Thursday, September 2, 2010

மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான இரண்டு கொள்கை முடிவுகளை வரவேற்கிறோம்: கே. எம். ஷரீப்.

பெங்களுரு செப் 1,2010: வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் ஓட்டளிப்பதற்கு வகை செய்யும் மசோதாவையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ல் சாதியையும் சேர்த்து சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய அரசின் முடிவையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வரவேற்கிறது .

இந்த மசோதா வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயரையும் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்கிறது . வெளிநாட்டில் இருக்கும்போது ஓட்டளிக்க இந்த மசோதா வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் கூடிய விரைவில் இன்டர்நெட்டின் மூலம் ஓட்டளிக்கும் வழிமுறையை அரசாங்கம் கருதிவருகிறது என்ற சட்ட அமைச்சரின் ஆலோசனை வரவேற்கப்படவேண்டியது அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகளில் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவான "சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு " மிகவும் துணிச்சலான முடிவு . இது சமூக நீதி யையும் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் தகவல் களஞ்சியமாக இருக்கும்.

இது முழுமையாக வெற்றி பெறவும் சாதி கணக்கெடுப்பை உரிய முறையில் சரியாக பயன்படுத்தவும் இதனை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புடன் சேர்த்து உடனே எடுக்குமாறும் பயோமெட்ரிக் குடன் சேர்க்க வேண்டாம் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment