Friday, January 7, 2011

யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்

உலகின் நீண்ட நெடிய தீர்க்கப்படாத பிரச்சனை பாலத்தீன பிரச்சனையே. இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர்கள் யூதர் என்பதால், அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தர பிரிட்டன் ஏகாதிபத்தியம் முடிவு செய்தபோது, அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அப்போது யூதர்கள் அதிகமாக இருந்த ஐரோப்பாவின் ஒரு பகுதியையோ அல்லது ஹிட்லரின் ஜெர்மனியையோ அல்ல. மாறாக, மத்திய கிழக்குப் பகுதியை.

யூத மதத்தின் பிறப்பிடம் என்பதற்காக மட்டுமே இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. உலகப் போர்களில் தங்களுக்கு எதிராக நின்ற உதுமானியப் பேரரசைப் பிரித்தாள வேண்டும் என்பதுவும் அவர்களின் நோக்கமாக இருந்தது. இதற்கு வசதியாக ஏற்கனவே யூத அமைப்பு ஒன்று அந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நிலங்களைத் தந்திரமாக கையகப்படுத்திக் கொண்டு இருந்தது. (விரிவாக அறிய : பா. ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் பார்வையிடவும்)

தங்கள் இடத்தைப் பிடுங்கி அடுத்தவனுக்குக் கொடுப்பதை எந்த மனிதன்தான் ஒப்புக் கொள்வான்? பாலத்தீனியர்களும் அன்று முதல் தங்கள் எதிர்ப்புகளை பலவிதமாக வெளிக்காட்டினர்.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும் சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க வைக்கப் போவதாக தடி எடுத்திருக்கும் அமெரிக்கதான், பாலத்தீனர்களின் சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்க இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. பாலத்தீனம் போர்க்கள பூமியாக இருக்கும்வரை, ஆயுத வியாபரிகளின் சந்தையாக மத்தியக் கிழக்கு விளங்கும் என்பதாலேயே பேரழிவு ஆயுத வியாரிகளையே அதிபராகக் கொண்ட அமெரிக்காவும் அதன் எடுபிடியான பிரிட்டனும் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகின்றன. (கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அறிவிப்பை பார்வையிடவும்)

எனினும் கண் துடைப்புக்காக பேச்சுவார்தைகளை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஓஸ்லோ முதல் சமீபத்தைய அண்ணாபோலீஸ் வரை இந்த நாடகங்கள் நடந்தேறி வருகின்றன.

பாலத்தீனர்களின் பிரதிநிதியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசு பாலத்தீன விடுதலை அமைப்பை மட்டுமே அங்கீகரித்ததுள்ள நிலையில், அண்ணாபோலீசில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அந்த அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஹ்மூத் அப்பாஸ்தான் இதன் தலைவர் என்றாலும், பாலத்தீன் அதாரிட்டியின் பிரதிநிதி என்ற அளவிலேயே அவர் கலந்து கொள்ள முடியும். இதன் மூலம் எந்த உடன்படிக்கை எட்டப்பட்டாலும் சர்வதேச சட்ட அங்கீகாரம் பெற முடியாது. சர்வதேச சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு ஒப்பந்தம் கண் துடைப்பு ஒப்பந்தமாகவே இருக்க முடியும்.

1947 ல் 90 சதவீதமாய் இருந்த பாலத்தீனியர்களின் எண்ணிக்கை 2020ல் 55 சதவீதமாய் சுருங்கிப் போகும் அளவுக்கு பாலத்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் அகதிதகளாய் வெளியேற்றப் பட்டுள்ளனர். யூதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் மருந்துகள் இல்லை ( கடந்த அக்டோபர் மாதம் 61 வகையான முக்கியமான மருந்துகள் பாலத்தீனத்தில் இல்லை என்ற நிலை. நவம்பர் மாதம் இதன் எண்ணிக்கை 91 என்றானது) , அடிப்படைக் கல்வி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை. இப்படி தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்துவிட்ட ஒருவன் அதற்குக் காரணமான ஒருவனை எதிர்த்துப் போராடுவதைத்தான் ஊடக வியாபாரிகள் தீவிரவாதம் என்கின்றனர். நம்மூர் ஊடகங்களும் அதனை அப்படியே வாந்தி எடுக்கின்றன.
ஹமாஸ் போன்ற இயக்கங்களைத்தானே அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். இவர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள்தானே என்ற கேள்வியும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. ஹமாஸ் இயக்கம் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லைதான். அநீதியாக எழுதி வைத்துக் கொண்டு, இதுதான் அமைதி ஒப்பந்தம் என்றால் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? அநீதியாக இருந்தாலும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட யாசிர் அரஃபாத்தை இவர்கள் எப்படி நடத்தினார்கள், எத்தனை முறை அவரை வீட்டுச்சிறை வைத்தனர். மருத்துவத்திற்காகக் கூட வெளிநாடு செல்ல பல தடைகளை ஏற்படுத்தினர் என்பதை ஏனோ இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, பாலத்தீனத்தை தனிநாடாக இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை. பாலத்தீன அதிபர் என்று பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவரை வளைகுடாவின் ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் புழங்கினாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்கள், ஆட்சியாளர்கள் பாலத்தீன் அதாரிட்டியின் தலைவர் என்றே புழங்குகின்றனர். இந்த அத்தாரிட்டி சிறிய அளவில் காவல்காரர்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம். இராணுவம் போன்று ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட இடத்தில் நிகழும் கலவரங்களை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த வேண்டும், யூதர் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை சிறிய அளவிலான காவல்காரர்களைக் கொண்டு நிறுத்த வேண்டும் என்பதுதான் இந்த பாலத்தீன அதாரிட்டியின் முழுமுதற்கடமை.

ஆனால், இதுவரை கலவரக்காரர்களை ஒடுக்க முடியவில்லை. எனவே பாலத்தீனர்களுக்கு தங்களுடைய நாட்டை ஆளும் தகுதி இல்லை என்கிறார் டோணி பிளேயர்.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருப்பது பாலத்தீனம் எனும் தனி நாடு அமைவது இல்லை; மாறாக அந்த நாட்டை ஆளும் தகுதியுடையவர்களாக பாலத்தீனியர்கள் இருப்பார்களா என்பதுதான். இந்த இருநாடுகளும் இருக்க வேண்டுமானால் முதலில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் . .... என்று அவர் கூறுகிறார்.
"இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்று கூறுபவர்கள் அந்த உத்தரவாதத்தை எவரிடம் கேட்கின்றனர்? உத்தரவாதம் கொடுக்கக் கூடிய சக்தி அவர்களிடம் இருக்கிறதா? செல்வந்தர் ஒருவரின் கடனுக்கு ஏழையிடம் உத்தரவாதம் கேட்பது போல் இருக்கின்றது இவரின் இந்த வாதம்.

ஒரு அரசு செயல்படுவதற்குரிய அடிப்படை வசதிகள் எதனையுமே வழங்காமல் அல்லது தாங்களாகவே அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முனையும்போதெல்லாம் அவற்றிக்கு தடைபோட்டுவிட்டு இவர்கள் நாட்டை ஆளும் தகுதி உள்ளவர்களா? என்று கேட்பது இவர்களின் மனவக்கிரத்தையே காட்டுகிறது.
அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்களை எதிர்த்து, தங்களுக்கு அதுபோன்ற வெளநாட்டு உதவிகளோ, பண வசதியோ இன்றி தங்கள் சொந்த நாட்டிலேயே தங்களுடைய அறிவையும் மிகவும் குறைவான செல்வத்தையும் பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்கியும், சில போது இயற்கை வழங்கிய கல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வருகின்ற இந்தப் போராளிகளைப் பார்த்துத்தான் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர்.

பாலத்தீன மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, அநீதிகளையே அமைதி ஒப்பந்தம் என்று ஏற்கச்சொல்லி, மறுத்தால் தீவிரவாதி என்றெல்லாம் ஏகடியம் பேசி வல்லான் வகுத்ததே சட்டம் என்று ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக் கொள்ளும் மேற்கத்திய, யூதர்களைப் போன்றே நம்நாட்டிலும் வல்லாதிக்க வெறிகொண்ட பார்ப்பன சித்தாந்த எதிரிகளுக்கு அல்லது அவர்களைவிட எளியோருக்கான அத்தனை வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு/ மறைத்துவிட்டு திறமை இல்லை; அதனால்தான் பின்தங்கியுள்ளனர் என்று கூறுவர்.

சுதந்திரத்திற்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளாகவும் சுதந்திரத்திற்குப் பின் அறுபது ஆண்டுகளாகவும் சுரண்டிக் கொண்டிருக்கும் இவர்கள், மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.

என்னே ஒற்றுமை! பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment