Thursday, March 3, 2011

அமெரிக்காவோ ஐநாவோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும்-கடாபி

ட்ரிபோலி: லிபியாவில் நடப்பது வன்முறையாளர்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சினை. இதை நானே பார்த்துக் கொள்வேன். இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோ அல்லது அவர்களின் கைப்பாவையான ஐநா சபையோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கர்னல் மொம்மர் கடாபி.

லிபியாவில் அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் எச்சரித்து உள்ளன.

பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பிரிட்டன் எச்சரித்தது.

அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சுற்றி நிறுத்தி உள்ளது. இதனால் அதிபர் கடாபி கடும் கோபம் அடைந்துள்ளார்.

மேற்கு நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், லிபியாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.சபைக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே லிபியாவுக்கு எதிராக ஐ.நா. நடந்து கொள்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கைப்பாவையாகவே ஐநா நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது. ஐ.நா. சபையோ அல்லது மேற்கு நாடுகளோ லிபியா விவகாரத்தில் தலையிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்.

அவர்கள் எங்கள் மண்ணுக்குள் கால் வைத்தால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும். எங்களுக்கு எதிராக இருக்கும் கடைசி மனிதரையும் கொல்வோம், என்றார்.

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா!



ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.

ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப் பட்டது.

இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் "அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்" என்றார்.

ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் "இஸ்லாம் & முஸ்லிம்" என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான "என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?" என்பதை முன் வைத்தார்.
இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.

மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.

"மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.

----ooOoo----

குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).
குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.

மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் 'ஜம்மியத்துல் முஹ்ஸினாத்' பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).

நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், "தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக"ப் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.
பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.

"வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்" என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.

----ooOoo----

ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், "முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்" என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CrPC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

"முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது... சத்தியமே வென்றது" என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.
கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். "மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்" என்றார் டாக்டர் ஜைனப்.

சத்திய மார்க்கம் - அபூ ஸாலிஹா

நஜ்முத்தீன் அர்பகான் - மறக்கமுடியா​த இஸ்லாமிய ஆளுமை


துருக்கில் நாற்பது ஆண்டுகளாக மதசார்பற்ற சக்திகளுக்கெதிராகவும், ராணுவ பயங்கரவாதத்திற்கெதிராகவும் மனந்தளராமல் போராடிய நஜ்முதீன் அர்பகான் நேற்று(27/02/2011) இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டார்.

துருக்கியின் இஸ்லாமிய பாரம்பரியத்தை தகர்த்தெறிந்த முஸ்தபா கமால் பாஷாவின் வழித் தோன்றல்களால் பல்வேறு அடக்குமுறைக்கு ஆளான பிறகும் எவ்வித சமரசத்திற்குமிடையின்றி ஜனநாயக உரிமைகளுக்காக போராட ஐந்து கட்சிகளை உருவாக்க வேண்டிய சூழல் அர்பகானுக்கு ஏற்பட்டது. கடைசியாக நோயால் படுக்கையில் கிடக்கும் வேளையில் ஃபெசிலிட்டி கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த பத்தாண்டுகளாக துருக்கியை உலக அரங்கில் சக்திமிக்க நாடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் மற்றும் அதிபர் அப்துல்லாஹ் குல் ஆகியோருக்கு குரு அர்பகானாவார்.
அர்பகானின் கொள்கைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் உருதுகானின் இஸ்லாமிய வாதிகளுக்கு ஆதரவான நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி(ஏ.கே.கட்சி) உருவானது. இக்கட்சி 2002 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டியது. அர்பகான் அரசியல் களத்தில் சந்தித்த சோதனைகள்தாம் ஏ.கே.கட்சிக்கு சக்தி மிகுந்த அடித்தளத்தை துருக்கியில் உருவாக்கியது. இதில் அரசியல் நோக்கர்களுக்கு இரண்டு வித அபிப்ராயம் இல்லை.

ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் எஞ்சீனியரிங் துறையில் பி.ஹெச்.டி பட்டம் பெற்ற நஜ்முத்தீன் அர்பகான் அவர் சார்ந்த துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார்.

1965-ஆம் ஆண்டு ஜெர்மனி தயாரித்த லெபேர்ட்ஸ்-1A என்ற பீரங்கியை உருவாக்கிய எஞ்சீனியர்கள் குழுவில் அர்பகான் முதன்மை எஞ்சினீயராக பணியாற்றினார்.

மெக்கானிக்கல் எஞ்சீனியரிங் துறையில் சிறப்புற்று விளங்கிய அர்பகான் 1969-ஆம் ஆண்டு மில்லி கோரஸ்(MilliGorus) (தேசிய பார்வை) என்ற பெயரில் கொள்கை அறிவிப்பை வெளியிட்டு துருக்கி அரசியல் களத்தில் காலடி எடுத்துவைத்தார்.

இஸ்லாத்தின் நீதியைக் குறித்து வாதிட்ட அர்பகான், தொழிற்புரட்சி, முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றைக் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்தார். ஐரோப்பாவின் பொது சந்தை என்ற கொள்கை துருக்கியின் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழித்தொழிப்பதற்கான சதித்திட்டம் என அர்பகான் எச்சரித்தார்.

1970-ஆம் ஆண்டு நேசனல் ஆர்டர் கட்சியை துவக்கி தீவிர அரசியலில் பங்கேற்றார் அர்பகான். ஆனால், மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அக்கட்சி துவங்கி ஒன்றரை வருடத்திற்குள் தடைச் செய்யப்பட்டது.

1972-ஆம் ஆண்டு அர்பகான் நேசனல் ஸால்வேஷன் என்ற கட்சியைத் துவக்கினார். அக்கட்சி மக்கள் ஆதரவைப் பெறத் துவங்கியது. இந்நிலையில் 1973-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அர்பகானின் கட்சி 11.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. தேசிய அவையில் 48 இடங்களை கைப்பற்றியது. ஆனால், தீவிர மதசார்பற்றக் கட்சிகள், மற்றும் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பையும், பிரச்சாரங்களையும் சந்தித்த அர்பகானின் கட்சிக்கு 1977-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீதமும், இடங்களும் குறைந்தன. முந்தைய தேர்தலின் போது கிடைத்ததில் பாதி இடங்களே இம்முறை அக்கட்சிக்கு கிடைத்தது.

1980-ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய புரட்சியின்போது அர்பகானின் ஸால்வேஷன் கட்சி தடைச் செய்யப்பட்டது.

நெருக்கடிகளால் தளராத அர்பகான் 1987-ஆம் ஆண்டு நீதி நமது லட்சியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ரஃபா(சேவை) என்ற பெயரில் கட்சி ஒன்றைத் துவக்கினார். தற்பொழுது அவருக்கு ஆதரவாக அலி துருக்மான், அஹ்மத் தெக்தால் ஆகியோர் உடனிருந்தனர். மேயர் தேர்தல்களில் ரஃபா கட்சி போட்டியிட்டது. மூன்று நகரங்களில் ஆட்சியை கைப்பற்றியது.

1991-ஆம் ஆண்டு தீவிர தேசியவாத கட்சியான நேசனலிஸ்ட் மூவ்மெண்ட் கட்சி, ரிஃபார்மிஸ்ட் டெமோக்ரேடிக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் ரஃபா கட்சி போட்டியிட்டது. 1995-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மஸ்ஊத் இல்மாஸ், முன்னாள் பிரதமர் தான்ஸு சில்லரு ஆகியோரின் தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட தகராறு ரஃபா கட்சிக்கு ஆதாயமாக மாறியது. சில்லரின் பாத் கட்சியுடன் கூட்டணி அமைத்த அர்பகான் தேர்தலில் ரஃபா கட்சிக் கூட்டணியை வெற்றி வாகை சூடவைத்தார். முஸ்லிம் துருக்கியின் வரலாற்றில் முதன்முதலாக ஒரு இஸ்லாமியவாதி அந்நாட்டின் பிரதமரானார்.

முஸ்லிம் நாடுகளுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக கொள்கைகளை வகுத்தார் அர்பகான். இதன் ஒரு பகுதியாக எட்டு முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான டி-8 என்ற அமைப்பை உருவாக்கினார் அவர்.

சியோனிஸ்டுகளுடன் எவ்வித சமரசத்திற்குமிடமில்லை என அர்பகான் பிரகடனப்படுத்தினார். ஆனால், அவரது எதிரிகள் அடங்கியிருக்கவில்லை. அர்பகானை பதவியிலிருந்து இறக்குவதற்கு ராணுவத்தின் உயர்மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக பதவியேற்று ஒரு வருடம் கழித்து ராஜினாமாச் செய்யவேண்டிய நிர்பந்தமான சூழல் அர்பகானுக்கு ஏற்பட்டது.

ரஃபா கட்சிக்கு மட்டுமல்ல அர்பகானின் அரசியல் வாழ்க்கைக்கும் புதிய அரசு தடைவிதித்தது. ரஃபா கட்சியின் தடையை 1998-ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உறுதிச்செய்த போதிலும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு கடுமையாக விமர்சித்தது.

1998-ஆம் ஆண்டு அர்பகான் உருவாக்கிய வெர்ச்சு கட்சிக்கும் அதிக ஆயுள் நீடிக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு அரசியல் சட்ட நீதிமன்றம் அக்கட்சியை தடைச் செய்தது. இப்பொழுதும் அவர் மதசார்பற்ற கொள்கைகளை மீறிவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டது. அர்பகானின் ஆதரவாளர்கள் ஃபெசிலிட்டி கட்சியை உருவாக்கிய பொழுது அவருடைய கொள்கைகளில் கருத்து வேறுபாடுக் கொண்டவர்கள் 'நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி'யை(ஏ.கெ.கட்சி) துவக்கினர்.

இஸ்லாமிய சித்தாந்தங்களுடன் தாராளமயமாக்கல் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்து களமிறங்கிய ஏ.கே.கட்சியின் முயற்சிகள் சரியானதுதான் என்பதை கடந்த இரண்டு தேர்தலுகளும் நிரூபித்து வருகின்றன.

பிரதமர் உருதுகான் கட்சிக்கு துருக்கி பாராளுமன்றத்தில் 334 இடங்கள் உள்ளன. எதிர்கட்சியான ரிபப்ளிகன் கட்சிக்கு 101 இடங்களே உள்ளன.

அரசியலில் தளத்தில் இஸ்லாமிய கொள்கைகளை இறுகப் பற்றிய அர்பகான் தனிப்பட்டரீதியில் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். ராணுவத்தின் வாள் முனையில் அவர் அரசியலை நடத்திக்கொண்டிருந்தார்.

1960 முதல் 1997 வரை துருக்கி ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகளில் பலிகடாவான ஒரே தலைவர் அர்பகானாவார். தற்பொழுது துருக்கியில் ஜனநாயகம் தழைத்தோங்கி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் விசாரணையை சந்தித்து வருகின்றனர். இத்தகையதொரு சூழலுக்கு நஜ்முத்தீன் அர்பகான் அளித்த சேவையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

பஹ்ரைன் - வெளிநாட்டு கூலிப்படையின் கொடுமை!


பஹ்ரைன் விபரீதமான அரசியல் உள்ள வித்தியாசமான நாடு.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார்க் கைப்பிளள்ளைகளான மன்னர் குடும்பங்கள் 200 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.

அந்த நாட்டின் அரச நிர்வாகத்தில் சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கு இடமில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன் படுத்தும் ஒரு தளமாகவே பஹ்ரைன் பாவிக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டவரின் அங்கீகரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பின் உதவியில் ஆட்சி செய்யப்பமடும் ஒரு நாடாக பஹ்ரைனை குறிப்பிட்டால் அதில் தவறே இல்லை.

உலகில் எங்குமில்லாதவாறு முற்று முழுதாக இராணுவத்தில் வெளிநாட்டவர்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

மனித உரிமைகள் முடக்கப்பட்ட ஒரு நாடாக அது மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால்,

இன்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அமெரிக்காவும், பிரித்தானியாவும் தான் பஹ்ரைன் என்ற ஜனநாயக விரோத நாட்டை பாலூட்டி வளர்த்து வருகின்றன.

வாக்குரிமையைப் பற்றி வாய்க்கிழிய கத்தும் இந்த நாடுகள், 80 வீதமான ஆதிகாரத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு 20 வீத அதிகாரத்தை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் கேலிக்குரிய பஹ்ரைன் பாராளுமன்ற முறையை ஆதரித்து வருகின்றன.

அண்டை நாடுகளான பஹ்ரைனுக்கும் சவுதிக்குமுள்ள உறவு மிகவும் இறுக்கமானது. ஈ என்ற அசுத்தத்தை மொய்க்கும் பிராணிக்கும் அசுத்தத்திற்கும் உள்ள உறவு அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிறது.

தனது நாட்டில் இறுக்கமான சட்டங்களை வைத்துக்கொண்டுள்ள சவுதி நாடு, அதன் மன்னர் குடும்பங்களுக்கும், மேட்டுக்குடிகளான எண்ணெய் ஷேக்குகளுக்கும் மது, மாது போன்ற ஷைத்தானிய சேட்டைகளுக்கான சிறந்த தளமாக பஹ்ரைனை பாவித்து வருகிறது.

பிரித்தானியா கூலிப்படையான பஹ்ரைனின் இராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறது. அமெரிக்கா 4500 படையினரைக் கொண்ட மிகப்பெரிய கடற்படைத் தளத்தை இங்கு வைத்துள்ளது.

பஹ்ரைன் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கு ஏதுவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அந்த நாட்டை நவீன ஆயுத வல்லமையுள்ள நாடாக மாற்றியிருக்கிறது.

பஹ்ரைனை நாட்டு மக்களின் ஆதரவு அறவே இன்றி பல நூறு ஆண்டுகள் தொடராக ஆட்சி செய்வதற்கு அடித்தளமாக இந்த சாத்தானிய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி போன்ற கூட்டுக்கம்பனிகள் அந்த நாட்டின் அராஜகங்களை கட்டிக்காத்து வருகின்றன.

இன்று அந்த நாட்டில் எழுந்து வரும் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு மேல் குறித்த மூன்று சாத்தானிய சக்திகளும் முயன்று வருகின்றன.

நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கூலிப்படையான இராணுவம் செய்யும் கொலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் அனுசரணையாளர்கள் யார் என்ற விடயம் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது
.

Tuesday, March 1, 2011

நாம் இன்னும் இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாம் ? நம்புவோமாக

2002ல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 11 முஸ்லி்ம்களிற்கு மரணதண்டனையும் 20 முஸ்லிம்களிற்கு ஆயுட்கால தண்டனையும் விதித்து இந்திய நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு நீதிபதி P.R. Patel இனால் வழங்கப்பட்ட மேற்படி தீர்ப்பை குஜாராத் அரசு நீதிக்கு கிடைத்த வெற்றி என கருத்து வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடியோ ஒரு படி மேலே போய் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து பரிசத்தோ இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் தீர்ப்பை குறை கூறியுள்ளது. ஆயுள் தண்டனை விதித்த ஏனைய 20 பேருக்கும் மரணதண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளது.

ஓநாயாக இருந்து பார்த்தால்தான் ஓநாயின் நியாயம் புரியும் என்பார்கள். ஆம் இந்து மத வெறியர்களாக இருந்து பார்த்தால் மட்டுமே இவர்களது நியாயம் நமக்குப் புரியும். கோத்ரா ரயிலை எரித்ததே விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரே. அதை காரணமாக வைத்து நுாற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்தனர். பல நுாறு முஸ்லிம் பெண்களை இரண்டு மூன்று நாட்களாக வைத்து கூட்டுக் கற்பழிப்புச் செய்தனர். முஸ்லிம்களின் வர்தக நிலையங்களை தீயிட்டுக் கொழுத்தினர். சூறையாடினர். இராப் பகலாக கொள்ளையடித்தனர். இதையெல்லாம் செய்தது காடையர்களா. இல்லை. கல்வி கற்ற நாகரீகமான மத்திய தர வர்க்கத்தினர். முழு அனுசரனையையும் வழங்கியது குஜாராத் அரசு. நரேந்திர சிங் மோடியும் அவனது கொலைகார அரசியல் சகாக்களும். கலகத்தை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நாடத்தி முடித்ததே குஜாராத் பொலிஸ். மத்திய அரசும் அப்பாவி வாஜ்பாயும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.



தாக்க வந்தவர்களை ஆவேசமாக திருப்பித் தாக்கிய துணிகரமான முஸ்லிம் ஆண் சிங்கங்கள் மட்டும்தான் இதற்கெல்லாம் முழுக்காரணம் என நீதித்துறை சொல்கிறது.  அதை ஊடகங்களும் அப்படியே வெளியிடுகின்றன. நியாயமான தீர்ப்புக்கள் கிடைக்காத போது முஸ்லிம்கள் ஏமாந்து போயுள்ளார்கள். இந்தியா எனும் சொல்லிலேயே இந்து எனும் ஆரம்பமே காணப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்பது. இந்திய முஸ்லிம்களிற்கு இந்திய அரசியல் சாஸனத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவர்களிற்கான சமூக அரசியல் பாதுகாப்பு இஸ்லாத்திலேயே உள்ளது. இறைச் சட்டங்களிலேயே உள்ளது. இந்திய முஸ்லிம்களிற்கு கைபா் தளம் சொல்லும் செய்தி இதுதான். முதலில் நான் ஒரு இந்தியன் எனும் முட்டாள்தனமான மாயையில் இருந்து விடுபடுங்கள். முதலில் நான் ஒரு முஸ்லிம். கடைசியிலும் நான் ஒரு முஃமின் எனும் உறுதியான எண்ணத்தை உள்ளத்தில் விதைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை வழிநடாத்தும். உங்கள் வருகைக்காக சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது
கைபர் தளம் .