Wednesday, October 12, 2011

சிறை காவலர் முஸ்லிமாக



















டெர்ரி ஹோல்டுப்ரூக்ஸ்!
குவாண்டனமோ சிறைச்சாலையின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். அதற்குமுன் சில காலம் அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு வீரராகப் பணிபுரிந்தவர். குவாண்டனமோ சிறைக்கைதி எண் 590 அஹ்மதிடம் உரையாடும் நிமிடம்வரை இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை அறியாதவர். அல்லது இஸ்லாத்தைப் பற்றி தவறான விளக்கம் கொடுக்கப்பட்டவர்.
2004இல் குவாண்டனமோ சிறைச்சாலை பணிக்கு நியமிக்கப்பட்ட இவர், சிறைக் கைதிகளை அவரவர் அறைகளில் இருந்து வெளியேற்றி, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்தார். தவிர, சிறைச்சாலையின் அறைகளுக்குள் கைதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதையும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதையும் தடுக்கும் கூடுதல் பொறுப்பிலும் இருந்தார்.கம்பிக்குள் கைதிகள் படும் பாடு
இத்தகைய பணியின் காரணமாக டெர்ரிக்கு, பெரும்பாலும் கைதிகளின் அசைவுகளை நுணுக்கமாக கவனிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. பொழுது போக்கிற்காக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள கைதிகளிடம் வெளியில் நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். இத்தகைய சூழலில்தான் மொராக்கோவைச் சேர்ந்த அஹ்மது இராக்கிதி என்ற (எண் 590) கைதியுடன் உரையாடும் வாய்ப்பும் அவருக்கு அதிகமாகக் கிடைத்தது.
மனமாற்றத்தை ஏற்படுத்திய சிறைக்கைதி அஹ்மது!
கைதி எண் 590பயங்கர சித்ரவதைகள் அரங்கேறும் குவாண்டமோ சிறைச்சாலையில் அத்திப்பூத்தாற் போன்று அபூர்வமாக ஒரு சில சிறைக் காவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர் என்கிறார் அஹ்மது. சில காவலர்கள், இரவில் தனிமையைப் போக்க, தமது நேரங்களைக் கழிக்க, தூக்கத்தை விரட்ட இத்தகைய  பரஸ்பர உரையாடல்களைக் கைதிகளுடன் நடத்துகின்றனர். அரசியல், மதம், இசை மற்றும் பொதுவான தலைப்புகளில் இத்தகைய உரையாடல்கள் நடைபெறும் - நியூஸ்வீக் பத்திரிகைக்கு தமது மொராக்கோ இல்லத்திலிருந்து இ-மெயில் மூலம் எழுதிய மடலில் அஹ்மது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்நாளில் ஐந்து வருடங்கள் குவாண்டனமோ சிறையில் கழித்த அஹ்மது கடந்த 2007 இல் விடுதலை செய்யப்பட்டார்.
அஹ்மது கலந்துரையாடிய சில சிறைக் காவலர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்து வியப்பிலாழ்ந்திருந்தாலும் எவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தனது வியப்பிலிருந்து மாறாத ஹோல்டுப்ரூக்ஸ் மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிக் கொண்டேயிருந்தார்.
"டெர்ரியிடம் காணப்பட்ட இத்தகைய ஆர்வமும் உண்மையினை அறிந்த மாத்திரத்தில் ஏற்றுக்கொண்ட துணிவுமே அவர் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தினைக் தழுவக் காரணமாய் இருந்தது" என்கிறார் அஹ்மது.
பல்வேறு பொதுவிஷயங்களைப் பற்றி பேசினாலும், இஸ்லாம் பற்றிய விபரங்களை சிறைக்கைதி அஹ்மத் கூறக் கூற வியப்பிலாழ்ந்து போனார் டெர்ரி. ஏனெனில் அன்றுவரை தாம் கேள்விப் பட்டிருந்த இஸ்லாமும், அஹ்மத் கூறிய இஸ்லாமும் முற்றிலும் மாறுபட்டிருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இது பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உடனடியாக இஸ்லாம் தொடர்பான அனைத்து அரபிப் புத்தகங்களையும் மொழி பெயர்ப்புகளையும் வரவழைத்துப் படிக்கத் துவங்கினார்.
இடையிடையே தமக்குத் தோன்றும் கருத்துக்களையும் சந்தேகங்களையும் அஹ்மதிடம் அடுத்தடுத்த இரவுகளில் பகிர்ந்து கொள்வார். அதில் எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தொடர்புடைய புத்தகங்களையும் தேடிப் படிக்கலானார். பெரும்பாலும் நள்ளிரவில் நடக்கும் இத்தகைய உரையாடல்கள் தமது சிந்தனைகளை தூண்டிவிட்டதாகவும் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தெளிவினைத் தந்ததாகவும் இப்போது கூறுகிறார்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் சிறைக்கைதி அஹ்மத் உடன் ஏற்பட்ட மற்றொரு கலந்துரையாடலில் மனமுவந்து கூறும் ஷஹாதா என்ற ஒரு வரி வாக்குறுதி / பற்றுறுதியே ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிக்கொள்ளப் போதுமானதாகும் என்பதை அறிந்து கடும் வியப்பிலாழ்ந்தார். ["வணங்குதற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை; நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" என்பதே ஷஹாதாவாகும்]
உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாத டெர்ரி, ஆர்வம் மேலிட ஒரு பேப்பரையும் பேனாவையும் சிறைக் கம்பிகளின் கீழே தள்ளினார். சிறைக்கைதி அஹ்மதிடம் கூறி ஆங்கிலத்திலும் அரபி உச்சரிப்பிலும் அதனை எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். எழுதி வாங்கிய பேப்பரோடு குவாண்டனமோ சிறைச்சாலைத் தரையில் அமர்ந்து சப்தமிட்டு ஷஹாதாவை முன்மொழிந்தார் டெர்ரி. ஆம்; டெர்ரி இஸ்லாத்தைத் தழுவியது குவாண்டனமோ சிறைக் கொட்டடியில்!


குவாண்டனமோ பயங்கரங்கள்! குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே! 
2005இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஹோல்டு ப்ரூக்ஸ் இக்கொடூரங்கள் பற்றிய தனது எண்ணங்களையும் அமெரிக்க ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார். கடந்த சில வாரங்களாக நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க இராணுவ வீரர்கள், விசாரணை அலுவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்வது பற்றி விவரித்துள்ளார். அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு அமெரிக்கச் சிறைக் காவலர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார். 
இத்துடன் நியூயார்க்கின் 9/11 சம்பவத்தில் புஷ்ஷின் அரசாங்கம் பெரும் சதியை அரங்கேற்றியுள்ளது என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகக் கொடியவர்கள் என்று பட்டப் பெயரிட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படும் கைதிகளுக்கும், அவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனும் அளவிற்கு அவர்களின் நன்னடத்தை உள்ளது. இது பற்றி கடந்த 2002இல் பொறுப்பில் இருந்தபோதே தன் சக அலுவலர்களிடம் டெர்ரி கேள்வி எழுப்பியிருக்கிறார். 
இவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும். ஏன் இவர்கள் கீழ்த்தரமாகவும் கொடூரமாகவும் சித்ரவதை செய்யப்பட வேண்டும்? பின்பு ஏன் சில வருடங்களுக்குப் பின் குற்றமற்றவர் என்று வெளியேற்றப்பட வேண்டும்?
இத்தகைய கேள்விகள் குவாண்டனமோ சிறைச்சாலை அலுவலர்களிடையே ஆங்காங்கே உருப்பெற்று ஒரு சிலர் முதன் முறையாக அரசுக்கெதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.
விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர்.
"பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.



இஸ்லாம் பரிந்துரைக்கும் அழகிய தோற்றத்தில் தற்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட டெர்ரி, தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் பெரும் குடிகாரனாகவும், மிகவும் சீர்கெட்ட நடத்தைகள் கொண்டு கழித்ததையும் எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுகிறார். கடந்த 2002இல் இராணுவத்தில் சேர்வதற்கு முன்பிருந்த சீர்கெட்ட வாழ்க்கையை இராணுவ ஒழுங்குமுறைகள் சீர்படுத்தவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
எந்த ஒரு வரையறையும் இன்றி, நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த தனது அவல வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கும் இவர், இராணுவம் தராத ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் தன்னுள் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.
ஹிப்பிகளின் கலாச்சாரமான உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்ட உருவ அலங்காரங்களுடனும் பெரும் ஓட்டைகளை தனது காதில் இட்டு அதில் மரத்திலான தட்டுக்களை அலங்காரப் படுத்திக் கொண்டு திரிந்ததையும் நினைவுகூரும் இவர் "என் உடலில் இன்னும் எஞ்சியுள்ள இத்தகைய அசிங்கங்கள் என் கடந்த கால அவலத்தைப் பிறருக்கு எடுத்துக் கூற ஒரு சான்றாக இருக்கும்!" என்கிறார் உறுதியுடன்.
தமிழாக்கம்: அபூ ஸாலிஹா 
நன்றி,
சத்தியமார்க்கம்.காம்

தேர்தல்களை எதிர்கொண்டுள்ள எகிப்து அரசியல் களம் யாருக்கு வெற்றி


 



 எகிப்து புரட்சி ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடக்கும் நிலையில் எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கானபிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெறும் அதை தொடர்ந்து ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் இடம்பெறும் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கான வேட்பாளர் பதிவுகளை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் தேர்தல் அலுவலகத்தில்  மேற்கொள்ளமுடியும் என்று எகிப்தின் இராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 28.09.2011 புதன் கிழமை எகிப்தின் 59 அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் இணைந்து. இராணுவ நிர்வாகம் தேர்தல் சட்டத்தில் மாற்றம் ஒன்றை கொண்டுவரவேண்டும் அல்லது தேர்தல்களை பகிஸ்கரிக்க போவதாக அறிவித்துள்ளதுடன் தற்போது நாட்டை ஆளும் இராணுவ நிர்வாகத்துக்கு எதிர்வரும் ஞாயிற்கு கிழமை வரை அவகாசமும் வழங்கியுள்ளது .
அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் புதிய பாராளுமன்றம் மேற்சபை, கீழ்சபை என்ற இரண்டு அவைகளை கொண்டிருக்கும் இவை இரண்டுக்குமான மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களுக்கு தேர்தல்கள் மூலம் எகிப்து மக்களினால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். எஞ்சும் இரண்டு அவைகளின் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்த பிரதான காரணம் .
இதில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்ற வாசகம் அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுக்கு ஹுஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள் அல்லது வேறு வெளிநாட்டு நலன்களை பேணும் நபர்கள் நியமிக்கப்படலாம். என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி Freedom and Justice Party (FJP) உட்பட எகிப்தின் 59 அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த சட்டம் மாற்றப்படாத நிலையில் தாம் தேர்தல்களை பகிஸ்கரிக்கப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளது. ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி தேர்த்தலை பகிஸ்கரிக்கும் நிலைப்பாட்டை எடுக்காது என்று அதன் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த சட்டம் மாற்றப்படவேண்டும் என்பதும், குறித்த திகதிகளில் தேர்தல்கள் இடம்பெற்று விரைவாக மக்களால் தெரிவாகும் பிரதிநிதிகளிடம் எகிப்து நிர்வாகம் ஒப்படைக்கப் படவேண்டும் என்பதில் இஹ்வானுல் முஸ்லிமீன் கூடிய கரிசனை கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை எகிப்திய மக்களில் 35 வீதமானவர்கள் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புக்கு ஆதரவாக உள்ளதாக எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றது.
நடைபெறபோகும் தேர்தல்களில் ஹுஸ்னி முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் பங்குகொள்ள முடியாது என்று இராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோன்று எகிப்து இராணுவத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு தேர்தல்களில் பங்குகொள்ளும் எண்ணம் இல்லை என்று அறிவிக்கபட்டுள்ளது.
இருந்த போதும் இன்று இராணுவ நிர்வாகத்தின் தளபதி தந்தாவி சிவிலியன் உடையில் எகிப்து தலைநகரின் சந்தைப் பகுதிக்கு பாதுகாப்பு இன்றி விஜயம் செய்வதையும் அதை எகிப்து தேசிய தொலைக்காட்சி பதிவு செய்து முக்கியத்துவத்துடன் காட்சிப் படுத்தியமையும் இஹ்வானுல் முஸ்லிமீன் உட்பட அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயில் சூப்பி வைத்துகொண்டா அமெரிக்காவும் மேற்கும் இருக்க போகின்றது ? பொறுத்திருந்து பார்ப்போம்.
”யார் நிர்வாக ஆசனத்தில் அமர்ந்தாலும் இயக்குவது நாமாக இருக்கவேண்டும்” என்று வெறும் திரைக்கதை  வசனங்கள்   போசும் சக்தியல்ல  மேற்குலகம்.

நாம் எம்மை மறந்தாலும் எம்மை பற்றி சிந்திக்கத் தவறாத மேற்கு தலைவர்கள்

Tuesday, October 11, 2011

சாத்தானிய தேசம்



சாத்தானிய தேசம்

இன்று எந்த ஒரு தேசமும் அதன் சுய கட்டுப்பாட்டில் இல்லை. விஞ்ஞானம் பெற்றுத்தந்த தொலை தொடர்பாடலும் போக்குவரத்து துறையின் அதீத வளற்ச்சியும் உலகை ஒரு கிராமமாக மாற்றிவி்ட்டது.


அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ எல்லா தேசங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. சடவாத உலகியல் ஒழுங்கு பொருளாதார அபிவிருத்தி எனும் பெயரில் வளர்ந்து நிற்கிறது.



மனிதன் பொருளாதார பிராணியாக மாற்றப்பட்டுள்ளான். சொகுசு நோக்கிய வாழ்க்கை எனும் போக்கே அவனது வாழ்க்கையின் இலக்காக மாறியுள்ளது. தனது இரைப்பைக்காகவும் இந்திரியத்திற்காகவும் இயங்கும் ஒரு விலங்கே மனிதன். இன்று அவன் நிலை இதுதான்.


தேசங்களை தேசங்கள் அடிமைப்படுத்திய பண்டைய சாம்ராஜ்ஜிய காலம் மீண்டும் ஆரம்பமாகப் போகும் யுகம் இது. நவீன ஏகாதிபத்திய அரசாங்கங்களிற்கான வாயல்கள் திறக்கப்பட்டுள்ளன. சுரண்டல் பொருளாதார சமூக அமைப்பிற்கான சகல அடித்தளமும் இடப்பட்டுள்ளது.


இதையெல்லாம் முன்னின்று தலைமையேற்று நடாத்தும் சாத்தானிய நாடு அமெரிக்கா. இந்த அமெரிக்காவை இயக்கும் சக்திகள் இரண்டு. ஒன்று ஸியோனிஸம். மற்றையது ப்றீமேஸன். இரண்டுமே அழிவு சக்திகள். 


ஸியோனிஸம் அகண்ட யூத தேசத்திற்காக செயற்படுகிறது. ப்றீமேஸன் சாத்தானிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்காக செயலாற்றுகிறது. இந்த இரண்டு அமைப்புக்களிலேயும் பெரிய வலைப்பிண்ணலைக் கொண்டது ப்றீமேஸனாகும். ஸியோனிஸம் சில விடயங்களில் சுயமாகவும் பல விடயங்களில் ப்றீமேஸனுடன் இணைந்தும் செயற்படுகிறது.


அமெரிக்கா ஆளப்படுவது பாரிய பல்தேசிய கம்பனிகளினால் என்பதே உண்மை. இவர்களே ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கிறார்கள். இந்த நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்று ப்றீமேஸனாகவோ அல்லது ஸியோனிஸ்ட் ஆகவோ இருக்கிறார்கள். பலர் இது இரண்டையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வல்லமை படைத்த நாடாக அமெரிக்காவை உருவாக்கியுள்ளார்கள். நாளை உலகலாவிய பயங்கரவாத சாம்ராஜ்யம் அமைக்கப்படும் போது அதன் தலைமை நாடு அமெரிக்காவாகவே இருக்கும்.


முதலாளித்துவத்தின் இயக்கத்திற்கு வட்டி அடிப்படை. இந்த வட்டியை நேரடியாக மிகக் கடுமையாக எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம். இஸ்லாமிய எழுச்சியென்பது வட்டி அடிப்படையிலான பொருளாதாரத்தின் வீழ்ச்சி. வட்டி பொருளாதாரத்தின் வீழ்ச்சி என்பது முதலாளித்துவத்தினதும் அமெரிக்க மேற்குலக சக்திகளினதும் வீழ்ச்சி. ஆக அமெரிக்க வீழ்ச்சி ப்றீமேஸனின் சாத்தானிய கனவு கோட்டையை தகர்த்துவிடும். 


இதனடிப்படையில் ப்றீமேஸன் முஸ்லிம்கள் மீது தனது கவனத்தை இப்போது செலுத்தியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட புரட்சிகளுக்கெல்லாம் இதுவே அடிப்படை. முஸ்லிம் நாடுகள் பிராந்திய ரீதியா பிரிக்கப்படுகிறது. இனக் குழுமங்கள் ரீதியாக பிரிக்கப்படுகிறது. மொழி ரீதியாக பிரிக்கப்படுகிறது. புராதண கோத்திரங்கள் போல் முஸ்லிம்கள் வலுவிழந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவை எல்லாவற்றிற்கும பின்னணி ப்றீமேஸனும் ஸியோனிஸமும் ஆகும்.


உறுதிமிக்க பெரிய முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி என்ற போர்வையில் அந்த நாடுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உளவு கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டு வலுவிழக்கப்பட வைக்கப்படுகிறது.


எனைய முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்தவ முஸ்லிம் இன முரண்பாடுகளையும் கலவரங்களையும் திட்டமிட்டு நெறிப்படுத்தப்படுகிறது. நைஜீரியா எதியோப்பியா சூடான் ஐவரிகொஸ்ட் சோமாலியா பாகிஸ்தான் என பல நிகழ்கால உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


முஸ்லிம்களிடையேயும் ஷியா சுன்னி முரண்பாட்டை உருவாக்கி தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்படும் அளவிற்கு நிலைமைகளை எந்தவொரு கட்டுப்பாடும்மில்லாத போக்கிற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஈராக் சிரியா யெமன் ஜோர்தான் லெபனான் என இதற்கும் உதாரணமாக காட்ட பல தேசங்கள் உண்டு.

இந்த நிலை தொடரப்படுமானால் நாளை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் முஸ்லிம்களிற்கெதிரான இன ஒடுக்குமுறையும் இன சுத்திகரிப்பும் நிகழ அல்லது நிகழ்த்தப்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

முஸ்லிம்கள் இன்று உலக மனித குலத்திற்கு பொது எதிரி எனும் கருத்தியலை பல்வேறு வடிவங்களில் மறைமுகமாகவும் மிக நுட்பமாகவும் மேற்படி சக்திகள் அரங்கேற்றிய வண்ணமுள்ளன. இவை மக்களால் ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு வகையில் உள்வாங்கப்படுகின்றன. இதன் விளைவாக காரணமின்றி முஸ்லிம்களை வெறுக்கும் ஒரு தன்மை பரவி வருவதை நாம் காணலாம்.

ப்றீமேஸனை பொருத்தவரை நாம் வாழும் நாடுகளிலும் அவர்களது மறை கரங்களான பல்தேசிய கம்பனிகள் இருப்பதன் காரணமாக அவர்களிற்காக செயற்படக்கூடிய முகவர்கள் பலர் இருக்கின்றனர். முஸ்லிம்களிற்கு எதிரான அல்லது முஸ்லிம்களை பலமிழக்க வைக்கும் வேலைத்திட்டங்களை இவர்களின் ஊடாக ப்றீமேஸன் நிறைவேற்றிக்கொள்ளும்.


அல்லாஹ் தனது திருகுர்ஆனில் நிச்சயமாக நீங்கள் உங்கள் பாதுகாவலர்களாக காபிர்களை எடுத்துக்கொள்ளாதீர்கள் என எச்சரிக்கின்றான். இந்த எச்சரிக்கை ஹிஜ்ரி 1432 வருடங்களிற்கு முந்திய சமுதாயத்திற்கு மட்டும் வந்த எச்சரிக்கையல்ல. நமக்கும் இனிவரும் சந்ததியினரிற்கும் சேர்த்தேயாகும்.

நாம் மரணத்தை எக்கணமும் எதிர்பார்த்து காத்திருக்கும் மனிதர்கள். இந்த உலகில் நாம் ஒரு வழிப்போக்கர்களாகவே வந்துள்ளோம் என்பது திண்ணம். நாம் வழிப்போக்கர்களாக இருப்பது ஒரு புரம் இருக்கட்டும். அதே வேளை போராளிகளாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். 



ஒரு போராளிக்குத் தேவையான அடிப்படை பயிற்ச்சிகளை நாம் பயின்று கொள்வது கடமை. நாம் மட்டுமல்ல நமது குழந்தைகளிற்கும் எதிர்கால சாத்தானிய உலகை எதிர்கொள்ளக்கூடிய வகையில் சகல பயிற்ச்சிகளையும் வழங்குவது எமது பொருப்பாகும். களத்தை நாடி ஓடவேண்டிய அவசியம் எமக்கில்லை. களம் நம்மை நெருங்கிவிட்டது. அது நம்மை தன்னுள் இழுக்கும் போது நாம் போராளிகளாக இருந்தால் மட்டுமே நமது இருப்பையும் இஸ்லாத்தின் இருப்பையும் தற்காத்துக்கொள்ள முடியும்.

நன்றி :கைபர் தளத்திற்காக - அபூ ஸய்யாப்