்ரேலிய உளவு நெட்வொர்க்கை பூண்டோடு அழித்தனர். மேலும் இதுத்தொடர்பாக 80 இஸ்ரேலிய உளவாளிகளையும் கைதுச் செய்தனர். கைதுச் செய்யப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை விதிக்கப்படும். பெரும்பாலான உளவுவேலைப் பார்க்கும் இஸ்ரேலிய உளவாளிகளை ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கம் கண்டறிந்து பிடித்து லெபனான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தது

ராய்பரேலி:1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் ஃபைஸாபாத் போலீஸிற்கு முன்னரே கிடைத்தது என அத்வானியின் முன்னாள் பாதுகாவலரும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான அஞ்சு குப்தா சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.சீஃப் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எதிர்தரப்பின் குறுக்கு விசாரணையின் போது அஞ்சு குப்தா இதனை தெரிவித்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி ஃபைஸாபாத் போலீஸ் ஐ.ஜி.எ.கே.ஸரன் கூட்டிய கூட்டத்தில் தான் பங்கெடுத்திருந்ததாகவும் அஞ்சு தெரிவித்தார். 45 நிமிடம் நீண்ட அக்கூட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதிற்கு இரண்டு விதமான அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் தகவல்களை மேற்க்கோள்காட்டி ஸரன் கூறியதாக அஞ்சு குப்தா தெரிவித்தார்.அயோத்தியில் முகாமிட்டுள்ளவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சட்ட ஒழுங்கை சீரழிக்க வாய்ப்புண்டு என்றும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தன.

கரசேவகர்கள் மஸ்ஜிதை தகர்ப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அத்வானி அயோத்தியாவில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாக அஞ்சு குப்தா ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார். பாப்ரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என்றும் அத்வானி பேசினார் என்றும் அஞ்சு குப்தா தெரிவித்திருந்தார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் குற்றவாளிகளான இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிதான் அஞ்சு குப்தா. சன்னியாசினி சாத்வி ரிதாம்பரா, வினய் கத்தியார் உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்களும் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாக அஞ்சுகுப்தா வாக்குமூலம் அளித்திருந்தார்.ரகசிய புலனாய்வு ஏஜன்சியான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் பிரிவில் அதிகாரியாக தற்பொழுது அஞ்சு குப்தா பணியாற்றி வருகிறார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

தின மலம்

தின மலம்

இன சுத்திகரிப்பைக் குறித்த ஆதாரங்களை வெளியிடுவதை இஸ்ரேல் தடுக்கிறது

பெய்ரூத்,ஆக30:1948 ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனர்களை அவர்களுடைய சொந்த பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆதாரங்களை வெளியிடுவதை 20 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது இஸ்ரேல். இதற்கான உத்தரவை இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின்படி ஆதாரங்கள் சாதரணமாக 50 வருடங்கள்தான் பாதுகாக்கப்படும். 1948 ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனர்கள் சுயமாகவே தங்கள் பூமியை விட்டுச் சென்றார்கள் என்ற இஸ்ரேலின் பரப்புரை முற்றிலும் பொய் என்பதும், ஹகனா என்ற யூத பயங்கரவாத அமைப்பு பலம் பிரயோகித்து ஃபலஸ்தீனர்களை விரட்டியடித்தனர் என்பதற்கு போதிய ஆதாரங்களுடன் வரலாற்றாய்வாளர்கள் நிறுவியிருந்தனர்.

1948 ஆம் ஆண்டில் ஐ.நா வின் மேற்பார்வையில் இஸ்ரேல் என்ற நிறுவப்படுவதற்கு முன்பே இன சுத்திகரிப்பு துவங்கியிருந்தது.

இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த டேவிட் பென்குரியனின் தலைமையில்தான் இந்த இன சுத்திகரிப்பு நிகழ்ந்தேறியது.

அச்சுறுத்தியும், கூட்டுக் கொலைகள் நடத்தியும், இருப்பிடங்களை குண்டுவைத்து தகர்த்தும், விவசாய நிலங்களில் கண்ணிவெடிகளை புதைத்தும் 'ப்ளான் தாலத்' என்று அழைக்கப்படும் இன சுத்திகரிப்பு நிகழ்ந்தேறியது.

இதுத்தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவது சர்வதேச அளவில் எதிர்விளைவுகளை உருவாக்கும் என பயந்துதான் நெதன்யாகு இத்திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அயோத்தியா பிரச்சனை:நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க பாப்ரி மஸ்ஜித் ஆக்‌ஷன் கமிட்டி கோரிக்கை

புதுடெல்லி,ஆக30:பாப்ரி மஸ்ஜித்-ராம ஜென்மபூமி வழக்கினை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பிரச்சனைக்கு தீர்வுக்காண வேண்டும் என பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்தமாதம் பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பை அலகபாத் உயர்நீதிமன்றம் கூறவிருக்கும் நிலையில்தான் இவ்வமைப்பு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மூத்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியுடனும் இதர தேசிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிப்போம் என அவ்வமைப்பின் செயர்மென் ஜாவேத் ஹபீப் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானில் நேட்டோ முகாம்களின் மீது தாக்குதல்: 18 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்,ஆக30:கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் இரண்டு நேட்டோ ராணுவ முகாம்கள் மீது தாலிபான் போராளிகள் வலுவான தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 18 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், ஒரு அமெரிக்க ஹெலிகாப்டரும், ஆஃப்கான் போலீஸ் வாகனமும் தகர்க்கப்பட்டதாகவும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஸபீஉல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாக்குதலை தோல்வியடையச் செய்ததாகவும், 24 போராளிகளை கொன்றதாகவும், தங்களுடைய வீரர்கள் எவரும் இறக்கவில்லை எனவும் ஆக்கிரமிப்பு படையினர் கூறியுள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தினர் வேடமணிந்து இரவு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு 30 போராளிகள் கோஸ்த் மாகாணத்தில் ஸாலர்னோ தளத்தையும், அருகிலிலுள்ள கேம்ப் சாப்மானையும் தாக்கியுள்ளனர். சிறிய துப்பாக்கிகள் மூலம் சுட்டவாறு முகாமிற்குள் நுழைந்துள்ளனர் போராளிகள்.

ஆனால்,ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்கொண்டதாகவும், பெல்ட் குண்டு கட்டியவர்கள் 4 பேர் உட்பட 24 பேரைக் கொன்றதாகவும் ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.

கேம்ப் சாப்மானில் கடந்த டிசம்பரில் தாலிபான் நடத்திய தாக்குதலில் ஏழு சி.ஐ.ஏவின் அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஐந்து பேரை கைதுச் செய்துள்ளதாக ஆஃப்கன் அரசு அறிவித்துள்ளது. இரண்டு ஆப்கான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மூன்றுபேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அரசு கூறுகிறது. ஏராளமான நேட்டோ படையினர் காயமடைந்துள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

நேட்டோ ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ஆக்கிரமிப்பு ராணுவம், ஆனால் அதனை பத்திரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இரண்டு தனியார் ஒப்பந்தக்காரர்களை தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதாக நேட்டோ அறிவித்துள்ளது.

வர்தக் மாகாணத்தில் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் என ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில:

1) ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது.
2) 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார்.
3) ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
4) சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. (பார்க்க:Mumbai terror suspect David Headley was ‘rogue US secret agent’)

அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:

1) 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர்.
2) 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது.
3) 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர்.
4) 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை... இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.
5) 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்.

news:kalaiy.tamilish.

மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளது- வி.டி.ராஜசேகர்


கொச்சி,ஆக30:கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு ஈழவர் (தாழ்த்தப்பட்ட சமூகம்). அதனால் அவரால் ஒன்றும் செய்யவியலாது.கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும் ஒரு ஈழவர்தான் என்றாலும் அவர் ஒரு தனிரகம். பார்ப்பணீயம்தான் சி.பி.எம்மை கட்டுப்படுத்துகிறது.

அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஆபத்தானவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தி ஆல் இந்தியா பேக்வார்ட் (எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி) அண்ட் மைனாரிட்டீ கம்யூனிட்டி எம்ப்ளாயீஸ் ஃபெடரேசனின் ஆறாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் கூறியதாவது:"ஜாதி வழக்கமுறை வலுவாக நிலைப்பெற்றிருக்கும் மாநிலம் தான் கேரளா. கேரளாவில் மார்க்சிஸ்டுகளா? ஆட்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால், அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஜாதி வழக்க முறையை நிலைநாட்டுகின்றனர்.

காங்கிரசில் பெரும்பாலோரும் ஹிந்துத்துவாவாதிகள்தான். நேற்று முன்தினம் காவி பயங்கரவாதத்தைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார். ஆனால், தற்பொழுது காங்கிரஸ் தலைமை, காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகக்குறைந்த சதவீதமே மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர்களின் விவகாரத்தில் கவலைக் கொள்கிறது?.

85 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் பிரிவினரை ஏன் கண்டுகாணாமல் நடிக்கின்றனர்? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் என்ன நடக்கிறது? என்பது எவருக்கும் தெரியாது.

ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு அமைச்சரானது சிரியன் கிறிஸ்தவர் என்ற ஒரேக்காரணத்தினால் தான். சிரியன் கிறிஸ்தவர்கள் பார்ப்பணீயர்களை விட ஆபத்தானவர்கள். கேரள மாநிலத்தில் ஆறு சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். கேரளத்தில் மீன் பிடித் தொழிலாளிகளான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலிலுள்ள நல்ல உறவை கெடுப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் மாதா அமிர்தானந்தாயி என்ற மீனவப்பெண்ணை பயன்படுத்துகிறது.

ஜாதீய வழக்கமுறை என்பது ஒரு விஷமாகும். ஜாதீய வழக்க முறையைக் குறித்து பேசுவதைவிட சிறந்தது ஹிந்துயிஷத்தைக் குறித்து பேசுவதாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய உருவாக்கமான அபினவ் பாரத்தான் காவி பயங்கரவாதத்தின் அடிப்படை. அவர்கள் இந்த தேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமாக உள்ளது.

அபினவ் பாரத்தும், யூதர்களும் உறவினர்களாவர். அபினவ் பாரத்தின் வளர்ச்சியின் பின்னணியில் யூத லாபியாகும். அபினவ் பாரத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் புரோகித் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் யூதர்களின் இத்தகைய அசுத்தமான உறவைக் காணலாம். அமெரிக்காவையும், பிரிட்டனையும் கட்டுப்படுத்துவது யூதர்கள்தான்.

வெறும் 15 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட மேல்ஜாதியினர் எவ்வாறு அரசை கட்டுப்படுத்துகின்றனர்? அவர்கள் தலித் உள்ளிட்ட மக்களை பிரிக்கின்றனர். எல்லாவித பொருளாதார ஆதாரங்களும், வங்கிகளும் கைவசப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட 85 சதவீத மக்களின் பகுஜன் சமாஜ் உருவாக வேண்டியுள்ளது. அவ்வாறு உருவானால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இங்கு அதிகாரவர்க்கமாக இயலும்." இவ்வாறு வி.டி.ராஜசேகர் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Friday, August 27, 2010

புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை

இளைஞர்கள் கூட்டமாக ஷாகாக்களிலிருந்து வெளியேறுவது ஆர்.எஸ்.எஸ் தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சங்க்கின் கொள்கைகளோடு புதிய தலைமுறையின் ஆர்வமின்மையை மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் தலைமை. இதற்கான ‘ஜாக்ரன்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை துவக்க ஆர்.எஸ்.எஸ் ஆலோசித்து வருகிறது. முடியுமென்றால், இந்த மாதத்திலேயே இப்பிரச்சாரத்தை துவக்க சர் சங்க் சாலக் மோகன் பாகவத் உத்தரவிட்டுள்ளார்.

இல்லாவிட்டால் சங்க் கடுமையான பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னரே ஆர்.எஸ்.எஸ்ஸை கைகழுகும் வேலை ஆரம்பித்திருந்தாலும் தற்போது தேசத்தில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்தத்துவா இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து இது வேகத்தில் நடைபெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்த பொழுதிலும் ராமர்கோவில் நிர்மாணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றும் செய்யவியலாதது ஒரு பிரிவினரை நிராசைக்குள்ளாக்கி ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேறத் தூண்டியது.

அதேவேளையில்,ஆர்.எஸ்.எஸ் வெளியேக்கூறும் போலிக் கோஷங்களான சமூக சேவை, தேசபக்தி ஆகியவற்றை நம்பி சங்க்கில் இணைந்தவர்கள்களுக்கு தற்பொழுது வெளிவந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதத் தொடர்பு அங்கலாய்க்க வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமல்ல அதன் முன்னணி அமைப்புகளான பா.ஜ.க, வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத்தின் பங்கினை, மும்பைத்தாக்குதலின் பொழுது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே கண்டுபிடித்த பொழுது சங்க்பரிவாரின் பயங்கரவாதத் தொடர்பு வெட்டவெளிச்சமானது.குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்டவர்களுடனான தொடர்பு தெளிவான பிறகும் ஆர்.எஸ்.எஸ் அதனை மறுத்து வந்தது.
ஆனால் அஜ்மீர், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த தலைவர்கள் கைதானதும்,குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்ததும் பயங்கரவாதச் செயலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை மறுக்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

தங்கள் உறுப்பினர்களின் பயங்கரவாதத் தொடர்பை ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்த சூழலில்தான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க புதிய திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ் தலைமை சோதனையில் இறங்கியுள்ளது.

தேசிய அளவில் ஐம்பதினாயிரம் ஷாகாக்கள் இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய புள்ளிவிபரப்படி 40 ஆயிரத்திற்கு அருகிலாகும். டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரம் ஷாகாக்கள் செயல்பட்டுவந்தன. தற்பொழுது 1500 ஆக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ விபரம் தெரிவிக்கிறது.

ஆனால் புதிய தலைமுறை இளைஞர்கள் ஷாகாக்களுக்கு வராததன் காரணம் வேலை நெருக்கடி என சப்புக்கட்டுகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Thursday, August 26, 2010

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிரீன்வேலி முற்றுகை முயற்சி தோல்வி.

மலப்புரம் Aug 26: கேரளாவில் பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா நடத்திவரும் கிரீன் வேலி இஸ்லாமிய கல்விக்கூடம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல் துறை தடை விதித்திருந்தது. மஞ்சேரி பொது மருத்துவமனை அருகில் அவர்கள் ஒன்று கூடும் போது காவல்துறை தடுத்து நிறுத்தியது தலைவர்கள் சிறிதுநேரம் பேசிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக பாஜகவின் மாநில தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கிரீன் வேலி பாப்புலர் பிரண்டின் பயிற்சிக்கூடம் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதனை முற்றுகையிடவும் தீர்மானிக்க பட்டிருந்தது அதன்படி நேற்று முற்றுகையிட முயன்றபோது மலப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சேதுராமன் தடுத்து நிறுத்தினார்.

இவர்கள் முற்றுகை போரரட்டம் பற்றி முன்னதாக பாபுலர் பிரான்ட்டின் கேரளா மாநில தலைவர் கருத்து கூறுகையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்னாள் அதில் கலந்து கொள்பவர்கள் தலைகளை எண்ணி கொண்டு வரட்டும் ஏன் என்றால் அவர்கள் திரும்பி போகும் பொது எல்லா தலைகளும் இருகிறதா என்று பார்த்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இவர்களது அணிவகுப்பு க்ரீன் வேலி சென்டரை அடையும் முன்னால் அவர்களை பாபுலர் பிரான்ட் இன் அணி எதிர் கொள்ளும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

news : நெல்லை tamilan

Wednesday, August 25, 2010

என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்டும்.

என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெரிக்காவுக்கு உணர்த்​தி​விட்​டது.​ ​ஆப்​கா​னிஸ்​தா​னில் கடந்த சில ஆண்​டு​க​ளா​கவே தங்கி சண்டை போட்டு​வ​ரும் அமெ​ரிக்​கா​வுக்கு,​​ இந்​தத் தலி​பான்​களை நம்​மால் அடக்​கவே முடியவில்லையே ஏன்? என்ற கேள்வி மண்​டை​யைக் குடைந்து கொண்​டி​ருந்​தது.​

​அமெ​ரிக்க ராணு​வத்​தின் ஆய்​வுப் பிரிவு களத்​தில் சென்று செய்த சில ஆய்​வு​க​ளுக்​குப் பிற​கு​தான் கோளாறு எங்கே என்று தெரி​ய​வந்​தது.​ அமெ​ரிக்கா இப்​போது எம்-​4 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​து​கி​றது.​ இது மிக​வும் நவீ​ன​மான துப்​பாக்கி என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​ 5.56 மில்லி மீட்​டர் குறுக்​க​ள​வுள்ள குண்​டு​கள் இதில் பயன்படுத்தப்படுகின்​றன.​ ​

​ வியட்​நாம் போரில் பயன்​ப​டுத்​திய எம்-​16 ரக துப்​பாக்​கியை மேம்​ப​டுத்தி,​​ நவீ​னப்​ப​டுத்​தி​ய​தன் மூலம்​தான் எம்-​4 உரு​வாக்​கப்​பட்​டது.​ அப்​ப​டி​யி​ருந்​தும் இது பயன் தரா​மல் இருப்​பது ஏன் என்று ஆய்​வுக்​குழு இப்​போது கண்​டு​பி​டித்​து​விட்​டது.​​தலி​பான்​கள் நவீன துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தா​மல்,​​ இன்​னும் பழைய​கால துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்​து​கின்​ற​னர்.​

முதல் கார​ணம்,​புதிய துப்​பாக்​கி​க​ளுக்கு நிறைய செல​வ​ழிக்க வேண்டும்.​ அடுத்து,​​ பழைய துப்​பாக்​கி​க​ளைக் கையாண்ட அனு​ப​வம் தரும் நம்​பிக்கை கார​ண​மாக துப்​பாக்​கியை மாற்​றிக்​கொள்ள அவர்​கள் விரும்​ப​வில்லை.​ மூன்​றா​வ​தாக,​​ தங்​க​ளு​டைய எதி​ரி​களை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்த பழைய துப்​பாக்​கி​களே தலிபான்களுக்​குப் போது​மா​ன​தாக இருக்​கின்​றன.​

​ அமெ​ரிக்கா பயன்​ப​டுத்​தும் எம்.-​4 ரக நவீன துப்​பாக்​கி​கள் சில நிமி​ஷங்​க​ளுக்​கெல்​லாம் ஏரா​ள​மான குண்​டு​களை துரி​த​க​தி​யில் உமிழ்ந்துவிடு​கின்​றன.​ இந்​தத் துப்​பாக்கி வியட்​நா​மி​லும் ஈராக்​கி​லும் ஓர​ள​வுக்​குப் பலன் தந்​த​தற்​குக் கார​ணமே எதி​ரி​கள் நகர்ப்​பு​றங்​க​ளில்,​​ மிக அரு​கில் வந்து சிக்​கி​ய​து​தான்.​ வியட்​நா​மில் நக​ரங்​க​ளி​லும் காடு​க​ளி​லும் எதி​ரி​களை மிக நெருக்​க​மாக சந்​தித்து சுட்​ட​னர்.​ எனவே இந்​தத் துப்​பாக்​கி​க​ளின் கொல்​(லும்)​திறன் கூடு​த​லாக இருந்​தது.​

​ஈராக்​கில் பாக்​தாத்,​​ ரமாடி,​​ பலூஜா போன்ற நக​ரங்​க​ளில்​தான் அமெரிக்கப் படை​கள் அதி​கம் சுட்​டன.​ அங்​கெல்​லாம் எதி​ரி​கள் மிக அரு​கில் வந்து துப்​பாக்​கிக் குண்​டு​களை வாங்​கிக் கொண்​ட​னர்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னமோ மலைப் பாங்​கான பகுதி.​ இங்கே தலி​பான்​க​ளைப் பார்த்து அமெ​ரிக்க வீரர்​கள் சுட்​ட​துமே அந்த குண்​டு​கள் சீறிப்​பாய்ந்​தா​லும் எதி​ரி​கள் இருக்​கு​மி​டம் அரு​கில் செல்​லும் போது வேகம் குறைந்து,​​ இலக்கி​லி​ருந்து விலகி தாக்​கு​வ​தால் தாக்​கு​த​லுக்கே வலு​வில்​லா​மல் போய்​வி​டு​கி​றது.​

​ தலி​பான்​கள் அமெ​ரிக்க வீரர்​கள் வரு​வ​தைக் கவ​னிக்​கா​மல் எங்​கா​வது பார்த்​துக் கொண்​டும்,​​ போய்க்​கொண்​டும் ​ இருந்​தா​லும் அமெ​ரிக்க துப்பாக்​கி​க​ளின் சத்​தம் அவர்​களை உஷார்​ப​டுத்​தி​வி​டு​கி​றது.​ அத்​து​டன் அந்த குண்​டு​கள் வலு​வில்​லா​மல் இருப்​ப​தால் சாதா​ரண தடுப்​பு​கள் மூலமே தலி​பான்​கள் அடி​ப​டா​மல் தப்பி விடு​கின்​ற​னர்.​ அதே சம​யம் அவர்​கள் வைத்​துள்ள பழ​மை​யான துப்​பாக்​கி​கள் 2,000 அடி முதல் 2,500 அடி வரை​யுள்ள இலக்​கு​க​ளைக்​கூட ஊடு​ரு​விச் செல்​லக்​கூ​டி​யவை.​ எனவே தலி​பான்​கள் திருப்​பிச்​சுட்​டால் அந்த குண்​டு​கள் அமெரிக்க வீரர்​கள் மீதும் அவர்​க​ளு​டன் செல்​லும் இதர வீரர்​கள் மீதும் பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்​ப​டுத்​து​கின்​றன.​

​இந்த ஆய்வு கார​ண​மாக துப்​பாக்​கி​களை மாற்​றிக்​கொள்ள அமெ​ரிக்க ராணு​வத் தலைமை முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ அத்​து​டன் தன்​னு​டைய எல்லா படைப்​பி​ரி​வு​க​ளி​லும் குறி​பார்த்​துச் சுடும் திற​மை​யுள்ள வீரர்​கள் 10 அல்​லது 12 பேரை குழு​வாக நிய​மித்​துக் கொண்டு,​​ தலி​பான்​கள் பயன்​ப​டுத்​து​வ​தைப் போன்ற பழைய,​​ அதே சம​யம் வலு​வான துப்​பாக்​கி​களை அவர்​க​ளி​டம் தந்து தலி​பான்​க​ளுக்கு ஈடு கொடுக்க அமெ​ரிக்கா முடிவு செய்​தி​ருக்​கி​றது.​

​ஆப்​கா​னிஸ்​தா​னர்​களை முத​லில் அடக்க முற்​பட்ட பிரிட்​டி​ஷார் ​(1832-1842) பிரெய்ன் பெஸ் ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தி​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​களோ ஜெசைல் பிளிண்ட்​லாக்ஸ் என்​கிற பழைய ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்தி அவர்​க​ளு​டைய தாக்​கு​தல்​களை முறி​ய​டித்​த​னர்.​​
1980-களில் சோவி​யத் யூனி​ய​னைச் சேர்ந்த ராணுவ வீரர்​கள் ஏ.கே.​ 47 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​திப் பார்த்​த​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​கள் இரண்​டா​வது உல​கப் போரில் பயன்​ப​டுத்​தப்​பட்ட லீ-​என்​ஃ​பீல்டு ரக துப்​பாக்​கி​க​ளைக் கொண்டே அவர்​களை முறி​ய​டித்​த​னர்.​ இந்த ரக துப்​பாக்​கி​யில் பெரிய லீவ​ரும் போல்​டும் இருக்​கும்.​​

இப்​போது அமெ​ரிக்கா எம்.​4 ரக துப்​பாக்​கி​க​ளுக்​குப் பதி​லாக எம் 110 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்த முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ இவை 2,500 அடி தொலை​வு​வரை பாய்ந்து இலக்​கு​களை நாசப்​ப​டுத்​தும்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னிய தலி​பான்​கள் போர்த் திறத்​தைத் தங்​க​ளு​டைய மூதா​தை​யர்​க​ளி​ட​மி​ருந்து பெற்​றி​ருப்​ப​தால்,​​ காலத்​துக்​கேற்ற நவீன ரகங்​களை நாடா​மல்,​​ போர்க்​க​ளத்​துக்​கேற்ற நம்​ப​க​மான துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.

எது எப்படியோ மேலே சொன்னது போன்று என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெ​ரிக்​கா​வுக்கு உணர்த்​தி​விட்​டது.

நன்றி தினமணி

மீட்புப்பணியில் முன்மாதிரி: 80 உடல்களை வெளியே எடுத்த 2 முஸ்லிம் இளைஞர்கள்.

காஸர்கோடு:மங்களூர் விமானவிபத்தில் மரணித்தவர்களின் உடல்களை உயிரை பணயம் வைத்து வெளியே எடுத்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப்பணியில் முன்மாதிரியாக திகழ்கின்றார்கள்.

கேரள மாநிலம் நாயன்மார்முல என்ற இடத்தைச் சார்ந்த ஒய்.முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏரியா பிரசிடண்ட் ஆவார். அதே ஊரைச் சார்ந்த பி.ஏ.கஃபூர் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மண்டல செயலாளர் ஆவார். இவர்களிருவரும் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டவுடனேயே சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்றனர். காலை 10 மணிக்கு பாஜ்பேக்கு வந்த இருவரும் ஓய்வில்லாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

கை,கால்களை இழந்த உடல்கள், பூரணமாக எரிந்த உடல்கள், விமானத்தின் பாகங்களோடு ஒட்டிக்கிடந்தவை என 80 உடல்களை இவர்கள் விபத்திற்குள்ளாகி எரிந்துபோன விமானத்தின் பாகங்களுக்கிடையேயிருந்து மீட்டுள்ளனர்.கடுமையான சூடும், புகையும் வந்ததால் பலரும் விமானத்தின் அருகில் செல்ல பயந்த சூழலில் இவர்களிருவரும் உயிரையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

எரிந்துபோன விமானத்திலிருந்து பாஸ்போர்ட்டுகள், ஊருக்குச் செல்லும்பொழுது நேசத்திற்குரியவர்களுக்கு கொடுக்க வாங்கி வைத்திருந்த ஸ்வீட் மிட்டாய்கள், பானங்கள் தயாரிப்பதற்கான பொடிகள் ஆகியவற்றை இவர்கள் கண்டெடுத்தனர்.க்ளவுஸ் கூட அணியாமல்தான் இவர்கள் இறந்துபோன உடல்களை எடுத்துள்ளனர். மரணத்தில் கூட இணைபிரியாமல் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்த தம்பதிகளின் என்று கருதப்படும் இரண்டுபேரின் உடல்கள் கண்ட காட்சி நெஞ்சத்தை தொட்டதாக இவர்கள் நினைவுக்கூறுகிறார்கள்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Suspected Hindutva Terrorist ideologue escaped from the clutches of Law

Vijayakumar
Suspected Hindutva Terrorist
Mumbai, Aug. 24: An Indian who had gone to the US to lecture on Islam at a Hindu Mahasabha conference (Hindu Congress of America http://hmsamerica.org/) has been detained in Houston for possessing “jihadi literature”.
Malad resident Vijay Kumar was apparently sweating and fidgeting in queue at the Bush Intercontinental Airport on Friday so authorities thought he needed a second look. “He raised the suspicion of behavior for detection officers. That’s what we have come to know from our FBI contacts,” said a Mumbai police officer, who has worked with the FBI for the 26/11 investigation.
Mumbai anti-terrorist squad team visited Kumar’s Malad residence. “ we now know that he was not attending any Islamic conference as stated in the complaint filed by US airport officials. He was in Houston to attend a conference of the Hindu Mahasabha where he had planned to speak on Islam and jihad. The Hindu Mahasabha has confirmed this to us,” said a Mumbai police source.
Unfortunately Anti-terror squad chief Rakesh Maria denied “official” intimation about Kumar’s arrest. “I am categorically stating that we have not been officially intimated about his arrest,” he said.
Joint Commissioner of Police (Crime) Himanshu Roy also said no information on Kumar has been forwarded to the Mumbai police. An ATS officer said, “We don’t even have his passport details.”
At the Houston airport, when the security found what they said was “tonnes” of jihadi literature on Kumar, along with a pair of brass knuckles and literature on US military, his luggage was tested for presence of explosives. The first test came positive, but a second and third read negative, said the Mumbai police source. By then, Kumar was in detention on suspicion of being a terror suspect.
Airport security checked if he figured in the watch list for terrorists. He did not. They then booked him for carrying a lot of undeclared cash — in this case $8000, around Rs 3.7 lakh. But a Houston court dismissed the charge yesterday.
Kumar is still in a jail for carrying a prohibited weapon — the brass knuckles.
He is said to be a filmmaker from Mumbai and a "peaceful man" by his lawyer Roger Jain..

Kumar was arrested after the discovery of literature and material found suspicious by the airport security staff. He was also apparently behaving suspiciously. Jain said he was not sure why he was carrying "islamic" material but he believed Kumar was going to speak to at Hindu Mahasabha conference and educate them on jihad and Islamic fundamentalism.
The Mahasabha promoted the principles of Hindutva, a Hindu nationalist ideology developed by its pre-eminent leader Vinayak Damodar Savarkar.the Mahasabha identified India as "Hindu Rashtra" (Hindu Nation). That is against Indian Constitution and secular polity.
Vijay Kumar, spent the weekend in custody after the arrest as a court posted a bail amount of $50,000 for his release. That amount was scaled down to $5000 on Monday.

"Vijay's supporters paid up that amount," lawyer Roger Jain, representing Kumar, told Hindustan Times over phone
Finally He was set free.
http://timesofindia.indiatimes.com/videoshow/6427861.cms

WE NEED HOPE

கஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால் மக்களை அழைக்கின்றோமோ அது இறைவனின் கொள்கை. இந்தக் கொள்கை ஈடிணையற்றது. நாம் சட்டமெனக் கூறுவது இறைவனின் சட்டமாகும். இந்த இறைவனின் கொள்கைக்கு, இந்த சட்டத் திற்கு இணையான ஒரு கொள்கையோ சட்டமோ உலகத்திலுமில்லை, வானத் திலுமில்லை.இன்று இந்த உலகம் இந்த சட்டத்திற்காகவும் இந்தக் கொள்கைக் காகவும் இந்த நீதிக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. இன்று நமது பாதை தெளிவாகிவிட்டது. சூழ்நிலையும் நமக்கு சாதகமாகவே இருக்கின் றது. போற்றத்தக்க விதத்தில் இந்தப் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொண்ட நாம் சுய நலமற்றவர்களாக, ஏன் இந்த உலகத்திலேயே எந்தக் கைமாறும் எதிர்பார்க்காதவர்களாக இருக்கின்றோம்.இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். நாம் இறைவனின் திருப்தியொன்றையே கைமாறாக எதிர்பார்க்கின்றோம். நாம் இறைவனின் நல்லடியார்கள் வெற்றிபெற வேண்டும் என்ற ஒன்றையே நாடுகின்றோம். எமது உழைப்பும் வியர்வையும் இறைவனுக்காகவே. நாம் அவனை மட்டுமே சார்ந்திருக்கின்றோம். அவனது உதவியை மட்டுமே நாடுகின் றோம். அவனுடைய உதவியைப் பெற்றுவிட்ட எம்மை இவ்வுலகத்தில் எந்த சக்தியாலும் வெற்றி கொள்ள முடியாது.

இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…)

orkut பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கம்.


நாக்பூர் : ராஷ்டிரிய சுவ்யம் சேவக்சங் எனப்படும் ஆர் எஸ் எஸ் தனது தொண்டர்களை எப்போதும் நேரடியாகவே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அந்த இயக்கம் இன்றைய நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தவறுவதில்லை. பிரபலமான "ஆர்குட்' சமூக வலைத்தளங்களை தங்களுக்கு வசதியாக அது பயன்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஐ பொறுத்தவரை, அது தன் தொண்டர்களை நேரடியாகத் தொடர்பில் வைத்திருப்பதுதான் அதன் பலமாகும். தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும் தனது நேரடித் தொடர்பைத்தான் பலமாகத் தக்க வைத்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது தேவையான அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. ஐ.டி., துறையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தங்களுக்கிடையில் "ஆர்குட்' போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜன., 26ல் "பாரத மாதா பூஜை' தினம் ஆர்.எஸ். எஸ்.,சால் நடத்தப்படும்.

இந்த ஆண்டும், அவ்வாறு நடத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த ஆண்டு "ஆர்குட்' மூலம் தகவல் பரிமாறிக் கொண்டு "பாரத மாதா பூஜை' நடத்தப்பட்டது தான். ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு முழுநேர ஊழியர்களாக வருபவர்கள், நவீனதொழில்நுட்பத்தைக் கையாள்வதில் தேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். பழைய முழுநேர ஊழியர்களில் கூட சிலர் மொபைல் போன், இ-மெயில் தொடர்பு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் தடை எதுவும் இல்லையென்றாலும், நவீன தொழில்நுட்பத்தையே முழுக்க முழுக்க சார்ந்து இருப்பதை ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதில்லை.

இதுகுறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் இந்திரேஷ் குமார் கூறுகையில், "நமது கலாசாரத்தை கைவிட்டு விட்டு, வெறும் நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருந்தால் அந்தத் தொழில்நுட்பமே நம்மை அழித்து விடும். சுற்றுச்சூழல் மாசு, பொருளாதாரத்தில் சமநிலையின்மை, உலகவெப்பமயமாதல், ஊழல், விலைவாசியேற்றம், பயங்கரவாதம் போன்றவை நம் கலாசாரங்களை நாம் கைவிட்டதால் ஏற்பட்டவை தான்' என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- தீவிரவாதி பிரவீன் தொகாடியா.


இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது. இதுகுறித்து தீவிரவாத வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது "வி.எச்.பி அமைப்பு இந்தியாவை 'ஹிந்து' நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை 'ஹிந்து'க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

மேலும் "இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி" என கூறிய அவர் "இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், 'வந்தே மாதரம்' பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்."பண்டைய காலங்களில் இருந்து இந்தியா 'ஹிந்து' நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது. எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

விற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது யார்?' புத்தகம்.


புதுடெல்லி:ரகசிய உடன்படிக்கையின் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர்வினாலோ தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட 'Who Killed Karkare' (கர்காரேயைக் கொன்றது யார்?) புத்தகம் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. புத்தகம் வெளியிட்டு 7 மாதத்திற்குள் 4-ஆம் பதிப்பிற்கு தயாராகி வருகிறது அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். மும்பைத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவுற சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது 2009 அக்டோபர் மாதத்தில் தான் மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறை ஐ.ஜியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபரோஸ் மீடியாதான் இப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைக் குறித்த புலனாய்வுகள், புலனாய்வுத் துறைகளின் பங்கு, மும்பைத் தாக்குதலின் பின்னணிகள், அதைக் குறித்த புலனாய்வு உள்ளிட்ட விஷயங்களை இப்புத்தகத்தில் காணலாம். இந்தியாவில் நடைபெற்ற எல்லாக் குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தீவிரமாக நடைபெற்று வரும் பிரச்சாரத்திலிருந்து வித்தியாசமாக இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு பின்னணியில் பிராமண லாபி செயல்படுவதாக அப்புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் எஸ்.எம்.முஷ்ரிஃப். ஐ.பி மற்றும் ஊடகங்களின் மீதான தங்களின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவர்கள் இதனை சாத்தியமாக்குவதாகவும் அப்புத்தகம் கூறுகிறது.

போலீஸ் வாழ்க்கையின் அனுபவங்கள், பத்திரிகை குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரிஃப்.இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் 'உண்மையான' முகத்தை வெளிப்படுத்துவதால் தான் தேசிய ஊடகங்கள் இப்புத்தகத்தை புறக்கணிக்க காரணமாகயிருக்கலாம் என சுதந்திர பத்திரிகையாளரான சுபாஷ் கடாடே தெரிவிக்கிறார்.மேலும் தேசிய முக்கிய ஊடகங்களுக்கும் ஐ.பிக்கும் இடையிலான ரகசிய தொடர்பை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறுகிறார் சுபாஷ் கடாடே.
இப்புத்தகத்தின் 3-வது பதிப்பு தற்பொழுது விற்பனையில் உள்ளது. நான்காவது பதிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள் பதிப்பகத்தார். உருது, தமிழ் (விடியல் வெள்ளி மாத இதழில் தொடராகவும் வெளிவருகிறது), கன்னடம், மலையாளம்(தேஜஸ் பப்ளிகேஷன்) ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.

மராத்தி, குஜராத்தி,ஹிந்தி,பெங்காளி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 10 to 20 புத்தகங்களுக்கு ஆர்டர் வருவதாக தெரிவிக்கிறார் பதிப்பகத்தின் மாஸின் கான். மாஸின் கானின் சக பத்திரிகையாளரான கவுசர் கூறுகையில், "ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த NCPUL புத்தக கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகம் who killed karkare ஆகும். புத்தக கண்காட்சியைப் பற்றிச் செய்தி வெளியிட்ட எந்தவொரு பத்திரிகையும் அதிகம் விற்பனையான இப்புத்தகத்தைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் வெளியிடவில்லை" என ஆதங்கப்படுகிறார்.

கவுசர் மேலும் கூறுகையில், தேசிய அளவிலான முக்கிய ஊடகங்களுக்கு மாற்றீடாக கருதப்படும் தெஹல்கா மற்றும் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கூட இப்புத்தகத்தைக் குறித்து ஒரு செய்தியையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்.
ஆனால் மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏ.சி.பி.அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே எழுதிய 'To the last Bullet' என்ற புத்தகத்தை தேசிய முக்கிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

பயங்கரவாதத்தின் அரசியலையும், புலனாய்வில் ஏற்பட்டுள்ள பழுதுகளையும் சுட்டிக்காட்டும் 'who killed karkare' யை புறக்கணிக்கும் தேசிய பத்திரிகைகளுக்கு காம்தேவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும், மும்பை போலீசுடனான கசப்பான அனுபவங்களையும் கூறும் 'To the last Bullet' புத்தகம் விருப்பமானதாக மாறியது எவ்வாறு என்பது தனக்கு புரியவில்லை என்கிறார் வெளியீட்டாளரான மாஸின்.
சமீபத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையின் விஜயவாடா பதிப்பில் மக்கள் அதிகம் விரும்பும் புத்தகங்களின் பட்டியலில் 'who killed karkare' புத்தகத்தையும் உட்படுத்தியிருந்தனர்.

இஸ்ரேலால் லெபனான்,சிரியா தாக்கப்பட்டால் ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடிகொடுக்கும்.

லெபனான்,சிரியா ஆகிய இரு நாடுகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டால், ஈரான் முழுமூச்சுடன் அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஈரானில் பயணம் மேற்கொண்டுள்ள லெபனான் வெளியுறவு அமைச்சர் அலி அல்-ஷாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மோட்டாகி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த மோதலை கண்டித்ததோடு, இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அதன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது என்று மொட்டாகி குறிப்பிட்டார். பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளில்,ஈரானும் லெபனானும் பொது நிலைப்பாடுகளை கொள்கின்றன.நியாயமான சர்வதேச உறவுகளை அமைப்பதை இரு தரப்பும் ஆதரிப்பதாகவும், அவர் வலியுறுத்தினார்

பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்.


ஆகஸ்ட்  2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் மீரன் திடலில் சரியாக 3.00 மணியளவில் பரேட் லீடர் பக்ரூதீன் தலைமையில் 1000 வீரர்கள் கொண்ட அணிவகுப்பு தொடங்கியது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தயாவின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மாலை 3.55க்கு கையில் இந்திய தேசிய கொடி ஏந்திய ஆபிஸர் அணிவகுப்பு நடைபெற்றது. 3.55 மணிக்கு பேண்ட் டெமோ நிகழ்ச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பு நிறைவடைந்தது.
மாலை 4.00 மணிக்கு ஒற்றுமை கீதம் முழங்க பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக்கூட்டத்தின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சுதந்திர தின உறுதிமொழி மொழிந்தார் அதனை அனைவரும் வழி மொழிந்தனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விண் டிவி “நீதியின் குரல்” முனைவர் சி.ஆர்.பாஸ்கரன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதன் பின்னர் மாநில பொதுச் செயலாளர் ஏ. அஹமது ஃபக்ரூதீன் அவர்கள் உரையாற்றினர் அவர் தனது உரைல்“நாம் வாழக் கூடிய இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் நமது நாட்டை ஆக்கிரமித்து வைத்த சமயத்தில் அதனை எதிர்த்து போராடி, உரை நிகழ்த்தி, ஆர்ப்பாட்டங்கள் செய்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தி சுதந்திரம் கிடைக்கப்பெற்றோம். அன்று இதனை செய்தவர்கள் ஆங்கிலேயர் பார்வையில் தீவிரவாதிகளாக பார்க்கப்பட்டனர்.

இன்று அவ்வாறு சுதந்திரம் கிடைக்க பெற்ற நமது இந்தியாவில் ஆளுகை, ஆட்சி, நீதி, கடமை என்ற பெயர்களில் அநியாயங்களும், ஊழலும் நிகழக்கூடிய சமயங்களில் அதனை சுட்டிக்காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் அனைவரும் இவர்களின் பார்வையில் தீவிரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். அதனிலும் முதன்மையாக இருப்பவர்கள் என்ற பெருமை பாப்புலர் ஃப்ரண்டுக்�கே உரித்தாகும். இந்த ரீதியில்தான் அண்மையில் பல சம்பவங்கள் நமக்கு எதிரணிக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் பின்பு இருப்பது ஒரே சதிதான். அது ஃபாஸிசத்தால் உருவாக்கபட்டதேயாகும். அதனால் தான் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 9 அன்று இந்தியா அளவில் Save India Day என்ற ஒரு பிரச்சாரத்தை கையிலெடுத்தது.

அது “ஃபாஸிசத்தை எதிர்ப்போம், தீவிரவாதத்தை �வேரருப்போம்” என கூறி இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளையும் அதற்கு பின்னால் இருக்கும் ஹிந்துத்துவ சதியை மக்களுக்கு தெரியும் வகையிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். குண்டு வைத்தவனையெல்லாம் வீதியில் உலாவவிட்டு விட்டு இதனை கண்டிக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது 153A சட்டத்தின் கீழ் தேசத்தில் அமைதியை குலைக்கிறார்கள் என்ற வழக்கை போடுகிறார்கள் என்றால் இவர்களை இயக்கும் அதிகாரத்தினர் யார்? என்ற கேள்வி எழுகிறது.” என்று பேசினார். பின்னர் உரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ஓ.எம்.ஏ. ஸலாம் அவர்கள் தனது உரையில் நாட்டின் சுதந்திரத்தை காப்பதில் நமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சரியான நாள் இந்த சுதந்திர தின நன்னாள்.

நாம்,இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பிரிட்டிஷ் காலனி ஆதீக்க சக்திகளுக்கு எதிரணிக முன்பு போராடினோம். ஆனால் இன்று நம் தேசம் அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து அமெரிக்கா தலைமையிலான காலனி ஆதிக்க சக்திகளாலும் உள் நாட்டில் இந்துத்துவ சக்திகளாலும் நாடு அச்சறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. முஸ்லிம்களும் தலித்துகளும் அச்சத்தினாலும் அடக்குமுறையாலும் தங்கள் அடையாளத்தை தொலைத்தும் வாழ்ந்து வருகின்றனர். அதிகார வர்கத்தினர் வேண்டுமென்றே இவர்களை நசுக்கி வருகின்றனர். அதிகாரத்தை விட்டும் இவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். முஸ்லிம்களை வலிமைப்படுத்தும் முயற்சிகள் அரசாங்கத்திற்கு கவலையளிக்கிறது. பாப்புலர் பிரண்டிண் சுதந்திர கொண்டாட்டத்தை நடத்துவதை கூட தடுத்து நிறுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றது. சமுதாயத்தை வலிமைப்படுத்தி இந்திய அரசியலின் மைய நீ�ரோட்டத்தில் சங்கமிக்கச் செய்வதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.” என்று கூறினார்

அதனை தொடர்ந்து நம் நாடு சுதந்திரமடைவதற்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளான திரு.மாரியப்ப தேவர், ஜனாப். தஸ்தகீர் மற்றும் திரு. ஆறுமுகம் பிள்ளை ஆகியோர்களை கவுரவிக்கும் வண்ணம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. வின் டிவி “நீதியின் குரல்” முனைவரான திரு. சி.ஆர். பாஸ்கரன் அவர்களுக்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னாவும், மூத்த வழக்கறிஞர் மற்றும் தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) தலைவரான பவானி பா. மோகன் அவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் அஹமது ஃபக்ரூதினும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்கள். அதனை தொடர்ந்து வின் டிவி திரு சி.ஆர். பாஸ்கரன் சிறப்புணிரயாற்றார்கள். முடிவில் 5.45க்கு பாப்புலர் ஃப்ரண்டிண் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ். ஷபிக் அவர்கள் நன்றி கூறினார். மாலை 5.50க்கு தேசிய கீதம் இசைக்க நிகழ்ச்சி நிறைவுற்றது அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

எல்லா ஹிந்துகளின் மனதிலும் இன்றும் நரசிம்மராவ வாழ்கிறார்: பயங்கரவாதி அசோக் சிங்கால்.

ஹைதராபாத்,அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில தற்காலிகமாக ராமர் கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் முக்கிய பங்காற்றியதற்தாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் அவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் டிச-6 1992 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நிறைவேற்றினார் என பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதில் நரசிம்மராவின் பங்களிப்பில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை அவரின் பங்கு மறைக்க முடியாதது. பிரதமர் நரசிம்மராவ் பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை மேலும் உடனே அதே இடத்தில ராமர் கோவில் கட்டுவதையும் தடுக்கவில்லை.

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில மீண்டும் பள்ளியைக் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர் ராமர் கோவில் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டி உள்ளார். மேலும் எல்லா ஹிந்துகளின் மனதிலும் இன்றும் நரசிம்மராவ வாழ்கிறார். என்றும் அசோக் சிங்கால் கூறினார்.ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அமைதியான முறையில் மேற்க் கொள்ளப்படும் "எங்களின் கனவான பெரிய இராமர் கோவில் கட்டுவதற்காக கையெழுத்து இயக்கம், பொதுகூட்டங்கள் மற்றும் யாகங்களும் தொடங்கப்படும்." என்றும் அவர் கூறினார்.

"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் கிராம, தாலுகா, மாவட்ட அளவில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.இது தொடர்பாக நாடு முழுவதும் ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாங்கள் தொடங்கியுள்ள அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கம் தேசிய அளவில் நடைபெறும். இதன் மூலம் இந்துக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்

இந்துக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறார்கள். அயோத்தியில் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும். இதற்காக நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை.பேச்சுவார்த்தை மூலமோ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டோ இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து ராமர் கோவில் கட்டுவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

கஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் நடவடிக்கைகளை அவர் கண்டித்தார்."ஜம்மு-கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது பேரழிவுகளை உண்டாக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி மேலும் கஷ்மீருக்கு சிறப்ப்பு அந்தஸ்து வழங்கும் காஷ்மீருக்கான சட்டத்தின் 370 வது பகுதியையும் நீக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் வார்த்தைகளால் கூற முடியாத அளவு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் மேலும் நான்கு லட்சம் ஹிந்துக்கள் ஜம்மு-கஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறினார்.எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களை தடுக்க இராணுவ கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் தாக்கபட்ட கிறிஸ்தவ பாஸ்டர்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போலீஸ்.

புதுடெல்லி,கர்நாடகாவில் மஹாலிங்கபுரியில் தேவதாசிகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் இரு மாணவர்களுக்கு உதவி புரிந்ததைத் தொடர்ந்து பாஸ்டரை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்கினர். இண்டர்நேசனல் காலேஜ் ஆஃப் கல்சுரல் ஸ்டடீஸின் இரண்டு மாணவர்களுக்கு பிலிம்ஷோ நடத்த உதவி புரிந்ததுதான் பாஸ்டர் அனூப் தாக்கப்பட்டதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

கடந்த 19 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிலிம்ஷோ நடந்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த 350 பேர்கள் அடங்கிய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்க கும்பல் டி.வி.டி ப்ளேயர், ப்ரொஜக்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அடித்து உடைத்துவிட்டு பாஸ்டரையும் தாக்கினர்.ஆனால் போலீஸ் பாஸ்டரை ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றது. மறுநாள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்த இரு பெண்களையும் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீஸ்.இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தலித் தலைவர்களும், ஆல் இந்தியா கிறிஸ்தவ கவுன்சில் பிரதிநிதிகளும் ஸ்டேசனுக்கு சென்றதைத் தொடர்ந்து போலீஸ் அவர்களை விடுவித்தது.

சிந்திக்க: இந்திய காவல் துறை மற்றும் உளவுத்துறை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஒரு துணை அமைப்பு போல் செயல்படுவதை பார்க்கமுடியும். இது எல்லாம் இனி இந்தியாவில் நீங்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பதை காட்டுகிறது.

நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்தவன் மீது தாக்குதல்.

ஸ்டாக்ஹோம்:வடக்கு ஸ்டாக் ஹோமில் உப்சலா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்த ஸ்வீடன் நாட்டு கார்ட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸின் மீது தாக்குதல் நடந்தது. உரையை அரங்கின் முன் வரிசையில் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆவேசமாக மேடையில் ஏறி வில்க்ஸை தாக்கினார். இதில் வில்க்ஸின் தலையில் காயமேற்பட்டு கண்ணில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. வில்க்ஸ் உரை நிகழ்த்த வந்தபொழுதே 20 க்கும் மேற்பட்டோர் அவருக்கெதிராக கோஷம் போட்டபொழுது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து உரையை துவங்கியபொழுது ஐந்துபேர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி அரங்கில் உரையின் ஒரு பகுதியாக திரையிடவிருந்த ஃபிலிமை சேதப்படுத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தி அவர்களை மேடையிலிருந்து அகற்றினர். மீண்டும் உரை துவங்கியபொழுது தான் தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைதுச் செய்தனர். வில்க்ஸை தாக்கியபொழுது ஒரு முஸ்லிம் பெண்மணி 'அல்லாஹ் அக்பர்' என்று முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடன் ஊடகங்கள் இதுக்குறித்து தெரிவிக்கையில் வில்க்ஸ் திரையிட்ட ஃபிலிமில் ஆபாசமான மற்றும் மதம் சார்ந்த காட்சிகள் இருந்ததால் தான் மக்கள் ஆவேசமடைந்தனர் எனக் கூறுகின்றன. 2007 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு பத்திரிகையான நெரிகேஸ் அலஹண்டாவில் (Nerikes Allehanda) முஸ்லிம்களின் உயிரினும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதர் அவர்களை அவமதிக்கும் விதமாக கார்ட்டூன் வரைந்ததோடு வில்க்ஸ் உலக முஸ்லிம்களின் கோபத்திற்காரணமானதால் வில்க்ஸை கொல்பவர்களுக்கு லட்சம் டாலரும், அலஹண்டா பத்திரிகையின் எடிட்டரை கொல்பவர்களுக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசுத்தொகையாக அல்காயிதா அறிவித்ததாக கூறப்பட்டது.

பேஸ் புக்கிற்கு இணையான மில்லத் பேஸ் புக்.

பேஸ் புக் இணையத்தளம் மூலம் நபிகளாரை அவமதிக்கும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பேஸ் புக்கிற்கு மாற்றீடாக பாகிஸ்தான் இளைஞர்கள் `மில்லத் பேஸ் புக்' எனும் புதிய சமூக வலைப்பின்னல் இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உலகெங்கும் வாழும் சுமார் 1.6 பில்லியன் முஸ்லிம்களுக்குமான ஓர் உறவுப் பாலமாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் தளமாகவும் இந்த இணைய வழி சமூக வலைப்பின்னல் திகழும் என மில்லத் பேஸ் புக்கின் தயாரிப்பாளர்களான பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் ஸஹீர் தலைமையிலான கணினி மென்பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மட்டும் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ் புக்கிற்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டதையடுத்தே இளைஞர்கள் அதிரடியாக இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.முஸ்லிம்கள் மட்டுமின்றி சகல சமூகங்களின் உணர்வுகளையும் மதித்து நடக்கும் அனைவரும் மில்லத் பேஸ் புக்கில் இணைந்து கொள்ள முடியும் எனவும் இந்த இணையதளத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களுக்குள் சுமார் 20,000 இற்கும் அதிகமானோர் இதில் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர்.

பேஸ் புக்கிற்கு நிகரான சகல வசதிகளும் இத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாம் அதிகம் நேசிக்கும் நபிகளாரை அவமதிப்பவர்களுக்கு எதிராகப் போட்டி போடுவதும் அவர்களை தோற்கடிப்பதும் நமது கடமை என உஸ்மான் ஸஹீர் ஏ.எப்.பி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் மட்டுமின்றி பிரிட்டன்,பல்கேரியா, கனடா, சீனா ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் மில்லத் பேஸ் புக்கில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன். "இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்."ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத். மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.

2013 க்குள் நிலவில் முஸ்லிம்கள் நிறுவும் அறிவியல் ஆய்வுக்கூடம்.

மனாமா:நிலவில் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றை முஹம்மத் 1 என்ற பெயரில் முஸ்லிம்கள் 2013க்குள் நிருவ திட்டமிட்டிருப்பதாக, விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில்கொடுக்கும் விதமாக ஆய்வுக்கூடத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று ராதோஅன் ஃபகிர் என்ற,மொரோக்கோ வம்சாவழியான, கனடா விஞ்ஞானி கூறினார்.

"முஹம்மத் 1ன் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக 2015ல் முஹம்மத் 2ஐ ஏவுவோம். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிந்தித்து மனவேதனை தந்தவர்களின் விளைவு என்னவென்று அறிய விரும்புகிறோம், இதன்மூலம் நிந்தித்தவர்களை விட நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெறுமதியை நெருங்குவோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு நினைவூட்டும் விதமாக இந்த ஆய்வுகூடம் செயல்படும்" என்று கத்தாரின் அல் அரபு பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
முதற்கூடத்திற்கு 100 மில்லியன் டாலர் செலவாகும் எனவும், இரண்டாம் கூடத்திற்கு 1 பில்லியன் டாலர் செலவாகும் எனவும், இந்த நிதியை இஸ்லாமிய உலகம் தரும் என்றும் ஃபகிர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கிடுக்கு பிடியில் சிக்கி இருக்கும் இந்திய இராணுவம், உளவுத்துறை, போலீஸ், உள்துறை, பாதுகாப்புத் துறை மற்றும் நீதி துறை.

நீதி துறை.

இராணுவம், உளவுத்துறை, போலீஸ், உள்துறை, பாதுகாப்புத் துறைகள் என்று அத்தனை துறைகளின் கிடுக்கிப் பிடியும் ஹிந்துத்துவ ஃபாசிகக் கும்பல்களிடம் உள்ளது என்று அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன் புதிய தகவல்களைப் புதுப்பித்து ஒரு புதிய நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.நூலின் பெயர்:(Khaki and Ethnic Violence in India)- இந்தியாவில் காக்கியும் இன வன்முறையும் ஆசிரியர்: உமர் காலிதி S.M.முஷ்ரிஃப் எழுதிய (Who Killed Karkare?) "கார்கரேயை கொன்றது யார்?" நூலின் வரிசையில் இந்த நூல் இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐ.பி யை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள், என்று ஆதாரப்பூர்வமாக, தெள்ளத் தெளிவாகக் கூறினார் S.M.முஷ்ரிஃப் அந்த நூலில். அதே வரிசையில் ஐ.பி. யில் மட்டுமல்ல, அரசு பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸக் கும்பல்கள் என்று கூறுகிறது இந்த ஆங்கில நூல். இராணுவத்தின் பிரிவுகள், மத்திய ரிசர்வ் படை, RAF என்னும் துரித நடவடிக்கைப் படை (Rapid Action Force) போன்ற துறைகளிலெல்லாம் இப்பொழுது நிலவிலுள்ள முஸ்லிம் விரோதப் போக்குகளை வெவ்வேறு துறைகளில் பதவி வகிக்கும் உயர்ந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மூலமே விவரிக்கிறார் நூலாசிரியர் உமர் காலிதி.

இன்னொரு அதிர்ச்சிகரமான தவல். 1969 முதல் இன்று வரை ஒரு முஸ்லிமைக் கூட சேர்க்காமல் கவனமாக இருக்கிறது "ரா" (RAW) உளவு அமைப்பு. இதெல்லாம் எதேச்சையாக நடந்ததல்ல. திட்டமிட்டு, கவனமாகச் செயல்படுத்தப்படுவது என்று கூறுகிறார் ஆசிரியர்.
இரகசிய விசாரணை துறைகளில் முஸ்லிம்களை எடுப்பதற்கு எழுதப்படாத விலக்கு முன்பிருந்தே இருப்பதாக முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரணின் வாக்குமூலங்களை இந்நூலில் படிக்கும் எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. நாடு முழுவதும் நடந்த அனைத்து கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கெதிராக போலீஸ் நடந்துக் கொண்டுள்ள வரலாற்றை வரிவரியாய் விளக்குகிறார் ஆசிரியர்.

ஹிட்லர் பற்றி படம் இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி: சபாஸ் சரியான போட்டி.

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி இஸ்ரேலியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கொடுங்கோலன் ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய யூதர்கள் மைய அமைப்பின் தலைவர் நோவா மஸ்ஸில் இது குறித்துக் கூறுகையில்: "நான் இந்தியன் என்று கூறிக்கொளவதை கௌரவ்மாகக் கருதி வருகிறேன், இஸ்ரேலில் எங்கு சென்றாலும் நான் இந்தியன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன், எனது சக இஸ்ரேலியர்களிடம் நான் கூறுவதெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் யூதத் துவேஷம் இருந்ததில்லை என்று கூறிவந்துள்ளேன், ஆனால் இந்த பாலிவுட் பட விவகாரத்தினால் நான் இப்போது தலைகுனிந்து நிற்கிறேன், பாலிவுட்டின் அறியாமை குறித்து வெட்கப்படுகிறேன்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் ஒரு போதும் இந்திய விடுதலையை ஆதரித்ததில்லை என்பதே. நான் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதப்போகிறேன், பாலிவுட்டின் இந்த முயற்சியை நிறுத்தவேண்டும். ஏனெனில் இங்கு புகழ் பெற்றிருக்கும் அந்த சினிமா தொழிலுக்கு இழுக்கு செய்வதாகும்." என்றார் மஸ்ஸில்

Tuesday, August 24, 2010

ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிராக இஸ்ரேலுடன் கூட்டு இல்லை: டொனால்ட் பெரேரா

isreal-lankadonald_perera sl“ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை அரசு ஆதரவளிக்கும் என்று நான் கூறவில்லை. நான் கூறியதாக இஸ்ரேலிய பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தவறானது” என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான
டொனால்ட் பெரேரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
“ஃபாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு எதிரான யூத்தத்திற்கு இலங்கை ஆதரவளிப்பதாக டொனால்ட் பெரேரா கூறியதாக செய்தி வெளியானதையடுத்து ஃபாலஸ்தீன- இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.அத்துடன் இலங்கை முஸ்லிம்களும் அதிருப்தியை காட்டினர்.
இந்நிலையில், டொனால்ட் பெரேரா தனது மறுப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்ட  இஸ்ரேலிய பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்  இஸ்ரேலுடனான நட்பை இலங்கை எப்போதும் மதிப்பதாகவும்.
எவ்வாறெனினும் ஃபாலஸ்தீனர்களின் அபிலாஷைகளுக்கும் மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இஸ்ரேலும் ஃபாலஸ்தீனமும் பரஸ்பர சகிப்புத் தன்மையுடன் இருக்கக்கூடிய இரு நாடுகள் தீர்வு எட்டப்பட‌ வேண்டும் என்ற‌ அணிசேரா நாடுகளின் நிலைப்பாட்டை பின்பற்றும் நாடான இலங்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் யூதக்குலத்தைச் சார்ந்தவர்- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

லண்டன்,ஆக25:யூதர்களை கொல்ல களமிறங்கி பணியாற்றிய ஜெர்மனியின் நாசி இயக்கத் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் யூத பரம்பரயைச் சார்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஹிட்லரின் உறவினர்களிடம் நடத்திய டி.என்.ஏ பரிசோதனையில் ஹிட்லரின் முன்னோர்கள் யூதக்குலத்தைச் சார்ந்த வட ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  லண்டனில் டெய்லி எக்ஸ்ப்ரஸ் என்ற பத்திரிகைதான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. நாசி இயக்கத் தலைவரின் மருமகன்களின் ஒருவரான அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் பயன்படுத்திய டவலை பத்திரிகையாளர் லாங்க் பால் மர்டேர்ஸ் என்பவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்.  ஹிட்லரின் ஆஸ்திரியாவைச் சார்ந்த இன்னொரு உறவினர் நோர்பர்ட் ஹெச் என்ற விவசாயிடமிருந்து பெறப்பட்ட மாதிரியையும் இவர் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.  ஜெர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பாவில் காணப்படாத வகையான ஒய் குரோமோசோம்கள்தான் இரண்டு மாதிரிகளையும் பரிசோதித்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. யூதர்களிடம்தான் இவ்வகையான குரோமோசோம்கள் காணப்படும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.  ஹிட்லரின் முன்னோர்கள் ஜெர்மனியில் குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.மொராக்கோ,அல்ஜீரியா,துனீசியா ஆகிய நாடுகளிலிலுள்ள மக்களிடமும்,அஷ்கெனாஸி,ஸெஃபால்டிக் யூதப் பிரிவினர்களிடமும்தான் இந்தவகையான குரோமோசோம்கள் காணப்படுகிறது என மர்டேர்ஸ் கூறுகிறார்.  "நாங்கள் சுத்தமான ஆரிய இரத்தத்தில் பிறந்தவர்கள்" என ஹிட்லரும், சில நாசித் தலைவர்களும் பெருமை அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனம்: மக்களவை ஸ்தம்பித்தது

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

கேள்விநேர வேளையில் கேரள மாநிலம் பாலக்காடு எம்.பி எம்.பி.ராஜேஷ் என்பவர் பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனங்களை முன்வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புபடுத்தி கேரள மாநிலத்தில் பரப்புரைச் செய்யப்பட்டு வரும் பேராசிரியரின் கைவெட்டு சம்பவத்தை மேற்கோள்காட்டி ராஜேஷ் தனது உரையை ஆரம்பித்தார்.

மேலும் அவர், பாப்புலர்ஃப்ரண்டின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றிய சி.டிக்கள் மற்றும் புத்தகங்களில் தேசவிரோத கருத்துகள் அடங்கியிருந்ததாகவும், சி.டியில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் தலைவெட்டும் காட்சிகள் அடங்கியிருந்ததாகவும், இவ்விஷயங்களெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்துள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தாலிபான் மாடல் நீதிமன்றங்களை நடத்தி நீதித்துறைக்கு சவால் விடுவதாகவும், சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்டிற்கு பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும், என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்ற தேசிய புலனாய்வு அமைப்புகளால்தான் இதனை விசாரிக்க இயலும் எனவும், துரதிர்ஷ்டவசத்தால் மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் இவ்வியக்கத்திற்கு பாதுகாவலர்களாக உள்ளதால் அரசிற்கு அதில் விருப்பமில்லை எனவும் குற்றஞ் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, பி.டி.தாமஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் எழுந்து நின்று கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்த கட்சி பாதுகாவலராக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி கோரினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அவை நடுவேச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பித்துரை மதியம் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

விக்கி லீக் இணையதள நிறுவனர் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக புகார்


ஹோம்,ஆக24:தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரின் பின்னணியில் அமெரிக்க ராணுவ அமைப்பமான பென்டகன் இருக்கலாம் என விக்கி லீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் கூறியுள்ளார்.

ஜூலியன் அசேன்ஜ் (39) ஸ்வீடனில் வாழும் ஆஸ்திரேலிய நாட்டவராவார். இவர் விக்கி லீக்ஸ் என்ற இணைய தளத்தை துவக்கி நடத்தி வருகிறார்.

ஆஃப்கான் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை அசேன்ஜ் தனது இணைய தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் மீது ஒரு பாலியல் புகார் கூறப்பட்டது. அவரை கைது செய்ய வாரண்டும் பிறப்பித்து சனிக்கிழமை உத்தரவிட்டது ஸ்வீடன் காவல்துறை. ஆனால் சில மணி நேரங்களிலேயே காவல்துறை தனது கைது வாரண்டை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த ஜுலியன் அசேன்ஜ் "ஸ்வீடன் காவல்துறை எனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து அதை உடனே வாபஸ் பெற்றுள்ளது. இந்தச் செயலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

ஏற்கெனவே அவர்கள் என்னை மிரட்டி இருந்தார்கள். அமெரிக்காதான் இது போன்ற கீழ்த்தரமான தந்திரங்களைப் பயன்படுத்தும்" என்றார்

RSS யிடம் இருந்து பாதுகாப்பு கேட்கும் மோகன் பகவத்

பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றமும், மாநில அரசும் போட்டி போட்டிக் கொண்டு பாதுகாப்பு அளிப்பதை கண்டுள்ளீர்களா? ஆம்! ஆர்.எஸ்.எஸ்ஸை தலைமையாக கொண்டு பல ஹிந்துத்துவ தீவிரவாதிகள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றதை நாம் அறிவோம். மலேகோன், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மார்கோவா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் என பல குண்டுவெடிப்புகள் இவ்வமைப்புகளால் நிகழ்த்தப்பட்டு,நீதிவிசாரனைகளில் இவ்வமைப்புகளின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும், எங்கு நம் வேடம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், கைது செய்யப்பட்ட அத்தொண்டர்களை கழட்டிவிடும் முயற்சியில் அவ்வமைப்புகள் களமிறங்கின. அதன்படி, இக்குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கும் தங்கள் இயக்கங்களுக்கும் சம்மந்தமே கிடையாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை என்றும் அவ்வமைப்புகள் கைகழுவின. நம் தீவிரவாத இயக்கங்களை தடைசெய்துவிடுவார்கள் என்று பயந்து, அத்தொண்டர்களுக்கு எந்த விதமான ஆதரவோ அல்லது உதவியோ நாங்கள் அளிக்கமாட்டோம் என்றும் இவ்வமைப்புகள் சூளுரைத்தனர்.

இச்செய்தியை அறிந்த தொண்டர் பயங்கரவாதிகள் கொதிப்படைந்தனர். தங்கள் வாழ்கையை சீரழித்த தலைவர்களை கொலைச் செய்யப்போவதாகவும் தொண்டர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.தம் சக பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருவதைக் கண்டு பயந்து போன பயங்கரவாத தலைவன், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகினான்.

மனுவை விசாரித்த நீதிமன்றமோ, மாநில அரசை இது தொடர்பாக கேள்வி கேட்க, நீதிமன்றமும், மும்பை மாநில அரசும் அப்பயங்கரவாதத் தலைவனுக்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். சிறையில் இருக்கும் தன் சக பயங்கரவாதிகளினால் பயங்கரவாத தலைவனுக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஒட்டுமொத்த பயங்கரவாத கும்பல்களின் மூலம் நம் சமுதாயத்திற்கு ஏற்படும்நிலை?

பயங்கரவாதிகள் மனுதாக்கல் செய்தால் ஓரிரு நாட்களில் விசாரித்து தீர்வுகாணும் நீதிமன்றமும், மாநில மத்திய அரசுகளும், சாதாரண மக்களின் குறைகளைத் தீர்க்க காலம் தாழ்த்துவது ஏனோ? ஊழல் கறை படிந்த அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு அழிக்கும் வழக்கம் மாறி, இன்று பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவது! நம் இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு இது தான் காரணமோ என்னவோ? கடைசி வரை அந்த தீவிரவாதியின் பெயரையே சொல்லவே இல்லையே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. ஆம்! தனக்கு தன் தொண்டர் சகாக்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டது ஆர்.எஸ்.எஸ் தலைவர் 'மோகன் பகவத்' தான்.

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்.

gust 23, 2010


மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர். மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக் குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள். மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.

சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப். இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை. இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி வரும் முசுலீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.

ஈரானின் அணுசக்தித் திட்டம்: பயங்கரவாத இஸ்ரேல் கடும்எதிர்ப்பு.

டெல்அவீவ்,ஆக23:ஐ.நாவின் தீர்மானங்களையும்,சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் எச்சரிக்கையையும் புறக்கணித்த ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஏற்க இயலாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது.ஈரானின் முதல் அணுசக்தி நிலையம் கடந்த சனிக்கிழமை செயல்படத் துவங்கியுள்ள சூழலில்தான் இஸ்ரேலின் இவ்வறிக்கை.

மேற்காசியாவில் அணுகுண்டு வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேலாகும்.ஈரான் அணுசக்தித் திட்டங்களிலிருந்து பின்வாங்க சர்வதேச சமூக அதிக நிர்பந்தங்களை செலுத்த வேண்டும் என இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யோஸி லெவி கோரியுள்ளார்.

அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை இஸ்ரேல் கையெழுத்திடவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானம்

டெஹ்ரான்,ஆக23:ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானத்தை(ட்ரோன்) அறிமுகம் செய்தார் அந்நாட்டு அதிபர் அஹ்மத் நிஜாத். ஈரானின் எதிரிகளுக்கு மரணத்தின் தூதர்தான் இது என அறிமுக விழாவில் உரை நிகழ்த்தினார் நிஜாத். பாதுகாப்புத்துறையின் தேசிய தினத்தில்தான் கர்ரார்(முன் சென்று தாக்குவது) என்ற பெயரிடப்பட்ட நான்கு மீட்டர் நீளமுடைய இந்த குண்டுவீச்சு விமானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணம் செய்ய இயலக்கூடிய இவ்விமானம் 250 பவுண்ட் எடையுள்ள இரண்டு குண்டுகளை தாங்கும் சக்திக் கொண்டது. ராணுவத்தை பாராட்டிய நிஜாத், எதிரிகளுக்கு ஈரானை தாக்குவதற்கான ஆர்வம் முடியும் வரை இது தொடரும் என அறிவித்தார்.ஈரான் தங்களின் முதல் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை துவக்கிய மறுநாள்தான் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கியாம்-1 கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் சோதித்தது. 1980 களின் இறுதியிலேயே பைலட் இல்லாத கண்காணிப்பு விமானங்களை ஈரான் தயாரித்திருந்தது. 1992 ஆம் ஆண்டு முதல் சுயமாக டாங்குகளும், கவச வாகனங்களும், ஏவுகணைகளும், டார்பிடோக்களும் ஈரான் தயாரித்திருந்தது.

tamilmuslimblog