Wednesday, February 23, 2011

கைது பயம்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம்!!

புதுடெல்லி,பிப்.24:இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து கைது பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம் தேடியுள்ளனர். குண்டு வெடிப்புகளுடன் தங்களை தொடர்புப் படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டு மெனக்கோரி ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்க பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி பிரதமருக்கு எழுதிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.


கடந்த 14-ஆம் தேதி ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு வருகைப்புரிந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கு என்ன பதிலை கூறியது என்பது தெரியவில்லை. பயங்கரவாதத்துடன் ஆர்.எஸ்.எஸ். ஸை தொடர்புபடுத்தக் கூடாது எனவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடைச் செய்யக்கூடாது எனவும் ஜோஷி அக்கடிதத்தில் பிரதமரிடம் மன்றாடியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு எதிராக அவ்வியக்கத்துடன் தொடர்புடையவர்கள் அளித்த வாக்குமூலத்திற்கு எவ்வித மதிப்பும் அளிக்கக்கூடாது. இதனை சட்டரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலம் கசிந்ததைக் குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் கடிதத்தில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. விசாரணை விபரங்களை பூரணமாக ரகசியமாக பாதுகாக்க வேண்டும். இந்திரேஷ் குமாருக்கோ அல்லது வேறு ஏதேனும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருக்கோ குண்டு வெடிப்புகளில் பங்கில்லை எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மலேகான், அஜ்மீர், ஹைதராபாத் ஆகிய குண்டு வெடிப்புகளின் விசாரணையை பிரதமர் கண்காணிக்க வேண்டும். ஹிந்து அமைப்பு என்பதனால் மட்டும் அபினவ் பாரத்தை ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்புப்படுத்தக் கூடாது. தேசத்தை கட்டி உயர்த்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் லட்சியம். இக்காரியத்தில் முன்னாள் பிரதமர் மறைந்த லால்பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். ஸை பாராட்டியுள்ளார். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment