Tuesday, August 24, 2010

ஈரானின் அணுசக்தித் திட்டம்: பயங்கரவாத இஸ்ரேல் கடும்எதிர்ப்பு.

டெல்அவீவ்,ஆக23:ஐ.நாவின் தீர்மானங்களையும்,சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் எச்சரிக்கையையும் புறக்கணித்த ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஏற்க இயலாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது.ஈரானின் முதல் அணுசக்தி நிலையம் கடந்த சனிக்கிழமை செயல்படத் துவங்கியுள்ள சூழலில்தான் இஸ்ரேலின் இவ்வறிக்கை.

மேற்காசியாவில் அணுகுண்டு வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேலாகும்.ஈரான் அணுசக்தித் திட்டங்களிலிருந்து பின்வாங்க சர்வதேச சமூக அதிக நிர்பந்தங்களை செலுத்த வேண்டும் என இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யோஸி லெவி கோரியுள்ளார்.

அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை இஸ்ரேல் கையெழுத்திடவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment