Wednesday, December 29, 2010
சீனாவில் கூகிள் இல்லாமல் போனது ஏன்? - விக்கிலீக்ஸ் கசியவிடும் புது தகவல்!
கூகிள் தேடு பொறி தளம் சீனாவில் இயங்கமுடியாமல் போனதுக்கு, சீன அரசு அதிகாரிகளின் அருவருக்கும் செயற்பாடே காரணம் என
விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 22ம் திகதி சீனாவிலிருந்து தனது தேடுபொறி சேவையை முழுமையாக நிறுத்தியிருந்தது கூகிள்! இதற்கு சீன அரசின் அழுத்தமும், அந்நாட்டு அதிதிறன் தொழில்நுட்பவியலாளர்களினால் கூகிள் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஹேக்கிங் நடவடிக்கையுமே காரணம் என அமெரிக்க இராஜதந்திரிகள் வாஷிங்டனின் இராஜாங்க திணைக்களத்திற்கு இரகசிய தகவல் அளித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும்,
சீன அதிபர் ஹு ஜுண்டாவோ, மற்றும் முதன்மை அரசியல் தலைவர் வென் ஜியாபோ ஆகியோருக்கு எதிரான கருத்துக்கள் கூகிள் மூலம் மக்களிடம் இலகுவாக பரம்பலடைந்ததே அவர்களை அச்சமடைய வைத்ததாகவும், கூகிளை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என அவர்கள் கருதியமைக்கு காரணமும் இதுவே!
அமெரிக்காவை மையமாக கொண்ட மாபெரும் தேடுபொறி தளம் ஒன்று சீனாவில் இயங்குவது ஆரோக்கியமானதல்ல என்பதால் கூகிளின் மின்னஞ்சல்களில் இருந்து பிரதான கோர்ட் குறியீடுகள் வரை, சீன ஹேக்கிங் மன்னர்களால் சிதைக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் சீனாவுடனான தொடர்பிலிருந்து கூகிள் தன்னை விலக்கிக்கொண்டது
என அத்தகவல்கள் தெரிவிக்கின்ற
Tuesday, December 28, 2010
அரசியல் கோமாளியை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டுமாம்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகைகளின் முதலீடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு பிரதமர் சம்மதித்துள்ளார்.
சிந்திக்க: சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளி இவர் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பண்ணும் கோமாளித்தனம் இருகிறதே தாங்க முடியலப்பா... இந்த பார்பணிய கும்பல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் போடும் வேஷம் இருகிறதே மிகவும் கொடுமையானது. இவர் ஜனதா தளம் என்கிற முகமூடியை போட்டுகொண்டு செயல்படும் ஒரு ஆதிக்க வெறிபிடித்த ஹிந்த்துதுவா ஆதரவாளர் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அரசு வக்கீலாக மாறி எந்த வைக்கோலை தின்ன போறாரோ தெரியல.
Thanks : சிந்திக்கவும்
சிந்திக்க: சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளி இவர் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பண்ணும் கோமாளித்தனம் இருகிறதே தாங்க முடியலப்பா... இந்த பார்பணிய கும்பல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் போடும் வேஷம் இருகிறதே மிகவும் கொடுமையானது. இவர் ஜனதா தளம் என்கிற முகமூடியை போட்டுகொண்டு செயல்படும் ஒரு ஆதிக்க வெறிபிடித்த ஹிந்த்துதுவா ஆதரவாளர் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அரசு வக்கீலாக மாறி எந்த வைக்கோலை தின்ன போறாரோ தெரியல.
Thanks : சிந்திக்கவும்
ஊடகங்கள் இஸ்ரேல் தொடர்பான ரகசியங்களை வெளியிட மறுக்கின்றன - ஜூலியன்
மனாமா : இஸ்ரேல் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட தயங்குகின்றன என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜே அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜூலியன் அஸென்ஜேவின் பேட்டி சுருக்கம்:
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இஸ்ரேல் தொடர்பான 3700 ஆவணங்கள் உள்ளன. அதில் 2700 ஆவணங்களும் இஸ்ரேல் குறித்தவையாகும். கார்டியன், எல்பாய்ஸ், லெ மோண்டே ஆகிய பத்திரிகைகள் இஸ்ரேல் தொடர்பான 2 சதவீத ஆவணங்களை மட்டுமே பிரசுரித்தன. ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கும் இஸ்ரேலுடனான நெருங்கிய உறவுதான் இதற்கு காரணம்.
நியூயார்க் டைம்ஸ் கூட இஸ்ரேல் தொடர்பான செய்திகளை கூடுதலாக வெளியிடவில்லை. அமெரிக்காவில் யூத சமூகத்தின் செல்வாக்குதான் இதற்கு காரணம். ஆனாலும், விக்கிலீக்ஸ் இஸ்ரேல் தொடர்பான மிக ரகசியமான ஆவணங்களை வெளியிடும். அடுத்த ஆறுமாதத்திற்குள் கூடுதலான ஆவணங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். மத்தியஸ்தர் மூலமாக இஸ்ரேல் எங்களை தொடர்புக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா, சுவீடன், சி.ஐ.ஏ போல மொஸாதும் எங்களை விடாமல் பின்தொடர்கிறது என்பது உறுதியாகும். முன்னர் எங்களுக்கு அமெரிக்காவிலிருந்து அதிகாரப்பூர்வமாக நிதி கிடைத்துவந்தது. ஆனால், ஈராக்கில் அமெரிக்காவின் கொடூரத்தை விளக்கும் வீடியோவை வெளியிட்டதன் வாயிலாக அந்த நிதி முடக்கப்பட்டது.
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட 3700 ஆவணங்களை நாங்கள் வெளியிடுவோம். இதுத் தொடர்பான கூடுதல் விபரங்கள் இன்னும் 6 மாதத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்கும். 2006 ஆம் ஆண்டில் லெபனானுக்கு எதிரான யுத்தம், ஹமாஸ் கமாண்டர் மப்ஹூஹின் கொலை ஆகியன தொடர்பான சில விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளன. இவ்வாறு ஜூலியன் அஸென்ஜே பேட்டியளித்துள்ளார்.
ஜூலியன் அஸென்ஜேவின் பேட்டி சுருக்கம்:
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இஸ்ரேல் தொடர்பான 3700 ஆவணங்கள் உள்ளன. அதில் 2700 ஆவணங்களும் இஸ்ரேல் குறித்தவையாகும். கார்டியன், எல்பாய்ஸ், லெ மோண்டே ஆகிய பத்திரிகைகள் இஸ்ரேல் தொடர்பான 2 சதவீத ஆவணங்களை மட்டுமே பிரசுரித்தன. ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கும் இஸ்ரேலுடனான நெருங்கிய உறவுதான் இதற்கு காரணம்.
நியூயார்க் டைம்ஸ் கூட இஸ்ரேல் தொடர்பான செய்திகளை கூடுதலாக வெளியிடவில்லை. அமெரிக்காவில் யூத சமூகத்தின் செல்வாக்குதான் இதற்கு காரணம். ஆனாலும், விக்கிலீக்ஸ் இஸ்ரேல் தொடர்பான மிக ரகசியமான ஆவணங்களை வெளியிடும். அடுத்த ஆறுமாதத்திற்குள் கூடுதலான ஆவணங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். மத்தியஸ்தர் மூலமாக இஸ்ரேல் எங்களை தொடர்புக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா, சுவீடன், சி.ஐ.ஏ போல மொஸாதும் எங்களை விடாமல் பின்தொடர்கிறது என்பது உறுதியாகும். முன்னர் எங்களுக்கு அமெரிக்காவிலிருந்து அதிகாரப்பூர்வமாக நிதி கிடைத்துவந்தது. ஆனால், ஈராக்கில் அமெரிக்காவின் கொடூரத்தை விளக்கும் வீடியோவை வெளியிட்டதன் வாயிலாக அந்த நிதி முடக்கப்பட்டது.
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட 3700 ஆவணங்களை நாங்கள் வெளியிடுவோம். இதுத் தொடர்பான கூடுதல் விபரங்கள் இன்னும் 6 மாதத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்கும். 2006 ஆம் ஆண்டில் லெபனானுக்கு எதிரான யுத்தம், ஹமாஸ் கமாண்டர் மப்ஹூஹின் கொலை ஆகியன தொடர்பான சில விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளன. இவ்வாறு ஜூலியன் அஸென்ஜே பேட்டியளித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.
சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.
கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது . அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.
கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
காஸா இன்று உலகத் தொடர்புகள், உதவிகள் ஏதுமற்ற நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றது.
உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள், தண்ணீர், மின்சாரம் போன்றஅடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அவர்கள் இன்று வாழ்வோடும், சாவோடும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
எந்த நாட்டின் உதவிகளோ, ஒத்தாசைகளோ காஸாவிற்குள் நுழையாமல் இஸ்ரேலிய கொடுங்கோலர்களினால் தடுக்கப்பட்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு திறந்த வெளி சிறையில் சர்வதேச சட்டங்கள் (?) அனைத்தையும் கேள்விக் குறியாக்கி விட்டு காஸா மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேலின் இந்த மிருகத்தனமான அடக்குமுறையை தகர்க்க எழுந்து வந்த போராட்டமே, இந்த துருக்கியின் FREEDOM FLOTILLA மனித நேய நடவடிக்கை.
பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, துருக்கியிலிருந்து இந்தப் போராட்டப் பயணம் ஆரம்பமானது. காஸா மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களைத்தாக்கி அதில் பயணம் செய்த 42 நாடுகளின் 700 மனித நேய நடவடிக்கையாளர்களைில் 20 பேரைக் கொன்றிருக்கிறது இஸ்ரேலிய இராணுவம்.
இந்தச் சம்பவம் இஸரேலைப் பொறுத்த வரை, இரத்தகறைப்படிந்த அதன் காட்டுமிராண்டித்தனமான வரலாற்றில் மற்றுமொரு பக்கம் மாத்திரமே!.
பறிக்கப்பட்ட பலஸ்தீன் வரலாற்றில் இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை என்ன எண்ணிக்கையில் அடக்கத்தான் முடியுமா?
இத்தகைய மனிதாபினத்திற்கு எதிரான இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தின் கொடுமையை விட கொடிய மோசமான ஒன்றை, மறைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் மறந்து போயிருக்கின்றோம்.
அதுதான் பலஸ்தீனர்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை அங்கிகரித்து மௌனிகளாக இருக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆட்சியாளர்களின் அமெரிக்க நலன் சார்ந்த சுயநல அரசியல்.
அந்த அரசியல்தான் பலஸ்தீனை, முதல் கிப்லாவை சுமந்திருக்கும் அந்த புண்ணிய பூமியை இஸ்ரேலுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது.
இஸ்லாத்தின் மூன்று முக்கிய கண்ணிய மிக்க தளங்களாக குறிக்கப்படுபவை பைத்தல் முகத்திஸ், கஃபதுல்லாஹ், மதீனா முனவ்வரா என்ற அல்லாஹ்வின் இல்லங்கள்.
இவற்றில் ஒன்றைான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலுக்கு பறி கொடுத்து விட்டு மற்றைய இரண்டு முக்கிய மஸ்ஜித்களான மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வையும், மதினாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியையும் மட்டும் நிர்வகிக்கும் பாதுகாவலர்களாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அரபு ஆட்சியாளர்களின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த தந்திர அரசியலை இதிலிருந்து தெளிவாக புரிய முடிகிறது.
பைத்துல் முகத்தஸை இஸரேலுக்கு விட்டுக்கொடுத்து விட்டு, ஏனைய இரண்டு மஸ்ஜித்களை மட்டும் பாதுகாப்போராய் (காதிமுல் ஹரமைன்) தம்மை பிரகடனப்படுத்திக்கொண்டிருப்பது அமெரிக்காவுடனான நட்பை பாதுகாக்கும் அரசியல் தந்திரோபாயமாகும்.
இந்த அரபு ஆட்சியாளர்கள், நபி(ஸல்) அவர்கள் மூன்று பள்ளிவாசல்களை முக்கிய பள்ளிவாசல்களாக குறிப்பிடும் போது ஒன்றை மட்டும் ஏன் மூடி மறைக்க வேண்டும். பைத்துல் மகத்திஸை பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?
இதுதான் மத்திய கிழக்கின் மன்னாதி மன்னர்களின் அரசியல் மந்திரம்.
பைத்துல் மகத்திஸின் பாதுகாவலர்களாக இவர்கள் தம்மை பிரகடப்படுத்திக் கொண்டால் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு கடமையாகிறது.
அந்தக் கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது? பைத்துல் முகத்தஸை எப்படி பாதுகாப்பது? அதனை பாதுகாப்பதற்கு முதலில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டுமே.
அதுவும் இஸ்ரேலோடு எப்படி போராடுவது?
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையல்லவா? அந்த செல்லப்பிள்ளையை சீண்டிப்பார்க்க அமெரிக்கா விடுமா?
இஸ்ரேலோடு போராடப் போனால் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள வேண்டிவரும். அமெரிக்கா என்ற ஒட்சிசனை உள்வாங்காமல் அரபு ஆட்சியாளர்களால் உயிர் வாழ முடியாது.
எனவே முக்கிய மஸ்ஜித்கள் மூன்றில் இரண்டை தம்வசம் வைத்துக் கொண்டு ஒன்றை இஸ்ரேலுக்கு கொடுத்திருக்கின்றார்கள். இரண்டின் பாதுகாவலர்களாக “இவர்களும்” , மற்றைய ஒன்றின் பாதுகாவலான “அவர்களும்” இருக்கின்றனர்.
இதுவே இவர்களை இஸ்ரேலின் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கச் செய்கிறது. அட்டகாசங்களை அடக்கி வாசிக்கச் செய்கிறது.
இன்று இந்த அரபு ஆட்சியாளர்கள் அல்குர்ஆனின் கட்டளைக்கு நேர் மாறாக தனது பாதுகாவலனாக அமெரிக்காவை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இவர்கள் இஸ்லாத்தை மாற்ற முயற்சி செய்கின்றார்கள்.
இஸரேலும், அரபு நாடுகளும் தமது அரசியல் பாதுகாவலனாக அமெரிக்காவையே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ரீதியில் அமெரிக்காவிற்கு இஸ்ரேலும் அரபு நாடுகளும் ஒரே சமம்தான்.
மூவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாளர்கள்,நண்பர்கள் தான்.
Monday, December 27, 2010
பாலஸ்தீனும்-ஊடகங்களின் பொய் முகமும்
ஆக்ரமிப்பும் திருப்பித் தாக்குதலும் -
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண இயலும். முன்பதிவு செய்பவர் என்ன விஷயத்தைக் குறித்துப் பேசப் போகிறார் என்று கேட்பது சகஜம். மத்திய ஆசியாவைக் குறித்து பேச வேண்டியதெனில், அவர் கொடுப்பது “மத்திய ஆசியாவின் தற்போதைய பிரச்சினைகள்” என்ற தலைப்பாகும். காரணம், எச்சமயத்திலும் அங்கு பிரச்னைகள் இல்லாமல் இருக்காது என்று சோம்ஸ்கி கூறுகிறார். மேலும், “ஏகாதிபத்திய சக்திகளின், முக்கியமாக அமெரிக்காவின் நீண்டகாலப் பொருளாதார நிலைநிற்பிற்கு மத்திய ஆசியாவில் எப்பொழுதும் பிரச்சினைகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும்”(Powers and Prospects By Pro.Chomski Page 136-144) என்றும் கூறுகிறார். இது எண்ணெய் நாடுகளுக்கும், ஆயுத விற்பனைக்கும் கூடுதல் நெருக்கமுள்ள ஒரு தந்திரமாகும்.
மத்திய ஆசியாவில் 2000 செப் 28 –ல் ஆரம்பித்த பிரச்னைகளை ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டன என்பதை இனி ஒவ்வொன்றாக காணலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குண்டான தனித்துவமிக்க அர்த்தங்கள் உண்டு. ஆக்ரமிப்பு, தற்காப்பு என்ற இரு சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரான அர்த்தங்களைத் தரும். ஒன்று அநியாயமாக மற்றவர்களுக்கு உரியதைப் பறித்துக்கொள்வதையும், மற்றொன்று அவ்வாறு ஆக்ரமிக்க வருபவர்களை நியாயமாக எதிர்த்துத் தாக்குவதையும் குறிக்கும்.
மேற்குலக பத்திரிக்கைகளையும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களையும் கவனிப்பவர்களுக்கு, ஒரு தடவை கூடப் பாலஸ்தீனியர்களின் எதிர்தாக்குதலை “தற்காப்பு யுத்தம்” என்று கூற அவர்கள் தயாராகாதது நன்றாகத் தெரியும். அவர்களின் பார்வையில் இஸ்ரேலியர்களின் யுத்தம் மட்டுமே எப்பொழுதும் தற்காப்பு/எதிர் தாக்குதலாக இருக்கும். பாலஸ்தீனியர்களை அக்கிரமக்காரர்கள் என்றும் இஸ்ரேலை நீதி/நியாயவான்களாகவும் சித்தரித்ததில் இந்த இரு சொற்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல. மேற்கத்திய ஊடகங்களிலும் அதில் வரும் செய்தியின் நம்பகத்தன்மையின் அளவினைக் குறித்தும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் அவைகளை அப்படியே வாந்தியெடுக்கும் இந்திய ஊடகங்களில் வரும் வார்த்தைப் பிரயோகங்களும் இதற்கே வழிவகுக்கின்றன.
மத்திய ஆசியாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு சமாதான நடவடிக்கையின் மூலம் தான் என்பதே இப்போதைய நிலை. ஆனால் சமாதான நடவடிக்கை என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது அமெரிக்க அரசாங்கமாகும். அதன்படி 1967 – ல் இஸ்ரேல் ஆக்ரமித்த பாலஸ்தீன் பகுதியை பாலஸ்தீனியர்களுக்கு விட்டுக் கொடுப்பது என்பது சமாதான நடவடிக்கையின் ஓர் அங்கமன்று. அப்படியொரு கோரிக்கை வைப்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தப்படி சமாதான நடவடிக்கையைத் தகர்க்கும் காரியமாகும்.
பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை இஸ்ரேல் என்பது ஓர் ஆக்ரமிப்பு நாடாகும். காஸா (Gaza) மற்றும் மேற்குக்கரைப் (West Bank) பகுதிகளில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேல் இராணுவ வீரனும் ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவனே. அவனை எதிர்கொள்வதென்பது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதன் ஓர் அங்கமாகத் தான் பாலஸ்தீனியர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மேற்குலகிற்கு இவர்கள் பாதுகாப்பு(?) இராணுவமாகும். இஸ்ரேலியர்களை ஆக்ரமிப்பாளர்களாக, ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவர்களாக சித்தரிக்க ஒருமுறை கூட இந்திய பத்திரிக்கை நிருபர்களுக்குத் துணிவில்லை. (உதா.Reports from The Hindu daily 4,6,9,10,14 Oct 2000 By Sridhar Krishna Swamy, Kesava Menon ). மேலும் பாலஸ்தீனியர்கள் ஒரு போதும் சுதந்திரப் போராளிகளாகவும் சித்தரிக்கப்பட்டதில்லை.
இஸ்ரேல் சட்டரீதியாக ஒரு நாடானாலும் இல்லையெனினும் காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் எதிர் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்கள் சுதந்திரப் போராளிகள் என்பதில் ஐயமில்லை. இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை ஒருதலைபட்சமாக குற்றப்படுத்துதலை விட்டு ஒதுங்கி நின்றதை விட்டால் மற்றெல்லா காரியங்களிலும் மேற்கத்திய ரீதியை அப்படியே காப்பியடிக்கவே செய்தனர்.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்கள் எண்ணிலடங்கா. அது போன்ற ஒரு மோதல் செப். 28 2000 அன்று மேற்குக்கரை மற்றும் காஸா இரு பகுதிகளிலும் ஆரம்பித்தது. இம்முறை இஸ்ரேலிய இராணுவமும் பலஸ்தீனியர்களும் நேரடியாக மோதினர். பல முறை குடியேற்ற யூதர்களும் இதில் சேர்ந்து கொண்டனர். அமெரிக்காவின் முக்கியத் தொலைக்காட்சிகளில் மூன்று – ABC யின் World New Tonight, NBC –யின் Nightly News, CBS –ன் Evening News – இச்சம்பவங்களைப் பற்றிப் பதிவறிக்கை சமர்ப்பித்தனர். 2000 செப். 28 க்கும் நவ – 2 க்கும் இடையில் 99 அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 4 –ல் மட்டுமே மேற்குக்கரையும் காஸாவும் இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகள் என நேரடியாகக் கூறினர். இதன் காரணம் வெட்டவெளிச்சமானது. “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்”(Palestinian Violence) என்ற வார்த்தை பிரயோகம் இவ்வறிக்கை முழுவதும் பரவிக் கிடந்தது.
மேற்குக்கரை மற்றும் காஸா 1948 க்குப் பின் இஸ்ரேல் ஆக்ரமித்த இடங்களாகும். அதாவது இந்த இரண்டு பிரதேசங்களில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேலிய சிப்பாயும் மற்றவர்களைப் பொறுத்தவரை அன்னிய ஆக்ரமிப்பாளனாவான். ஆக்ரமிக்கும் நாட்டினை ஆயுதம் உபயோகித்து எதிர்ப்பது உலக யுத்த சட்டப்படி நியாயமானதாகும். யுத்தத்தின் மூலம் ஆக்ரமித்த இடத்தில் வெற்றி பெற்ற நாடு அவர்களின் மக்களை குடியிருத்துவதையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கிறது. மேற்குக்கரையிலும் காஸாவிலும் உள்ள யூதக் குடியேற்றக்காரர்கள் இச்சட்டப்படி குற்றவாளிகளாவர். இந்த விஷயம் ஒன்றும் வெளிவராதிருப்பதற்கும், அவை பூதாகாரமாக்கப்படாதிருப்பதற்கும் தங்களது சொந்த இடத்திற்காக ஆயுதமெடுத்துப் போராடும் பாலஸ்தீனியர்களை, “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்” என்ற வார்த்தைக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும், மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் இஸ்ரேல் அநியாயமாக பிடித்தெடுத்த பகுதிகள் எனக் கூறாதிருப்பதும் அவசியமானதல்லவா?
இதே முறையில் 1990-91 –ல் இராக் குவைத்தை ஆக்ரமித்தபோது இதே தொலைக்காட்சி ஊடகங்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டது என்பதை சற்று ஆராய்ந்தால் இவர்களின் வஞ்சக ஏகாதிபத்திய முகம் கோரமாக வெளிப்படுவதைக் காணலாம். ABC-ல் பீட்டர் ஜென்னிங்ஸ் சமர்ப்பித்த அறிக்கைகளில் “இராக் ஆக்ரமித்த குவைத் பகுதி” (Iraqi – Occupied Kuwait) என்றிருந்தது. ஒரு குவைத் சிப்பாயிடம் அவரின் கேள்வி எவ்வாறு இருந்தது என்பதை கவனியுங்கள்: “இராக் ஆக்ரமிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறித்து எங்களிடம் கூறுங்கள்” (ABC, World News Tonight, 6 Sept 1990). CBS –ல் டான் ராதரின் ரிப்போர்ட் குவைத்தை ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசமாக குறிப்பிட்டது(CBS, Evening News 11 Sept 1990). குவைத்தின் பாகங்களை சில மாதங்கள் ஆக்ரமித்திருந்த ஈராக்கை இப்படி விமர்சிப்பதற்குத் தயங்காத அமெரிக்க ஊடகங்களுக்கு, 40 வருடங்களாக காஸாவையும் வெஸ்ட்பாங்கையும் ஆக்ரமித்து வைத்துக்கொண்டிருப்பது மட்டுமன்றி, தனது மக்களை அங்கு குடியேற்றி வைத்திருக்கும் இஸ்ரேலை ஒரு தடவைக் கூட ஆக்ரமிப்பு நாடாக எடுத்துக் கூற மனமும், நடுநிலை-நீதிமனப்பாங்கும் இல்லாதிருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.
மேற்குக்கரையில் ஒரு இஸ்ரேலிய இராணுவ முகாமை காலி செய்ய வேண்டிய நிலை வந்த போது அதைக் குறித்து CBS இவ்வாறு கூறியது: “பாலஸ்தீனியர்களின் வன்முறைகளைப் பொறுக்கமுடியாமல் இஸ்ரேல் இடம் பெயர்ந்தது” (CBS Evening News 4 Oct 2000, 7 Oct 2000, 8 Oct 2000). இவ்விடங்களை கைப்பற்றிய(ஆக்ரமித்த) இடங்களாக சித்தரிக்காதது மட்டுமல்ல, இஸ்ரேலின் பாகங்களாக இவற்றைக் கூறவும் இவர்கள் தயங்கவில்லை. மேற்குக்கரையிலுள்ள தனது சட்டவிரோத இராணுவ முகாமை இஸ்ரேல் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்த போது அதனை NBC Nightly News –ல் டோம்புரோக்கோ, “எக்காலமும் இஸ்ரேலில் கூடிக்கொண்டேயிருக்கும் வன்முறைகள்” என்று எடுத்துக் கூறினார்(Tom Brokaw, NBC Nightly News, 2 Oct 2000). இங்கு பலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியை இஸ்ரேலின் பகுதியாக சித்தரித்திருப்பதை கவனியுங்கள். ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு நாட்டின் பகுதியாக சித்தரிக்கும் அநியாயம் இது போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.
Courtesy : Falastheenum Paschatya Madhyamangalum(Malayalam) (Political Science) By N.M.Hussain
தொகுப்பாசிரியர்: அபூசுமையா
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண இயலும். முன்பதிவு செய்பவர் என்ன விஷயத்தைக் குறித்துப் பேசப் போகிறார் என்று கேட்பது சகஜம். மத்திய ஆசியாவைக் குறித்து பேச வேண்டியதெனில், அவர் கொடுப்பது “மத்திய ஆசியாவின் தற்போதைய பிரச்சினைகள்” என்ற தலைப்பாகும். காரணம், எச்சமயத்திலும் அங்கு பிரச்னைகள் இல்லாமல் இருக்காது என்று சோம்ஸ்கி கூறுகிறார். மேலும், “ஏகாதிபத்திய சக்திகளின், முக்கியமாக அமெரிக்காவின் நீண்டகாலப் பொருளாதார நிலைநிற்பிற்கு மத்திய ஆசியாவில் எப்பொழுதும் பிரச்சினைகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும்”(Powers and Prospects By Pro.Chomski Page 136-144) என்றும் கூறுகிறார். இது எண்ணெய் நாடுகளுக்கும், ஆயுத விற்பனைக்கும் கூடுதல் நெருக்கமுள்ள ஒரு தந்திரமாகும்.
மத்திய ஆசியாவில் 2000 செப் 28 –ல் ஆரம்பித்த பிரச்னைகளை ஊடகங்கள் எவ்வாறு வெளியிட்டன என்பதை இனி ஒவ்வொன்றாக காணலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குண்டான தனித்துவமிக்க அர்த்தங்கள் உண்டு. ஆக்ரமிப்பு, தற்காப்பு என்ற இரு சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரான அர்த்தங்களைத் தரும். ஒன்று அநியாயமாக மற்றவர்களுக்கு உரியதைப் பறித்துக்கொள்வதையும், மற்றொன்று அவ்வாறு ஆக்ரமிக்க வருபவர்களை நியாயமாக எதிர்த்துத் தாக்குவதையும் குறிக்கும்.
மேற்குலக பத்திரிக்கைகளையும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களையும் கவனிப்பவர்களுக்கு, ஒரு தடவை கூடப் பாலஸ்தீனியர்களின் எதிர்தாக்குதலை “தற்காப்பு யுத்தம்” என்று கூற அவர்கள் தயாராகாதது நன்றாகத் தெரியும். அவர்களின் பார்வையில் இஸ்ரேலியர்களின் யுத்தம் மட்டுமே எப்பொழுதும் தற்காப்பு/எதிர் தாக்குதலாக இருக்கும். பாலஸ்தீனியர்களை அக்கிரமக்காரர்கள் என்றும் இஸ்ரேலை நீதி/நியாயவான்களாகவும் சித்தரித்ததில் இந்த இரு சொற்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல. மேற்கத்திய ஊடகங்களிலும் அதில் வரும் செய்தியின் நம்பகத்தன்மையின் அளவினைக் குறித்தும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் அவைகளை அப்படியே வாந்தியெடுக்கும் இந்திய ஊடகங்களில் வரும் வார்த்தைப் பிரயோகங்களும் இதற்கே வழிவகுக்கின்றன.
மத்திய ஆசியாவின் பிரச்சினைகளுக்கு தீர்வு சமாதான நடவடிக்கையின் மூலம் தான் என்பதே இப்போதைய நிலை. ஆனால் சமாதான நடவடிக்கை என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது அமெரிக்க அரசாங்கமாகும். அதன்படி 1967 – ல் இஸ்ரேல் ஆக்ரமித்த பாலஸ்தீன் பகுதியை பாலஸ்தீனியர்களுக்கு விட்டுக் கொடுப்பது என்பது சமாதான நடவடிக்கையின் ஓர் அங்கமன்று. அப்படியொரு கோரிக்கை வைப்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தப்படி சமாதான நடவடிக்கையைத் தகர்க்கும் காரியமாகும்.
பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை இஸ்ரேல் என்பது ஓர் ஆக்ரமிப்பு நாடாகும். காஸா (Gaza) மற்றும் மேற்குக்கரைப் (West Bank) பகுதிகளில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேல் இராணுவ வீரனும் ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவனே. அவனை எதிர்கொள்வதென்பது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதன் ஓர் அங்கமாகத் தான் பாலஸ்தீனியர்கள் எண்ணுகின்றனர். ஆனால் மேற்குலகிற்கு இவர்கள் பாதுகாப்பு(?) இராணுவமாகும். இஸ்ரேலியர்களை ஆக்ரமிப்பாளர்களாக, ஆக்ரமிப்பு நாட்டைச் சேர்ந்தவர்களாக சித்தரிக்க ஒருமுறை கூட இந்திய பத்திரிக்கை நிருபர்களுக்குத் துணிவில்லை. (உதா.Reports from The Hindu daily 4,6,9,10,14 Oct 2000 By Sridhar Krishna Swamy, Kesava Menon ). மேலும் பாலஸ்தீனியர்கள் ஒரு போதும் சுதந்திரப் போராளிகளாகவும் சித்தரிக்கப்பட்டதில்லை.
இஸ்ரேல் சட்டரீதியாக ஒரு நாடானாலும் இல்லையெனினும் காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் எதிர் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்கள் சுதந்திரப் போராளிகள் என்பதில் ஐயமில்லை. இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை ஒருதலைபட்சமாக குற்றப்படுத்துதலை விட்டு ஒதுங்கி நின்றதை விட்டால் மற்றெல்லா காரியங்களிலும் மேற்கத்திய ரீதியை அப்படியே காப்பியடிக்கவே செய்தனர்.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்கள் எண்ணிலடங்கா. அது போன்ற ஒரு மோதல் செப். 28 2000 அன்று மேற்குக்கரை மற்றும் காஸா இரு பகுதிகளிலும் ஆரம்பித்தது. இம்முறை இஸ்ரேலிய இராணுவமும் பலஸ்தீனியர்களும் நேரடியாக மோதினர். பல முறை குடியேற்ற யூதர்களும் இதில் சேர்ந்து கொண்டனர். அமெரிக்காவின் முக்கியத் தொலைக்காட்சிகளில் மூன்று – ABC யின் World New Tonight, NBC –யின் Nightly News, CBS –ன் Evening News – இச்சம்பவங்களைப் பற்றிப் பதிவறிக்கை சமர்ப்பித்தனர். 2000 செப். 28 க்கும் நவ – 2 க்கும் இடையில் 99 அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 4 –ல் மட்டுமே மேற்குக்கரையும் காஸாவும் இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகள் என நேரடியாகக் கூறினர். இதன் காரணம் வெட்டவெளிச்சமானது. “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்”(Palestinian Violence) என்ற வார்த்தை பிரயோகம் இவ்வறிக்கை முழுவதும் பரவிக் கிடந்தது.
மேற்குக்கரை மற்றும் காஸா 1948 க்குப் பின் இஸ்ரேல் ஆக்ரமித்த இடங்களாகும். அதாவது இந்த இரண்டு பிரதேசங்களில் காணப்படும் எந்த ஓர் இஸ்ரேலிய சிப்பாயும் மற்றவர்களைப் பொறுத்தவரை அன்னிய ஆக்ரமிப்பாளனாவான். ஆக்ரமிக்கும் நாட்டினை ஆயுதம் உபயோகித்து எதிர்ப்பது உலக யுத்த சட்டப்படி நியாயமானதாகும். யுத்தத்தின் மூலம் ஆக்ரமித்த இடத்தில் வெற்றி பெற்ற நாடு அவர்களின் மக்களை குடியிருத்துவதையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கிறது. மேற்குக்கரையிலும் காஸாவிலும் உள்ள யூதக் குடியேற்றக்காரர்கள் இச்சட்டப்படி குற்றவாளிகளாவர். இந்த விஷயம் ஒன்றும் வெளிவராதிருப்பதற்கும், அவை பூதாகாரமாக்கப்படாதிருப்பதற்கும் தங்களது சொந்த இடத்திற்காக ஆயுதமெடுத்துப் போராடும் பாலஸ்தீனியர்களை, “பாலஸ்தீனியர்களின் வன்முறைகள்” என்ற வார்த்தைக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும், மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் இஸ்ரேல் அநியாயமாக பிடித்தெடுத்த பகுதிகள் எனக் கூறாதிருப்பதும் அவசியமானதல்லவா?
இதே முறையில் 1990-91 –ல் இராக் குவைத்தை ஆக்ரமித்தபோது இதே தொலைக்காட்சி ஊடகங்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டது என்பதை சற்று ஆராய்ந்தால் இவர்களின் வஞ்சக ஏகாதிபத்திய முகம் கோரமாக வெளிப்படுவதைக் காணலாம். ABC-ல் பீட்டர் ஜென்னிங்ஸ் சமர்ப்பித்த அறிக்கைகளில் “இராக் ஆக்ரமித்த குவைத் பகுதி” (Iraqi – Occupied Kuwait) என்றிருந்தது. ஒரு குவைத் சிப்பாயிடம் அவரின் கேள்வி எவ்வாறு இருந்தது என்பதை கவனியுங்கள்: “இராக் ஆக்ரமிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறித்து எங்களிடம் கூறுங்கள்” (ABC, World News Tonight, 6 Sept 1990). CBS –ல் டான் ராதரின் ரிப்போர்ட் குவைத்தை ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசமாக குறிப்பிட்டது(CBS, Evening News 11 Sept 1990). குவைத்தின் பாகங்களை சில மாதங்கள் ஆக்ரமித்திருந்த ஈராக்கை இப்படி விமர்சிப்பதற்குத் தயங்காத அமெரிக்க ஊடகங்களுக்கு, 40 வருடங்களாக காஸாவையும் வெஸ்ட்பாங்கையும் ஆக்ரமித்து வைத்துக்கொண்டிருப்பது மட்டுமன்றி, தனது மக்களை அங்கு குடியேற்றி வைத்திருக்கும் இஸ்ரேலை ஒரு தடவைக் கூட ஆக்ரமிப்பு நாடாக எடுத்துக் கூற மனமும், நடுநிலை-நீதிமனப்பாங்கும் இல்லாதிருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.
மேற்குக்கரையில் ஒரு இஸ்ரேலிய இராணுவ முகாமை காலி செய்ய வேண்டிய நிலை வந்த போது அதைக் குறித்து CBS இவ்வாறு கூறியது: “பாலஸ்தீனியர்களின் வன்முறைகளைப் பொறுக்கமுடியாமல் இஸ்ரேல் இடம் பெயர்ந்தது” (CBS Evening News 4 Oct 2000, 7 Oct 2000, 8 Oct 2000). இவ்விடங்களை கைப்பற்றிய(ஆக்ரமித்த) இடங்களாக சித்தரிக்காதது மட்டுமல்ல, இஸ்ரேலின் பாகங்களாக இவற்றைக் கூறவும் இவர்கள் தயங்கவில்லை. மேற்குக்கரையிலுள்ள தனது சட்டவிரோத இராணுவ முகாமை இஸ்ரேல் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்த போது அதனை NBC Nightly News –ல் டோம்புரோக்கோ, “எக்காலமும் இஸ்ரேலில் கூடிக்கொண்டேயிருக்கும் வன்முறைகள்” என்று எடுத்துக் கூறினார்(Tom Brokaw, NBC Nightly News, 2 Oct 2000). இங்கு பலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியை இஸ்ரேலின் பகுதியாக சித்தரித்திருப்பதை கவனியுங்கள். ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு நாட்டின் பகுதியாக சித்தரிக்கும் அநியாயம் இது போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.
Courtesy : Falastheenum Paschatya Madhyamangalum(Malayalam) (Political Science) By N.M.Hussain
தொகுப்பாசிரியர்: அபூசுமையா
விக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்?
"the vast majority (of Indian muslims) remain committed to the Indian state" --- INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST, 2(c), wikileaks cablegate.
உலகை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் விக்கிலீக்ஸ் மூலமாக கசிந்த, இந்திய முஸ்லிம்கள் குறித்த ஆவணத்தில் இருக்கும் ஒரு கருத்தை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள்.
இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் (David C.Mulford) கருத்துக்களை கொண்ட அந்த ஆவணத்தில் இருந்து சில தகவல்களை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். அந்த ஆவணத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.
------------------------------
Friday, 02 December 2005, 12:54
C O N F I D E N T I A L SECTION 01 OF 06 NEW DELHI 009127
SUBJECT: INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST
RECRUITMENT OF JUVENILES (C-CT5-00623)
REF: STATE 211901
NEW DELHI 00009127 001.2 OF 006
இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று மற்றும் பயங்கரவாத ஆதரவின்மை:
2.(C). 1991ஆம் ஆண்டு இந்திய சென்சஸ் படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை பதினைந்து சதவிதத்திற்கும் சற்று குறைவாக உள்ளது. 1981-2001 இடையேயான காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகை 24% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மைனாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.
இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது அதனை விட மேலாகவோ முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பீகார் (12 மில்லியன்), மேற்கு வங்கம் (16 மில்லியன்), உத்தரபிரதேசம் (24 மில்லியன்) போன்றவை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மாநிலங்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (92%) சன்னிகள், ஏனையோர் ஷியாக்கள்.
இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 150 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு இந்தியா). மற்ற எந்த இந்திய குழுக்களையும் விட அதிக வறுமையில் வாடுபவர்களும் முஸ்லிம்கள் தான்.
சமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.
சமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.
குறைந்த அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே, இந்திய அரசியல் தங்களது துயரங்களுக்கு பதில் சொல்லாது என்றெண்ணி Pan-Islamic (உலக முஸ்லிம்களை ஒரே இஸ்லாமிய நாட்டின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கொள்கையை உடைய இயக்கங்கள்) மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த இயக்கங்கள் சில நேரங்களில் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றன.
இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் வளரும் பொருளாதாரம் போன்றவை முஸ்லிம் இளைஞர்களை இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற வைத்துள்ளது. இது, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதையும், அந்த இயக்கங்கள் செயல்படுவதையும் பெருமளவு குறைத்திருக்கின்றது.
3.(C). மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைய இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் மதச்சார்பற்ற அமைப்புகளிலேயே சேர்கின்றனர், ஆதரவளிக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், பொதுவாக, முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளில் சேர்வது, அரசியல் சக்தியாக பா.ஜ.க உருவாகுவதை தடுக்கத்தான்.
இந்திய நாட்டிற்கு எதிராகவும், முஸ்லிமல்லாத இந்திய மக்களுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மிக குறைவே. காஷ்மீருக்கு வெளியே இந்த இயக்கங்களுக்கு செல்வாக்கோ, புகழோ இல்லை.
7.(C). பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவை பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ பெற்றதில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் மிதவாத போக்கை கடைபிடிக்கின்றனர்.
பழமைவாத சன்னி அரசியல் இயக்கங்களான ஜமாத் இஸ்லாமி மற்றும் தியோபந்தி பிரிவு போன்றவை இஸ்லாமிய குறுகியவாதத்தை ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் சிலர் ஒசாமா பின் லேடனை admire செய்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளின் தலைவர்கள் இது போன்ற தங்கள் பார்வைகளை பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. அதுபோல, பேச்சு அளவில் தான் இவர்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இருக்கின்றதே தவிர, அதை தவிர்த்து வேறுவிதமான ஆதரவை இவர்கள் பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாக தெரியவில்லை.
அப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவ்வப்போது நடக்கும் மதக்கலவரங்கள் போன்றவை, சிறிய அளவிலான முஸ்லிம்களை வன்முறை என்னும் கோட்டையும் தாண்டி தீவிரவாதத்தின் பக்கம் அழைத்து சென்றிருக்கின்றன.
இந்திய மதரசாக்கள்:
13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன் பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
வட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.
இந்திய மதரசாக்கள்:
13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன் பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
வட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.
------------------------------
இந்தியாவில் பயங்கரவாதம் பல வகைகளில் இருக்கிறதென்றும் (இந்து, இஸ்லாமிய மற்றும் சீக்கிய), அவர்கள் அனைவரும் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்தாலும், இந்த ஆவணத்தில் நாம் பார்க்கபோவது இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்ப்பது பற்றிதான் என்று கூறி தொடங்கும் அந்த நீண்ட ஆவணம்,
முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும்.
- காஷ்மீர்,
- சிறுவர்களை பயங்கரவாதத்திற்கு சேர்ப்பது,
- பயங்கரவாத எண்ணங்களை கொண்ட அமைப்புகளின் பட்டியல்,
- எதனால் சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர்?,
- தங்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கூறும் காரணங்கள்,
- முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்,
முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும்.
விக்கிலீக்ஸ்சை விடுவோம்.....
எங்கள் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் அந்த மிகச் சில சகோதரர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது...
நாங்கள் முஸ்லிம்கள்...நாங்கள் இந்தியர்கள்...
அன்றும் சரி, இன்றும் சரி, (இன்ஷா அல்லாஹ்) என்றும் சரி, தொடர்ந்து எங்கள் பங்களிப்பை எங்கள் நாட்டிற்கு செய்து கொண்டிருப்போம். நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டே இருங்கள். உங்களை திருப்திபடுத்துவது எங்கள் வேலையில்லை. நல்ல செயல்களை செய்து இறைவனை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை. இறைவன் எங்கள் உள்ளங்களை நன்கு அறிவான்.
இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
One can read the entire document from here
My sincere thanks to:
1. ibnlive.com
References:
1. WikiLeaks Cablegate: Indian Muslim population largely unattracted to extremism - ibnlive.com, reproduced from wikileaks.ch
Sunday, December 26, 2010
பதட்டத்தில் RSS பயங்கரவாத இயக்கம்
குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.
1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை.
குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர்.
குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.
இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது.
தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.
செய்தி:தேஜஸ்
Saturday, December 25, 2010
மும்பையில் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவல்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, பயங்கரவாதிகள் நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர், என, அந்நகர போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூ ராய் தெரிவித்துள்ளார். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெளி மாநிலத்திலிருந்து மும்பாயுக்குள் புகுந்துள்ளதாகவும், ஹிந்து பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அந்த நான்கு பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்'ல் பயிற்சி பெற்றவர்கள்.
மும்பை, ஆமதாபாத் நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உளவுத் துறையினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை எச்சரித்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூராய், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளது உண்மையே, என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. பயங்கரவாதிகளின் வயது 20 முதல் 30க்குள் இருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இவர்கள் ஊடுருவியிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுருக்கிறோம், ஊடுருவிய நபர்களது பெயர்கள் பாரத் சென், மாரிப்பு ராய், தாக்கர் வாலே, அர்சுமன் சங்கே. இவ்வாறு ஹிமன்சூராய் கூறினார்
மும்பை, ஆமதாபாத் நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உளவுத் துறையினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை எச்சரித்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூராய், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளது உண்மையே, என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. பயங்கரவாதிகளின் வயது 20 முதல் 30க்குள் இருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இவர்கள் ஊடுருவியிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுருக்கிறோம், ஊடுருவிய நபர்களது பெயர்கள் பாரத் சென், மாரிப்பு ராய், தாக்கர் வாலே, அர்சுமன் சங்கே. இவ்வாறு ஹிமன்சூராய் கூறினார்
Subscribe to:
Posts (Atom)