Tuesday, February 22, 2011

ஹிஸ்புத் தஹ்ரீர் - கிலாபாவின் பெயரால்..

                        உலகை இஸ்லாம் ஆட்சி செய்து காட்டியுள்ளது. இஸ்லாமிய ஆட்சி முறைமையையும் அதனது வளர்ச்சிப் போக்கையும் யஹீதி நஸாராக்கள் நேரடியாகக் கண்டும் உள்ளனர். அதனால் ஏற்பட்ட பயங்கர உள்ளச்சத்தின் விளைவே சிலுவை யுத்தங்கள். இன்றைய கால கட்டத்தில் சிலுவை யுத்தங்கள் நேரடியாக முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் தேசங்கள் மீதும் நடாத்தப்படாவிடினும் மறைமுகமாக இஸ்லாத்தை இந்த உலகில் இருந்து அப்புறப்படுத்துவதும் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. காதியானிகள் மற்றும் பஹாய் அமைப்பினர் போன்ற பல தரப்பட்ட அகீதாவுக்கு முரண்பட்ட கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் மேற்குலகு வெற்றிகரமாக புகுத்தியுள்ளது. அதன் விளைவுகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.



சமகாலத்தில் ஹாகீமியத் (அல்லாஹ்விற்கு மட்டுமே ஆட்சி அதிகாரம்) தொடர்பாக பல பிராந்திய ரீதியிலான ஜிஹாதிய இயக்கங்கள் பேசியும் செயற்பட்டும் வருகின்றன. ஆனால் அவை மட்டுப்பட்ட அளவிலான முயற்ச்சிகளே. சர்வதேச ரீதியாக கட்டமைக்கப்பட்ட இயக்கங்களாக ஹாகீமியத் கோட்பாட்டை கோரும், பேசும் அமைப்புக்கள் இரண்டு. அல் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் ஜமாதே இஸ்லாமி. எகிப்தையும் பாகிஸ்தானையும் முறையே தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அல் இஹ்வானுல் முஸ்லிமின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னாஹ் மற்றும் ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் மொளலானா மௌதுதி போன்றவர்களின் மறைவுடன் ஹாகிமியத் கோட்பாட்டின் உயிரோட்டமும் மறைந்து விட்டது. வெறுமனே தங்களது சமூகவியல், அரசியல் தேவைகளிற்கு மட்டுமே இன்று மேற்படி இயக்கங்கள் இறையாட்சி பற்றிப் பேசுகின்றன. இதுவே இன்றைய யதார்த்தம். மேற்படி அமைப்பினருக்கிடையே மறைமுகமாக "C.I.A." சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார் ஊடாக ஊடுருவி தனது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் செலுத்தி வருகின்றது.


உலக முஸ்லிம்களுக்கான கிலாவை உருவாக்குவதே ஹிஸ்புத் தஹ்ரீரின் கொள்கை. இதற்காக அவ்வமைப்பு ஹாகீமியத் தொடர்பில் நிறையவே பேசுகிறது. எழுதுகிறது. மொத்தத்தில் சர்வதேச ஜிஹாதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறது. உண்மையான ஜிஹாதிய அமைப்புக்கள் உருவாகாமல் தடுப்பதற்கான மேற்குலக சதியின் உருவாக்கமே ஹிஸ்புத் தஹ்ரீர். குறிப்பாக பிரித்தானியாவின் ஆதரவுடனேயே இது இயங்குகிறது. வெளி உலகிற்கு பிரித்தானிய இவர்களை தடை செய்யும். ஏன் கைது கூட செய்பும்.

இன்று உலகலாவிய ரீதியில் வளர்ந்து தமக்குள்ளே இரகசிய கட்டமைப்பையும் வலையமைப்பையும் கொண்டுள்ள இவ்வியக்கம் மிகவும் கவர்ச்சிகரமான பேச்சுக்கள் எழுத்துக்கள் வெளிப்பாடுகள் மூலம் எல்லோரையும் கவர்ந்துள்ளது.கிலாபா கனவில் அவர்களும்  மூழ்கிப் போயுள்ளனர். நிஜத்தில் சாத்தியமற்ற மாயக் கிலாபா கனவை மனித மூளைகளில் விதைப்பதில் ஹிஸ்புத் தஹ்ரீர் வெற்றியும் கண்டுள்ளது. இயக்கத் தலைமையின் உள் நோக்கங்களை அறியாத தொண்டர்கள் தங்கள் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் முற்று முழுதாக நம்பி தியாகத்துடன் செயற்படுகின்றனர்.   கிலாபா என்றால் எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்வான். ஏற்றுக் கொள்ளவும் தான் வேண்டும். இதுவே இவர்களது இயக்க செயற்பாடுகளை மேற்கொள்ள பெரிதும் வெற்றியளிக்கிறது. பொம்மை கிலாபாவின் ஊடாக முழு முஸ்லிம் உம்மாவையும் தங்கள் கால் பாதத்தின் கீழ் கொண்டு வர வகுத்த அமெரிக்க பிரித்தானிய திட்டம் வெகுவாக வேலை செய்கிறது.

சம கால முஸ்லிம் நாடுகளின் ஏற்பட்டுள்ள ”மக்கள் எழுச்சியை” ஹிஸ்புத் தஹ்ரீர் நன்றாகவே பயன்படுத்தப் பார்க்கிறது. மேற்படி புரட்சிகளிற்கெல்லாம் அடிப்படை தங்கள் நீண்ட கால வேலைத் திட்டமே எனும் மாயையை உருவாக்க வெகுவாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் கூறுவதானால் இதுதான். ஹிஸ்புத் தஹ்ரீர் ஜாக்கிரதை

0 comments:

Post a Comment