Wednesday, August 10, 2011

அமெரிக்க ஹெலிகொப்டர் வீழ்ந்தது 31 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர் வீழ்ந்ததில் 31 அமெரிக்க விசேட சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் ஒன்று நடாத்திவிட்டு திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆப்கான் தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் ஹெலிகொப்டர் வீழ்ந்தமைகான காரணம் அமெரிக்க, ஆப்கான் தரப்பால் தெரிவிக்காவிட்டாலும், தாலிபான் அமைப்பு தாம் அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
இதில் 31 அமெரிக்க சிப்பாய்களும் 7 ஆப்கானிஸ்தான் கர்சாயின் சிப்பாய்களும் கொல்லபட்டுள்ளனர். 2001 ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதல் ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் இழந்ததில்  இந்த ஹெலிகொப்டர் இழப்பு பெரிய இழப்பாக்க கருதப்படுகின்றது. அதேவேளை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின்’ (பொம்மை) ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அமெரிக்க படைகளுக்கும் உயிர் இழந்த படையினரின் குடும்பத்தினருக்கும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment